Tuesday, June 29, 2010

நோய்க்கூறு மனநிலை

கையேந்திக் கேட்பது என்பது ஒரு நோய்க்கூறு மனநிலை. அதுவும் அந்தப் பொருளால் தனக்கு ஏதேனும் பயன் உள்ளதா என்பதைப் பற்றி துளியும் புரிந்துகொள்ளாது, வேண்டும், வேண்டும், கொடு, கொடு என்று பறப்பது நோய்க்கூறு மனநிலை. தனக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டார்கள் என்றபின்னும் மேலும் மேலும் கொடுங்கள் (என் மாமனுக்கு ஒண்ணு, என் மச்சானுக்கு ஒண்ணு, என் கூட்டாளிக்கு ஒண்ணு) என்று கையேந்துவதும் நோய்க்கூறு மனநிலைதான். கீழே வைத்துள்ள பொருள்களை உரியவர் அனுமதி இன்றி எடுத்துச் செல்வது நோய்க்கூறு மனநிலை. யாரும் இல்லாத நிலையில் பொருளைத் திருடுவது அதீத நோய்க்கூறு மனநிலை.

கோவை செம்மொழி மாநாட்டில் இவை அனைத்தையும் பார்த்தேன்.

இணையக் கண்காட்சியில் நாங்கள் வாடகைக்கு எடுத்து வைத்திருந்த இரண்டு கணினிகளில் ஒன்றைக் களவாடி விட்டார்கள். இரவு கண்காட்சி முடிந்து, அடுத்த நாள் காலையில் வண்டியில் கட்டி எடுத்துப்போவதற்குமுன்னதாகவே களவாடிவிட்டார்கள். NHM Writer, NHM Converter அடங்கிய 3,000 சிடிக்களை வைத்திருந்தோம். அதில் 1,000-ஐ விநியோகித்திருந்தோம். காலையில் பார்த்தால் 700-தான் மீதம். சுமார் 1,300 சிடிக்கள் அடங்கிய பெட்டிகளை எடுத்துப்போய்விட்டார்கள். அதனை ஆளுக்கு ஒன்றாக கணினி வைத்திருப்போரிடம் சேர்த்தார்கள் என்றால் பயன் கொண்டதாக இருக்கும்.

தமிழ் இணைய மாநாட்டு வளாகத்தில் இந்தியத் தமிழர் முதல் வெளிநாட்டுத் தமிழர் வரை, படித்த பேராசிரியர்கள் முதல் பாமர துப்புறவுத் தொழிலாளர் முதல், கையேந்தி கையேந்தி, இலவசமாக அதைக் கொடு, இதைக் கொடு என்று பறக்காவட்டியாகப் பறந்து அலைந்ததைப் பார்க்க வெட்கமாக இருந்தது. செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த பலர் அடித்துப் பிடித்துக்கொண்டு கிடைத்ததையெல்லாம் சேகரிக்க விரும்பியதன் பலனாக, தமிழ் இணைய மாநாட்டுக்கு வந்தவர்களுக்குக் கொடுக்க என்று வைத்திருந்த மாநாட்டுக் கட்டுரைகள், சிடி அடங்கிய பைகளை பாதுகாக்கவேண்டியிருந்தது. இதனால் தமிழ் இணைய மாநாட்டுப் பேராளர்களுக்குக் கடும் கோபம். பெயர்களைப் பரிசீலித்து, கையெழுத்து போட்டு வாங்குங்கள் என்றால், பலர் பொய்க் கையெழுத்துகளைப் போட்டு பைகளைத் திருடிச் சென்றனர்.

யாரோ புண்ணியவான், Coimbatore என்ற பெயரில் ஒரு Coffee-Table வண்ணப் புத்தகத்தை அச்சிட்டு விநியோகிக்கச் சொல்லிக் கொடுத்திருந்தார். தமிழ் இணைய மாநாட்டுப் பேராளர்களுக்காக சுமார் 450 பிரதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் வந்திருந்தவர்களுக்குக் கொடுக்கும் முன்னால் அங்கும் இங்கும் செல்பவர்கள் உள்ளே நுழைந்து ஆளுக்கு இரண்டு, மூன்று என்று அள்ளிக்கொண்டு சென்றனர். ‘கொங்கு வரலாறு’ என்ற பெயரில் யாரோ அடித்துத் தந்த புத்தகத்துக்கும் இந்தக் கதிதான். தைரியமாக கண் பார்வைக்கு முன்னால் தெனாவட்டாக வந்து அள்ளி எடுத்துச் செல்பவர்கள். அங்கும் இங்கும் ஓரப்பார்வை பார்த்து, சடாரெனக் குனிந்து அள்ளிக்கொண்டு செல்பவர்கள். இரவு யாரும் இல்லாதபோது திருடிச் செல்பவர்கள். பத்திரிகைக்காரர்களுக்கு என்று நான் எடுத்து வைத்திருந்த புத்தகங்களும் மறுநாள் காலை களவாடப்பட்டிருந்தன.

கொடுக்கப்பட்டிருந்த பைகளில் கண்ட கண்ட பொருள்களையும் வைத்து, முறைகேடாகப் பயன்படுத்தியதில், பை வார் பிய்ந்துபோக, அவற்றை மாற்றித்தாருங்கள் என்று வந்தவர்கள் பலர். எப்படி மாற்றித்தர முடியும் என்று சிறிதேனும் யோசித்தார்களா? இது என்ன, விட்கோவில் காசு கொடுத்து வாங்கிய பொருளா, மாற்றித்தர?

