தி ஹிந்து செய்தி
மண்டல் கமிஷன் அறிக்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் - மேல்தட்டு - என்று பொருளியல் அடிப்படையிலும் படிப்பு/வேலை ஆகியவற்றின் அடிப்படையிலும் முன்னேறிய சிலரை விலக்கிவிட்டு பிறருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தரப்படவேண்டும் என்று சொல்லப்பட்டது. இதை பின்வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பும் உறுதி செய்தது. National Commission for Backward Classes, தனது இணையத்தளத்தில் இந்த மேல்தட்டை வரையறுத்துள்ளார்கள். இது மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக்குப் பொருந்தும்.
மாநில அரசுகள் அனைத்தும் - தமிழகம் தவிர்த்து - தமக்கே உரிய வரையறையைக் கொண்டுவந்துள்ளன.
இதுவரையில் தமிழக அரசு மட்டும்தான் அதனைச் செய்யவில்லை என்றும் இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது என்றும் Voice (Consumer Care) Council என்னும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொதுநலவழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. வாய்ஸ் அமைப்புக்காக வழக்கறிஞர் கே.எம்.விஜயன் வாதாடுகிறார்.
இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Tuesday, September 12, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment