Monday, August 11, 2003

சீரணி அரங்கம் பற்றிய தமிழக அரசின் விளக்கம்

மிகவும் புதிரான, புதிதான விளக்கம் தமிழக அரசிடம் இருந்து வந்துள்ளது. சீரணி அரங்கத்தில் கூட்டம் கூடுவதால் போக்குவரத்து நெரிசல் என்று மாநகராட்சி மற்றும் காவல்துறை கூறியனராம்; அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்துவிடும் அற்றுப்போன நிலையில் உள்ளது என்று பொதுப்பணித் துறையினர் கூறினராம். உடனே இரவோடு இரவாக உடைக்க வேண்டிய கட்டாயம் என்ன?

இந்த விஷயத்தை வெளியே தெரியப்படுத்தி அதன் பின்னர் செய்திருந்தால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராதே? ஏன் இந்த மூடிமறைத்தல்? இரகசியக் கட்டிடம் இடித்தல் எல்லாம்?

இடித்தல் நடந்துமுடிந்து விட்டது. இனி அங்கு ஏதும் கட்டப்படப் போவதில்லை. இது சிறு விஷயம்தான். ஆனால் நடைமுறையைப் பார்க்கும் போது அதிர்ச்சி தரக்கூடியது. இந்த அரசு வந்தது முதல் தன்போக்குக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் செய்து வருகிறது. தட்டிக்கேட்க ஆள் இல்லை, தட்டிக்கேட்டாலும் அதைப் பற்றிக் கவலைப் படப்போவதில்லை என்ற சர்வாதிகாரத்தனம்தான் தெரிகிறது. இந்தமாதிரியான அதிகார துஷ்பிரயோகம் மிகவும் கண்டிக்கத்தக்கது, இதுபோன்ற முதல்வர்கள் மீண்டும் வரக்கூடாது. பதவியிலிருந்து தூக்கி எறியப்படவேண்டும்.

1 comment:

  1. Sir,

    even current cm is like this.
    how to actually impeach the government for corruption and non-efficiency?

    and also, how do i censure the govt/cm for some in-efficient action?

    ReplyDelete