ஊரில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு நான்கு பைகள், மெமெண்டோக்கள் வேண்டும் என்று சொல்லிவைத்து, அதிகாரம் கொண்டோரிடமிருந்து வாங்கி எடுத்துக்கொண்டுபோன கண்ணியமான பதவிகளில் இருப்போர், பத்திரிகைக்காரர்கள். அழகிரி சொன்னாரு, கனிமொழி சொன்னாங்க, ஸ்டாலின் பெண்டாட்டி கேட்டாங்க என்று 15, 15 பைகளாக வந்து எடுத்துச் சென்ற போலீஸ்காரர்கள்.

எண்ணற்ற சால்வைகள், எண்ணற்ற மெமண்டோக்கள் (கண்ணாடிப் பெட்டகத்துக்குள் அடைக்கப்பட்ட, செப்பில் வெள்ளி(?)யால் அடிக்கப்பட்ட திருவள்ளுவர்கள்) என அனைத்தும் ஆங்காங்கு அவரவர்களால் முடிந்தவரை அள்ளப்பட்டன. வைத்துக்கொண்டு என்ன சாதனை செய்துவிடப் போகிறார்கள் என்று புரியவில்லை.

செம்மொழி அந்தஸ்து தமிழுக்கு வருகிறதோ இல்லையோ, பிச்சைக்காரன் அந்தஸ்து தமிழனுக்கு என்றுமே இருக்கும்.

[இந்த ரகளைகள் அனைத்தையும் நேரில் கண்ட காரணத்தால் ஒரு துண்டு சோவனீர்கூட எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதில் முடிவாக இருந்து, எனக்குக் கிடைத்தவற்றையெல்லாம் தானம் தந்துவிட்டேன்.]

95 comments:

  1. பயிலரங்கில் நான் வைத்திருந்த குறிப்பேடு வந்திருந்த பொதுமக்களால் எடுத்துச்செல்லப்பட்டுவிட்டது.இருமுறை என்னோட டேட்டா கார்டு திருடு போகும்நிலை இருந்தது.நான் சற்று உஷாராக இருந்ததால் தப்பித்தது .

    நான் படிப்பதற்காக வாங்கி வைத்திருந்த தினசரி களை கேட்டு வாங்கி சென்றனர். மேஜையில் இருந்த அனைத்தையும் எடுத்து சென்றனர். அவ்வளவு ஏன் நான் சாப்பிட மேஜையில் வைத்திருந்த நேந்தரங்கா சிப்ஸை கூட விட்டு வைக்கவில்லை.:(

    ReplyDelete
  2. இது ஒரு பரம்பரை நோய் என்று அயர்லாந்தை சேர்ந்த அய்யாசாமி கண்டுபிடித்துள்ளார். கி.மு 200 முதல் கி.மு 300 வரையிலான காலத்தில் திராவிட இனத்தில் (தமிழினம்னே சொல்லலாமா?) இந்த நோய் தோன்றியிருக்கலாம் என்று வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.

    ReplyDelete
  3. அரவிந்தன்: இன்னும் பலவற்றை நான் எழுதவில்லை. சாப்பாட்டு அரங்கில், தேநீர் வழங்கும் இடத்தில் நடந்தவை போன்ற அசிங்கங்களை எங்கும் பார்க்கவில்லை. மாடரேஷன் என்பதே இல்லாமல், வாங்கி வாங்கிச் சாப்பிட்டது; எக்கச்சக்கமாக தட்டில் நிரப்பிக்கொண்டு வீணடித்துக் குப்பையில் போட்டது...

    எத்தனை எத்தனையோ பென் டிரைவ்கள் களவாடப்பட்டன. இலவசமாகப் பயன்படுத்த வைத்திருந்த கணினிகளின் ஆப்டிகல் மவுஸ்களைத் ‘தள்ள’ முயற்சி செய்தனர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

    இலவசம் என்ற வார்த்தை எந்த அளவுக்கு நம் மக்களை ஆட்டிவைக்கிறது! திருடுதல் என்பது எவ்வளவு ஈனத்தனமான செயல் என்பதை எப்படி அறியாமல் இருக்கிறார்கள்? ஐயன் திருவள்ளுவன் என்று வாய் கிழியப் பேசுவது இதற்காகத்தானா?

    தமிழர்களின் ஒட்டுமொத்தக் கயவாளித்தனத்தை ஒரே இடத்தில் காண உதவியது ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’.

    ===

    ஆனால் இவற்றையும் மீறி பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. அவைபற்றி எழுதுவதற்குமுன் கோபத்தைத் தணித்துக்கொள்ளவே இந்தப் பதிவு.

    ReplyDelete
  4. இதுமாதிரி ஏன் எனக்கு எந்த ஒரு விஷயமும் நடக்கவில்லை என்று தெரியவில்லை :-)

    மற்றபடி ஆஞ்சநேயர் கோயிலில் மிளகுப் பொங்கல் கொடுத்தால், அதை அடித்துப் பிடித்து வாங்கும் மனநிலையில் இருக்கும் சராசரித் தமிழன்தான் நானும் என்ற முறையில் உரிமையோடு ஒன்றை கேட்கிறேன். “தயவுசெய்து மாநாட்டு சிறப்பு மலர் இருந்தால் கொடுத்து உதவுங்கள்”. எனக்கு கொடுக்கப்பட வேண்டிய மாநாட்டு மலரை யாரோ ஒரு புண்ணியவான் அபேஸ் செய்துவிட்டாராம் :-(

    ReplyDelete
  5. இலவசமாய்ப் பெறுவதை இமாலய சாதனையாய் கருதும் பிச்சைக்காரத் தமிழன் :-(

    ReplyDelete
  6. //எக்கச்சக்கமாக தட்டில் நிரப்பிக்கொண்டு வீணடித்துக் குப்பையில் போட்டது...//

    உலகில் எங்கிருந்தாலும் இந்தியன் இப்படிதான்

    ReplyDelete
  7. உங்கள் கோபம் தணிந்தது என்று நினைக்கிறேன்.

