Wednesday, October 22, 2003

மணிஷங்கர் அய்யர் - ஜெயலலிதா

இன்றைய தினமலர் செய்தியில் மணிஷங்கர் தான் நாகப்பட்டிணம் கூட்டத்தில் ஜெயலலிதாவிடம் என்ன சொன்னேன் என்பதைப் பற்றி சொல்லியிருக்கிறார். "தொகுதி முன்னேற்றம் பற்றிய கூட்டத்தை அரசியலாக்கி விட்டீர்கள், நாய் போல் நாம் இங்கே சண்டை போட்டுக் கொள்ள வேண்டுமா?" என்றுதான் தான் கேட்டேன் என்கிறார். ஜெயலலிதாவோ தான் மணிஷங்கர் என்ன சொன்னார் என்பதைச் சொல்ல மாட்டேன் என்று சொல்லி விட்டார்.

காங்கிரஸ்ஸின் இளங்கோவன் கடைசியாக உண்மையை ஒப்புக் கொண்டு விட்டார். காமராஜர் ஆட்சியைக் கொண்டுவர இனியும் [மோகன்தாஸ்] காந்தி வழியில் போனால் ஒத்து வராது, சுபாஷ் சந்திர போஸ் வழிதான் சரிப்படும் என்கிறார். வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment