ஆன்லைனில் கிடைப்பதில்லை இவை. கடந்த இரு வாரங்களில் சுவாரசியமான விஷயங்கள் பற்றி எழுதியிருக்கிறார். முதலாவது கிடா வெட்டல் பற்றி. இரண்டாவது சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கற்பக வினாயகத்தின் 'மரத்தடிப் பஞ்சாயத்து' பற்றிய கருத்துகள் பற்றி.
மேற்கோள்களோடு இதுபற்றி பின்னர் எழுதுகிறேன்.
குருமூர்த்தி தீவிர ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர். ஸ்வதேஷி ஜாகரண் மஞ்ச் என்னும் அமைப்பில் உள்ளவர். சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்.
சில மாதங்களுக்கு முன்னால் பஜாஜ் குடும்பம் (இரு சக்கர மோட்டார் பைக்குகள், ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் பஜாஜ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிபர்கள்) சொத்துத் தகராறில், அண்ணன் தம்பிகளுக்கிடையே சமரசம் செய்து வைத்தவர். பின்னர் கிராசிம் நிறுவனத்துக்கும், எல் & டி நிறுவனத்துக்கும் இடையேயான தகராறையும் சுமூகமாகத் தீர்த்து வைத்தவர்.
இளவெயில் தியானம்
9 hours ago

No comments:
Post a Comment