    NHM Converter and Writer போன்ற ஒரு மென்பொருள் செய்த பிறகு உங்களுக்கு கணினியில் தமிழ் எழுத்துருக்கான அடிப்படை என்ன என்று தெரிந்திருக்கும். அது தொடர்பான ஒரு கேள்வி. உலகத்தமிழ் மாநாட்டின் ஒரு தீர்மானமாக தமிழ் எழுத்துக்களில் மாற்றம் கொண்டு வருவதாக அறிந்தேன். இதன் தேவை மற்றும் நல்லது கெட்டதுகளை ஒரு பதிவாக போடுவீர்களா?

    ReplyDelete
  8. மாநாடுன்னா அப்டி இப்டின்னு இருக்காத்தான் செய்யும்...சண்டையில கிழியாத சட்ட எங்க இருக்கு? :-) மேலும் இந்தியர்களாக நாம் ஒன்றுபடும் விஷயமல்லவா? தமிழர்களை மட்டும் பிரிப்பது தேசஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கக்கூடியது :-)

    ReplyDelete
  9. அமைச்சர் பூங்கோதை கலந்துகொண்ட ஓர் அமர்விலும் இதேதான் நடந்தது. அமர்வில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு நிச்சயம் அமைதியாக அவரவர் இருக்கையில் அமர்ந்திருங்கள் என்று அறிவிப்பு வெளிவந்த மறு நிமிடமே, எனக்கு எனக்கு என்று அனைவரும் பாய ஆரம்பித்துவிட்டார்கள்.

    எனக்கு அருகில் இருந்தவர், தன் இருக்கையில் வந்து சேர்ந்த பரிசை (மாநாட்டு லோகோவுடன் கூடிய ஒரு மக்) வாங்கி பையில் திணித்துக்கொண்டு, இரண்டு வரிசை பின்னால் அமர்ந்துகொண்டார். அங்கிருந்தும் ஒன்று வாங்கிக்கொள்ள. மங்கி ஜம்ப் அடித்து அடித்து, மூன்று மக் வரை வாங்கியதைப் பார்த்தேன். அதற்கு மேல் அவரைத் தொடரமுடியவில்லை. யாருக்கெல்லாம் கிடைக்கவில்லை, கை தூக்குங்கள் என்று மைக்கில் கத்தியபோது, நம் தலைவர், தன் பையை கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, ஒரு கையை வான் நோக்கி உயர்த்தினார்.

    பழுப்பு கவரில் போட்டு என்னத்தையோ தருகிறார்கள் (தினமலர் நிறுவனரின் வாழ்க்கை வரலாறு) என்பது தெரிந்ததும், அது என்ன, ஏது என்றே தெரியாமல், இரு கைகளையும் ஒரே சமயத்தில் நுழைத்து, இரு பாக்கெட்டுகள் சிலர் அள்ளிக்கொண்டதைப் பார்த்தேன். வெளியில் அத்தை நிற்கிறார்கள் ஐயா என்று சொல்லி இன்னொன்றும் வாங்கிக்கொண்டார்கள். சிலருக்கு, பெரியப்பா நின்றுகொண்டிருந்தார்கள். சிலருக்கு, பெரியப்பாவின் மகனும்.

    அன்லிமிடெட் சாப்பாடு என்றாலும், வயிறு லிமிடெட் அளவில்தான் இருக்கிறது என்பதை மறந்து, கிரேன் வண்டி போல் அள்ளி அள்ளி வாயில் தள்ளிக்கொண்டிருந்தார்கள். கோதுமை பாயசம் நான்கைந்து டப்பா உள்ளே போனதும், வயிற்றைப் பிடித்துக்கொண்டு மாடியில் இருந்து கீழே இறங்கினார்கள். ஐயகோ, அங்கே மலை வாழையும் பீடாவும் அல்லவா அடுக்கி வைக்கப்பட்டிருந்தன! அதனால் என்ன, சட்டென்று பாய்ந்து, ஒன்றிரண்டு பழங்களை கவ்வி, மூன்று, நான்கு பீடாக்களை அள்ளி கையில் பிடித்தபடி, பீடு நடை போட்டுச் சென்றார்கள். கை இடுக்குகளில், அக்வாஃபீனாக்கள்.

    எதுவாக இருந்தாலும் சரி, எனக்கொன்று. எல்லோருக்கும் ஒன்று தருகிறாயா, எனில், எனக்கு இரண்டு தேவை. இரண்டுக்கு மேல் தருகிறாயா, எனக்கு ஒரு பெட்டி. ஒரு பெட்டி இனாமா, எனில் எனக்கு இரு பெட்டிகள். முடிவில்லா சுழற்சி இது.

    என்னிடம் வந்து ஒருவர் கேட்டார். உங்களிடம் பாஸ் இருக்கிறதா? எனக்கு ஓர் உதவி செய்யுங்களேன். அங்கொன்று பெரிதாக கவர் போட்டு தருகிறார்கள். புத்தகம் மாதிரி தெரிகிறது. வாங்கி வந்து ஒன்று தருகிறீர்களா? உங்களிடம் பாஸ் இல்லையா என்று கேட்டேன். இருக்கிறதாம். ஏற்கெனவே இரண்டு வாங்கி வந்துவிட்டாராம். இன்னும் பிரிக்கக்கூடவில்லையாம்.

    இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், இப்படி ஆலாய் பறந்து அகப்பட்டதை வாங்கித் திணத்துக்கொண்ட அத்தனை பேரும் தமிழ் சேவை ஆற்ற பாஸ் வாங்கி வந்த சிறப்புப் பிரதிநிதிகள்.

    வெளியில் இறங்கி நடந்தபோது, வெயில் சுள்ளென்று முகத்தில் அடித்தது. இரண்டு மைல் தூரத்துக்கு மக்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களிடம் பாஸ் இல்லை. மேல் துண்டைத் தலையில் போட்டுக்கொண்டு கால் கடுக்க நின்றுகொண்டிருந்தார்கள்.

    அருகில், முறுக்கு, வறுகடை விற்றுக்கொண்டிருந்தார்கள். தேநீரும் கிடைத்தது. இந்தாப்பா, ஒரு டீ கொடு என்று நெற்றி வியர்வையைத் துடைத்துப்போட்டு விட்டு டிஸ்போசபிள் கப்பைக் கையில் வாங்கி ரசித்துக் குடித்துக்கொண்டிருந்தார்கள். தேநீர், ஐந்து ரூபாய். வறுகடலை, மூன்று ரூபாய். சில்லறையா கொடுப்பா எனறு கேட்டு வாங்கி பையில் போட்டுக்கொண்டார் கடைக்காரர்.

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.

    ReplyDelete
  10. இது தமிழர்கள் நோய் என்று சொல்ல முடியாது. இது ஒரு உலகளாவிய பிரச்சனை. :-) துபாயில் Gitex போனாலும் இதேதான் நடக்கும். களவு என்பதை விட இலவசத்திற்கு அடித்துக்கொள்ளும் ஆட்கள் எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நோய்க்கு மருந்தே இல்லை. நேரடியாக திட்டியிருந்தாலும் கூட தடுத்திருக்க முடியாது. நம்ம ஆட்கள் தோல் கெட்டி ;-).

    ReplyDelete
  11. தமிழ் விக்கி/வலைப்பதிவு/உபுண்டு ஸ்டாலில் தன்னார்வலர் மாணவியின் செல்ஃபோனை அடித்து விட்டார்கள். NHM writer மென்பொருள் அரசு கொடுக்கும் சிடியிலேயே இருக்கிறது என சொன்னாலும் (அதைக் கையில் வைத்துக் கொண்டே) விடாது NHM சிடி வேணும் என்று அடம் பிடித்தவர்கள் ஏராளம். என்ன தர்ரீங்க இங்கன்னு நேரடியாக் கேட்ட நேர்மையாளர்களும் உண்டு.

    ReplyDelete
  12. கேட்கவே ரொம்ப கேவலமாயிருக்கு!

    ReplyDelete
  13. பத்ரி, இத்தனை வருடமாக உங்கள் பதிவை வாசிப்பதில் இத்தனை கோபமாய் ஒரு பதிவை பார்த்த நினைவேயில்லை. என்னடா இது தலைப்பின் தலைப்பே வழக்கத்திற்கு மாறாக இலக்கியத்தனமாய் இருக்கிறதே என்று சந்தேகித்துக் கொண்டே வந்தேன். சாட்டையடி அடித்துள்ளீர்கள்.

    இது தனிநபர்களின் குறையல்ல. ஒட்டுமொத்த சமூகததின் மனநிலையே இதுதான். இலவசம் என்று தெரிந்தால் அது தமக்கு உதவுமா இல்லையா என்று கூட தெரிந்து கொள்ளாமல் வாங்கி நிரப்பிக் கொள்வது. இவ்வாறான பலவிதமான பொது அநாகரிகங்கள் நம்மிடம் உள்ளன. வரிசையில் அமைதியாக நிற்காமல் இடித்துக் கொண்டு முன்னேறுவது, இரண்டரை மணி நேரம் அமர்ந்து பார்த்த சினிமா அரங்கிலிருந்து இரண்டு விநாடிக்குள் வெளியேற முயல்வது .. என்று பல ஒழுங்கீனங்களைச் சொல்ல முடியும். இத்தனை அசிங்கத்தை வைத்துக் கொண்டு நாம் பண்டைய தமிழர் நாகரித்தை சிலாகித்து பேசும் போது சிரிப்புத்தான் வருகிறது. இந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன் என்கிற ஒப்புதலுடன் இதற்காக வெட்கமும் வேதனையும் அடைகிறேன். :-(

    ReplyDelete
  14. இந்து என்றால் திருடன் என்று ஒருவர் சொன்னார்.

    அவர் நடத்திய மாநாட்டில் திராவிடன் என்றால் திருடன் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

    வாழ்க தமிழ்.

    ReplyDelete
  15. தீதும் நன்றும் பிறர் தர வாரா..

    நமது அளவுக்கதிகமான சகிப்புத்தன்மையே இவற்றிற்கு காரணம்.

    நம் கண் முன்னே, ஒருவன் பொருளையோ, அறிவையோ திருடினால் நாம் அவனை இழுத்துப் போட்டு உதைப்பதில்லை.

    மாறாக “எதற்கு வம்பு” (அல்லது) “வேறு வேலையை கவனிப்போம்” போன்ற மனப்பான்மையினால் அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறோம்.

    உங்களுக்கும், எனக்கும் சமீபத்தில் சில நண்பர்களாலேயே ஓர் ஏய்ப்பு நடந்து முடிந்திருக்கிறது.

    நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்.

    நேரம் வரும்போது, நான் உதை (உதை நேரடியானதாக இருக்க வேண்டியதில்லை) கொடுக்கப் போகிறேன்.

    ReplyDelete
  16. தமிழன் ஒரு அமைதியான தீவிரவாதி
    வழுக்கி விழ்ந்தவனை பார்த்து சிரித்து பழகியவர்கள்.
    நாட்டை விட்டு நாட்டை தாண்டினால் தான்
    நாட்டு பற்றே வரும்.
    மாநிலத்தை விட்டு மாநிலத்தை தாண்டினால் தான்
    மொழி பற்றே வரும்.
    எப்போதோ படித்த வரிகள் இப்போது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  17. பல நூற்றாண்டுகளாகப் பார்ப்பனீய இந்து மதத்தின் கொடும் பிடியில் சிக்கி உழல்வதாலேயே இத்தகைய மனநோய் தமிழர்களையும் பீடித்துவிட்டது. உடனடியாகத் தமிழர்கள் அனைவரும் இஸ்லாத்தையோ அல்லது கிறிஸ்தவத்தையோ தழுவதன் மூலமே இத்தகைய பிச்சைக்கார மனநிலையிலிருந்து விடுபட முடியும்.

    ReplyDelete
  18. கணினி களவு போனது வருத்தமளிக்கிறது. தமிழ் இணையப் பயிலரங்கில் இருந்த எல்லா பொருள்களையும் ஒவ்வொரு நாளும் மறக்காமல் வீட்டுக்கு எடுத்து வந்தோம். ஒரே ஒரு பெண்ணின் செல்பேசி காணாமல் போனது. ஆனால், பலரும் கூடும் இடத்தில் இது எதிர்பார்க்கக்கூடியது தான்.

    ஆய்வரங்குக்குள்ளேயே இத்தனை குளறுபடிகள் நடந்திருப்பது வேதனையாக இருக்கிறது :(

    ReplyDelete
  19. தமிழ் வாழ்க !
    தமிழ் நாட்டில் ஒரு மனிதனுக்கு 3 வேலை சாப்பாட்டுக்கு வழி செய்யுங்கள் .பிறகு தமிழ் செம் மொழி மாநாடு கொண்டாடலாம்
    இங்கே பிச்சை எடுப்பவனும் தமிழன் தான் ! செம்மொழி மாநாடு கொண்டாடுபவனும் தமிழன் தான் ! .
    தமிழன் உழைப்பவன் தான் நீங்கள் தான் இலவசமாக கொடுத்து கொடுத்து சோம்பேறியாக மாற்றி விடாதீர்கள் .
    இன்னும் பத்து வருடங்களில் இப்படியே போனால் கலாம் கனவு காணமல் போய்விடும் !
    தமிழனே விழித்து கொள் !

    ReplyDelete
  20. ”திருடராய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது” என்பது தான் நினைவிற்க்கு வருகிறது.

    ’ஆர்னால்ட்’ பாலா

    ReplyDelete
  21. படிக்கும் போதே குமட்டுகிறது.

    இ.பா சிறுகதை வெளியீட்டிலும் இதக் கண்டேன். 600 ரூ புத்தகம் 150 ரூபாய்க்கு என்றதும் பல பேர் 3-4 செட் வாங்க முண்டி அடித்தனர். ஆளாளுக்கு இப்படி வாங்கினால் பதிப்பாளருக்கு எப்படிக் கட்டுபடியாகும்? Subsidy கொடுத்தவர் நிலை என்னாவது?, என்றெல்லாம் யாரும் எண்ணியதாய் தெரியவில்லை. அப்படி வாங்கியவர்கள் எல்லாம் புத்தகத்தைப் படித்தால் சரி என்று நினைத்துக் கொண்டேன்.

    ஜி.என்.பி நூற்றாண்டு மலர் வெளியிட ஏனோ ஜி.கே.வாசனை அழைத்திருந்தனர். நூல் வெளியானதும் எக்கெச்செக்க வெள்லை வேட்டிகள் தனக்கும் ஒரு ஓசி புத்தகம் வேண்டும் என்று கிட்டத்தட்ட மிரட்டி வாங்கிப் போனது.

    பாவம் பதிப்பித்த ஜி.என்.பி குடும்பத்தினர். அவசரமாய் கொடுத்துவிட்டு அமைதியாய் புலம்பிக் கொண்டிருந்தனர்.

    பத்திரிக்கையைச் சேர்ந்தவர்கள் என்று கூறி 15 பேருக்கு மேல் புத்தகம் வாங்கி சென்றனராம். எந்த பத்திரிகையோ, ஆண்டவனுக்கே வெளிச்சம்.

    ஓட்டே ஓசி வாங்கித்தானே போடுகிறோம். இதுவும் இந்தியக் கலாசாரத்தின் ஒரு பகுதி என்று எடுத்துக் கொள்ள வெண்டியதுதான் என்று நினைக்கிறேன்

    லலிதா ராம்

    ReplyDelete
  22. //கீழே வைத்துள்ள பொருள்களை உரியவர் அனுமதி இன்றி எடுத்துச் செல்வது நோய்க்கூறு மனநிலை. யாரும் இல்லாத நிலையில் பொருளைத் திருடுவது அதீத நோய்க்கூறு மனநிலை.
    //

    :-))

    பத்ரி அப்படியே கண்ணாடியில் உங்களையும் பார்த்துக் கொள்ளவும்.


    அட்டைப்படங்கள் இணையத்தில் எடுத்தது, சினிமாவை திரையிட்டு வந்தது என்று எல்லாம் நீங்கள் செய்யும்போது எந்தவித குற்றவுணர்ச்சியும் இன்றி செய்தீர்கள்.

