Friday, September 01, 2006

'ஆயிரமாயிரம் ஆண்டுகள்' நூல் வெளியீடு

இன்று மாலை (1-9-2006) 6.00 மணி அளவில் சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் ஈழ எழுத்தாளரான செங்கை ஆழியான் (டாக்டர் கே.குணராசா) எழுதிய குறுநாவல்களின் தொகுப்பாக 'ஆயிரமாயிரம் ஆண்டுகள்' என்னும் நூல், மித்ர வெளியீடாக வெளியிடப்பட உள்ளது.

நூலை கவிஞர் த. பழமலய் வெளியிட, நான் பெற்றுக்கொள்கிறேன்.

நிகழ்வுக்கு அமுதசுரபி இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். ஆசிரியரைப் பற்றிய அறிமுகத்தை யாழூர் துரை வழங்குகிறார். 'மித்ர' எஸ்.பொ உரையாடுகிறார்.

புத்தகத்தின்மீதான ஆய்வுரைகளை எஸ்.ராமகிருஷ்ணன், பத்மாவதி விவேகானந்தன், பா.ரவிக்குமார், மணா, வைகைச்செல்வி, நிழல் திருநாவுக்கரசு ஆகியோர் படைக்கின்றனர். நூலாசிரியர் செங்கை ஆழியான் ஏற்புரை, பின்னர் நன்றியுரை என்று நீண்ட நிகழ்ச்சி.

ஆயிரமாயிரம் ஆண்டுகள்


செங்கை ஆழியானின் இரண்டு நூல்கள் இணையத்தில் நூலகம் எனுமிடத்தில் மின் நூல்களாகக் கிடைக்கின்றன. முற்றத்து ஒற்றைப் பனை | சித்திரா பௌர்ணமி

3 comments: