இந்தச் செய்தி முற்றிலுமாக என் கண்ணிலிருந்து நழுவியுள்ளது. நேற்று தினகரனில் பார்த்தேன். இணையத்தில் தேடிப்பார்த்ததில் செய்தி வெள்ளியன்றே (25 மார்ச்) தி ஹிந்துவில் வந்திருந்தது.
பல பொதுநல வழக்குகள், ரிட் மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி AP ஷா, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் AICTE கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவைதான் என்று கூறியுள்ளார். இதற்குச் சாதகமாக AICTE vs பாரதிதாசன் பல்கலைக்கழக வழக்கில் உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்பை எடுத்துக்காட்டியுள்ளார்.
இது தீர்ப்பல்ல; தலைமை நீதிபதியின் கருத்து மட்டுமே. ஆனாலும் இந்தக் கருத்தின் பலம் தீர்ப்பில் வரத்தான் செய்யும்.
இந்த வழக்கின் விசாரணை நேற்று தொடர்ந்துள்ளது. இன்று எந்தச் செய்தித்தாளிலும் இதுபற்றிய தகவல்கள் எனக்குக் கிடைக்கவில்லை.
முந்தைய பதிவுகள்:
நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பற்றிய செய்திகள்
நிகர்நிலைப் பல்கலைக்கழக பிரச்னை
டைனோஸர்கள் மாமதங்கள்!
13 hours ago

அன்புள்ள பத்ரி,
ReplyDeleteஇன்னைக்கு தினமலர்லே உங்க பதிவுகளைப் பத்தி வந்துருக்கு.
இப்பத்தான் தேன்கூடில் பார்த்தேன்
வாழ்த்துகள்.
நல்லா இருங்க.