    பெருமையாக பதிவில் திரைப்படம் போடுவோம் என்று விளம்பரப்படுத்தியே செய்தீர்கள்.

    அது உங்களுக்குத் தவறாகத் தரியவில்லை. யாராவது சொல்லும்வரை... இல்லையா?

    **

    அது போலத்தான்... பலருக்கு தாங்கள் செய்வது தவறு என்றே தெரிவது இல்லை ...

    தவறு என்று தெரிந்தபின் அல்லது மனப்பூர்வமாக உணர்ந்தபின் திருந்திவிடுவார்கள். ஆனால் முதலில் தவறு என்று அவர்களைப் புரியவைப்பதில் இமாலயச் சிக்கல்.

    அப்படியே புரிய வைத்தாலும் இதெல்லாம் ஒரு விசயமா என்று கூமுட்டை கோவிந்தசாமியாக "அஞ்சு பைசா திருடறது தப்பா!" என்று கெட்டுக் கொண்டு நியாயம் கற்பித்துக் கொள்ளலாம்.

    .

    ReplyDelete
  23. கல்வெட்டு, உங்களை எதிர்பார்த்தேன். நன்றி.

    ReplyDelete
  24. ஆம் பத்ரி, நானும் நீங்கள் இப்படிச் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். :-)

    மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பது அடிப்படையான ஒரு மன நிலை. அதில் நீங்களும் விதிவிலக்கல்ல.

    பல விசயங்கள் யாருக்கும் தவறு என்றே தெரிவது இல்லை (நான் உட்பட) அடுத்தவர் சொல்லும் வரை.
    ஆனால் சுட்டிக் காட்டப்பட்டாலும் ஏற்காமல் கோவிந்தசாமித்தனமாக ஜால்சாப்பு சொல்வதைத்தான் ஏற்கமுடியவில்லை.

    ReplyDelete
  25. செம்மொழி அந்தஸ்து தமிழுக்கு வருகிறதோ இல்லையோ, பிச்சைக்காரன் அந்தஸ்து தமிழனுக்கு என்றுமே இருக்கும்.

    படித்து முடித்ததும் லேசாக சிரிப்பு வந்தது. ஆனால் கீழே உள்ள விசயத்தை படித்து முடித்ததும் அறையே அதிரும்படி சிரித்துக் கொண்டு இருக்கின்றேன்.

    அவ்வளவு ஏன் நான் சாப்பிட மேஜையில் வைத்திருந்த நேந்தரங்கா சிப்ஸை கூட விட்டு வைக்கவில்லை.:(.................................
    தமிழர்களின் ஒட்டுமொத்தக் கயவாளித்தனத்தை ஒரே இடத்தில் காண உதவியது ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’.

    நீங்கள் எப்பொழுதாவது இதைப் போன்று பார்ப்பீர்கள் போல?. அதனால் இந்த கோபம்........

    அடுத்தமுறை பழகிப்போயிரும்..........
    பக்கத்து வீட்டு காரங்க வீட்டுக்குள் வந்து இறங்கியதுமே ஒவ்வொருவரும் என்னன்ன கொண்டு வந்தாங்கன்னு பார்த்துக்கிட்டு இருந்தாங்க. எனக்கு அப்ப புரியல..... மாநாட்டுல என்ன கிடைக்கும்ன்னு நெனைச்சேன். ஆனால் இதை படித்த பிறகு தான் ஒவ்வொன்னா புரியது.........


    அங்கிருந்தும் ஒன்று வாங்கிக்கொள்ள. மங்கி ஜம்ப் அடித்து அடித்து, மூன்று மக் வரை வாங்கியதைப் பார்த்தேன். அதற்கு மேல் அவரைத் தொடரமுடியவில்லை. யாருக்கெல்லாம் கிடைக்கவில்லை, கை தூக்குங்கள் என்று மைக்கில் கத்தியபோது, நம் தலைவர், தன் பையை கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, ஒரு கையை வான் நோக்கி உயர்த்தினார். ..............


    அன்லிமிடெட் சாப்பாடு என்றாலும், வயிறு லிமிடெட் அளவில்தான் இருக்கிறது என்பதை மறந்து, கிரேன் வண்டி போல் அள்ளி அள்ளி வாயில் தள்ளிக்கொண்டிருந்தார்கள்.

    மருதன் இதை அடிக்கக்கூட முடியல. சிரிச்சு வயிறே புண்ணாப் போகுது..........

    பத்ரி நீங்க கோபத்தோடு ஆதங்கமாய் எழுதிய விசயங்கள் எனக்கு கோபம் வருவதை விட ரொம்ப நேரம் சிரிக்க தான் வைத்தது. மன்னிக்கவும். ஆனால் நாகராஜ் சொன்னது தான் மொத்ததிலும் சரியானது.

    நமது அளவுக்கதிகமான சகிப்புத்தன்மையே இவற்றிற்கு காரணம்.

    நம் கண் முன்னே, ஒருவன் பொருளையோ, அறிவையோ திருடினால் நாம் அவனை இழுத்துப் போட்டு உதைப்பதில்லை.

    ரொம்ப மகிழ்ச்சி உங்களின் இந்த பதிவுக்கு.
    இதைப் போலத்தான் பாரா விடம் எதிர்பார்த்தேன்............(?)

    ReplyDelete
  26. தமிழனுக்கு மட்டும் என்று சொல்லாதீர்கள்..இயற்கையாகவே மனிதனுக்கு இந்த குணம் உண்டு. இலவசமாக உலகில் எங்கு எதைக் கொடுத்தாலும் மனிதன் முண்டி அடித்து வாங்கத் தான் செய்கின்றான். இதில் தமிழன் விதிவிலக்கல்ல.

