அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி, உச்ச நீதிமன்றம் [தமிழக] அரசு ஊழியர் வேலை நிறுத்தம் பற்றிய தீர்ப்பு பற்றி தன் கருத்துக்களைக் கூறுகையில் தேவையில்லாமல் ஒரு சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறது என்கிறார். முக்கியமாக அரசு ஊழியர்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட எந்தவித நியாயமான உரிமையும் இல்லை என்று சொல்லியிருப்பது தேவையற்றது, மற்றும் புரிந்துகொள்ள முடியாதது என்கிறார். இது அவரது சொந்தக் கருத்து என்றே தோன்றுகிறது. மத்திய அரசு தலையிட்டு தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் உரிமையை - முக்கியமாக கூட்டு சேர்ந்து சம்பளத்திற்காகப் பேரம் பேசுவது (collective bargaining), தன் உரிமைகளுக்காக [தேவையான] வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது (industrial action, striking) போன்றவை - நிலைநாட்டுமா என்பது புரியவில்லை. மத்திய சட் அமைச்சர் அருண் ஜெயிட்லி இதுவரை கருத்து எதுவும் கூறவில்லை. பிரதமர், மற்றும் துணைப்பிரதமரும் கருத்தொன்றும் கூறவில்லை.
மணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் !
3 hours ago
No comments:
Post a Comment