Wednesday, December 15, 2004

மின்வெளியில் பாரதி மணிமண்டபம்


கணினி மூலம் பாரதி மணிமண்டபத்தை
மாலன் திறந்து வைத்தல்
11 டிசம்பர் 2004 அன்று (பாரதியார் பிறந்த தினம்) இரவு 7.30 மணியளவில் சிங்கப்பூர் அன்னலக்ஷ்மி உணவகத்தில் மாலன் மின்வெளியில் பாரதி மணிமண்டபத்தைத் தொடங்கி வைத்தார்.

தமிழ் இணையம் 2004 மாநாட்டிற்கு வந்திருந்த பேராளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். பாரதி களஞ்சியத்திற்காக உழைத்த சிங்கப்பூர் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மாலன் இந்த தகவல், படம், ஒலி/ஒளிக் களஞ்சியத்தில் என்னென்ன கிடைக்கும், இப்பொழுதைக்கு என்னென்ன உள்ளது என்பதைப் பற்றி விளக்கினார்.

பாரதி பற்றிய பல்வேறு தகவல்களுக்கிடையே, "தனியொருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" எனும் பாரதியின் பாடல் எந்த சந்தர்ப்பத்தில் எழுதப்பட்டது (நீலகண்ட பிரம்மச்சாரி சிறையிலிருந்து வெளியே வந்து உணவுக்குத் திண்டாடி, பாரதியிடம் கடன் கேட்டதைத் தொடர்ந்து), இந்தப் பாடலை பாரதியே பலமுறை கடற்கரைக் கூட்டங்களில் பாடியது ஆகியவை பற்றியும் பேசினார். தொடர்ந்து சிங்கப்பூர் தமிழ் இளைஞர் இசைக்குழு ஒன்று (பெயர் ஞாபகமில்லை) இந்தப் பாடலை தாள வாத்தியங்களுடன் அருமையான முறையில் பாடிக்காட்டினர். பாடலை இசையமைத்து கற்றுக்கொடுத்தவர் தமிழ் தெரியாத ஒரு மராட்டியர் என்று மாலன் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார்.

செவிக்கு உணவு முடிந்ததும் வயிற்றுக்கும் (சிறிதல்ல, நிறையவே) கிடைத்தது.


பாரதி மண்டபத் திறப்பு விழாவில்
பேரா. ராமகிருஷ்ணா
மறுநாள் தமிழ் இணைய மாநாட்டில் நெகிழ்வான ஒரு நேரம். பெங்களூர் ஐஐஎஸ்சி பேராசிரியர் AG ராமகிருஷ்ணா தலைவராக இருந்து நிகழ்த்திய அமர்வுக்குப் பிறகு கடைசியில் ஒரு செய்தியைச் சொன்னார். அவரது தந்தை, தாயார், (சகோதரரும் உண்டு என நினைக்கிறேன்) பயணம் செய்த கார் விபத்துக்குள்ளாகி தந்தை அங்கேயே இறந்து விட்டார். காரில் அமர்ந்திருந்த தாயார் அதன்பின் மன வேதனையில் உழன்று வந்த சமயம் மாலனின் பாரதி மின்மண்டப முயற்சி தெரிய வந்து இப்பொழுது அதிலேயே மூழ்கி, ஓரளவுக்கு மனதைத் தேற்றிக்கொண்டுள்ளார் என்றார் ராமகிருஷ்ணா. அவ்வகையில் இந்த மாநாடும், அதையொட்டிய பாரதி மின்மண்டபத் திறப்பும் தனக்கு தனிப்பட்ட வகையில் நிம்மதியைத் தருவது என்றார்.

2 comments:

  1. பத்ரி

    இந்த தகவலுக்கு நன்றி.



    By: Suresh Kannan

    ReplyDelete
  2. The volunteers who sang the bharathi songs that day belongs to "Temple of Fine Arts", Singapore.

    ReplyDelete