    ReplyDelete
  27. கலவெட்டு,

    காபிரைட், ஃபேர்யூஸ் பற்றிய அறியாமையைக் / குழப்பத்தை செல் ஃபோன் திருடுவதுடன் ஒப்பிடுகிறீர்கள். யாராவது சொல்லும் வரை செல்ஃபோன் திருடுவது தவறு என்று தெரியாத நபரைக் கொஞ்சம் காட்டுங்களேன்.

    ReplyDelete
  28. Sir,
    The irony is that, the organizers of the event, i strongly doubt, would have meticulously embezzled crores of money - OUR TAX MONEY . [Even a loafer on the streets pays tax, when he buys something in the market].

    the citizens, i think, get an opinion that - when they bulk-take something free from govt, they are acting as "robin-hoods", that they have to do to save their asses.

    PS : An addition of a final line in your/ Maruthan's post to indicate a doubt of possible embezzlement by the organizers at the macro level - would have raised the post to the level of a poignant short story.

    Thanks,
    Venkat

    ReplyDelete
  29. ஃபிரியா கொடுத்தா ஃபினாயிலகுட குடிக்கிற ஜனங்க இருக்கிறவரைக்கும் இதெல்லாம் ரொம்ப சகஜம் சார்!பெஸ்ட்! பெ& டேக் இட்

    ReplyDelete
  30. இந்த இடுகையின் தொனியில் தெறிக்கும் ’தமிழன்’ வெறுப்பைக் கண்டிக்கிறேன். இந்த நோய்க்கூறு தமிழனுக்கு என்றும் தனித்துவமானதல்ல. வறுமை/போட்டி சூழலில் உழலும் இந்திய,சீன, ஆசிய/ஆப்பிரிக்க மக்கள் அனைவருக்கும் பொதுவான ‘கிடைத்ததை சுருட்டிக்கோ’ மன்ப்பான்மையின் வெளிப்பாடு. இதைத் தமிழன் மேல் ஏற்றி (’நான் தமிழ் மாநாடுதானே பார்த்தேன்’ என்று சால்ஜாப்பு வரும், அதற்காக உங்களுக்கு சில தமிழனே சப்பைக்கட்டும் கட்டுவான், சிலர் குறுக்கேயும் பாய்வான் என்ன செய்வது எல்லாத்தையும் பார்க்கிறோமே) எழுதுவதில் உங்கள் மேட்டிமைத்தன்மையும் தமிழ் சமூக வெறுப்பும்(தமிழ் வெறுப்பல்ல அப்படியானால் வியாபாரத்துக்கு ஆபத்து என்பது நன்றாகவே தெரிந்ததுதான்) தெரிகிறது. குறைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

    திருட்டை மட்டும் தமிழன் மேல் ஏற்றும் நீங்கள், கோயம்புத்தூர்/ கொங்கு வரலாறு புத்தகங்களை இலவசமாக அளித்ததவர்களை மட்டும் ’யாரோ’ என்று அனானி பின்னூட்டம்போல விளிக்கும் பாணி ஏன்?

    கல்வெட்டின் கேள்விகளை இடக்கையில் புறந்தள்ளிப்போகமுடியாது. //அறியாமையைக் / குழப்பத்தை // அறியாமையா? ஹாஹா... நல்ல ஜோக்.

    இந்த நோய்க்கூறு வருத்தப்பட, தீர்க்கப்பட வேண்டிய ஒன்று, இதை வைத்து தமிழ் சமூகத்தை அளக்கும் உங்கள் நோய்க்கூறும்தான்.

    (டிஸ்கி: அனானி/அல்லக்கை ஆட்டம் ஏதும் நடந்தால் பதில் தர தாமதமாகும்)

    ReplyDelete
  31. மிக அருமையான நகைச்சுவை, எள்ளல் நடை மருதன். இறுதி பாரா ஒரு சிறுகதை. (கதை விட்டுருக்கீங்கன்னு சொல்ல வரலை) விரிவா ஒரு பதிவு எழுதுங்கள் மருதன். சுதிர்.

    ReplyDelete
  32. // அது போலத்தான்... பலருக்கு தாங்கள் செய்வது தவறு என்றே தெரிவது இல்லை ...

    தவறு என்று தெரிந்தபின் அல்லது மனப்பூர்வமாக உணர்ந்தபின் திருந்திவிடுவார்கள். ஆனால் முதலில் தவறு என்று அவர்களைப் புரியவைப்பதில் இமாலயச் சிக்கல். //

    Oh... What an excuse for this dirty behaviour...!!!!!!!

    ReplyDelete
  33. அய்ய..... கேக்கவே அசிங்கமா இருக்கு. இதுதான் தமிழர் பண்பாடா?

    ReplyDelete
  34. u r riled tat all ur ASS-KISSING was wasted

    becos u didnot pick up any award

    ReplyDelete
  35. உன் ஓட்டுக்கு மட்டும் காசு கேக்கும் தமிழா... மற்றதெல்லாம் இலவசமாய் எதிர்பார்க்கிறாயே??? கசாப்புகடையின் கழிவிற்காக நீர் ஊறி வாய்பிளந்து காத்திருக்கும் ஞமலியினும் கேடானதடா உன் செய்கை. இதுதான் எழுமைக்கும் ஞாயிறு போற்றி வந்த திராவிடப் பண்பாடா??? அல்லது எழு ஞாயிறை நம்பியதால் வந்த சிரங்கேறிய புண் பாடா??? கண்மூடி மட்டும் இராதே, மண்மூடிப்போகும் உந்தன் பெருமை.

    ReplyDelete
  36. ஹஹா......மனம் விட்டு சிரிக்கிறேன். இதனை நாள் நான் ஐரோப்பாவில் வசிக்கும் தமிழனா இல்லை தமிழ் பேசும் ஐரோபியனா என்று குழப்பம் இருந்தது...இப்போது எல்லாம் தெளிவு. நான் தமிழ் பேசும் ஒரு ஐரோப்பியன். பத்ரியின் சமீபத்திய சிங்கை மற்றும் மலேசியா பயணங்கள் தமிழரின் பெருமையை பறை சாற்றியிருக்கும். உதாரணம்...லேன்ட் ஆகும் முன்பே பெட்டி படுகையை எடுத்து கக்கத்தில் அடுக்கி கொள்ளும் தமிழன். இன்னும் கொடு இன்னும் கொண்டு என்று சண்டை போட்டு வாங்கி குடிக்கும் தமிழன். ஓசி என்றால் கழிவை கூட உண்ணும் தமிழன். நாகரிகம் என்றால் இது என்னது புது வார்த்தை என்பவன். "விடுங்க பாசு...காலத்துக்கு ஏத்த மாதிரி மாறிக்கனும் என்று பெண்டாட்டியை அனுப்புபவன்..." கலைஞர் சும்மாவா இலவசத்தை அள்ளி வீசுனாரு..." அவருக்கு தெரியும் தமிழனின் யோககியதை!.

    ReplyDelete
  37. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  38. Sir,

    In my previous comment, by "organisers of the event", I did not refer to "INFITT" . I was referring to the state goverment and the ruling party.

    Regards,
    Venkat

    ReplyDelete
  39. I think, the topic is being hijacked here.
    People seem to revel in self-derision.

    Kalvettu's comments - nails the point.

    பலருக்கு தாங்கள் செய்வது தவறு என்றே தெரிவது இல்லை ...

    - people would not have this mentality in a truly welfare state- where people believe the govt is truly altruistic.

    தவறு என்று தெரிந்தபின் அல்லது மனப்பூர்வமாக உணர்ந்தபின் திருந்திவிடுவார்கள். -
    the need of the hour is establishing a social-welfare seeking govt.
    just as an example, some body from INFITT would be apt for the post of IT minister in tamil nadu rather than Poongothai. these kind of actions would instill safe and healthy mentality in citizens.


    Regards,
    Venkat

    ReplyDelete
  40. சூப்பர், இந்த மாதிரி கோபம் நிறைய பேருக்கு வரவேண்டும்.. இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை

    ReplyDelete
  41. //
    செம்மொழி அந்தஸ்து தமிழுக்கு வருகிறதோ இல்லையோ, பிச்சைக்காரன் அந்தஸ்து தமிழனுக்கு என்றுமே இருக்கும்.//

    பத்ரி

    தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வந்து விட்டது. ஆனால் பிற வாழும் இந்திய மொழிகளுக்கு உண்டா என்று தெரியவில்லை

    பிச்சைக்காரன் அந்தஸ்து என்பது நாடு, மதம், மொழி சாராத ஒரு விஷயம் என்பது என் கருத்து

    இலவச தொலைக்காட்சியும் இலவசம் தான் ; பெரிய நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரி விலக்கும் இலவசம் தான்.

    இலவசமாக அளிக்கப்படும் பொருளை பெறுவது பிச்சை என்றால், ஐந்து நட்சத்திர விடுதியில் complimentary break fast சாப்பிடும் அனைவரும் பிச்சைக்காரர்கள்

    இதில் எந்த மொழியாவ்து விதிவிலக்கா

    --

    அது சரி

    துணிக்கடையில் ஜவுளி வாங்கிய பின்னர் அவர்கள் தரும் துணிப்பையை வேண்டாம் என்று திருப்பி தந்தவர்கள் யார் :) :)

    ReplyDelete
  42. திருட்டு என்பது வேறு
    அதை யாரும் நியாயப்படுத்தவில்லை


    ஆனால் இலவசமாக பொருட்களை பெற்றுக்கொள்வது என்பது நடைமுறை தானே

    அதுவும் கருத்தரங்குகளில் இது போல் பொருடகள் விநியோகிக்கப்படுவது புதிதா

    இதில் என்ன பெரிய குறை என்று தெரியவில்லை

    --

    ஜவுளிக்கடையில் அளிக்கப்படும் complimentary bigshopper பை, துணிப்பை, கைப்பை போன்றவற்றை வாங்க மாட்டேன் என்று திருப்பி தந்தவர்கள் யாராவது இருந்தால்....... உங்களுக்கு தலை வணங்குகிறேன்.... நான் அப்படி கிடையாது :) :)

    ReplyDelete
  43. .


    ஒரு மாநாடு என்றால் மக்களுக்கு அதில் நானும் கலந்துகொண்டேன் என்று பறைசாற்றிக்கொள்ள சில அடையாளங்கள் வேண்டும். சொவனீர் என்பது எடுத்துச் செல்லும் அடையாளம். அதன் நீட்சிதான் இன்னும் எனக்கு வேண்டும் எனது மாமாவிற்கு வேண்டும் என்று அதிகப்படியாக எடுத்துச் செல்வது.

    திருட்டு தவறு.

    மாநாட்டை நடத்தியவர்கள் அதற்கான விழா மலர் முதல் குறைந்த பட்ச சொவனீர் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும். சில விவிஐபிக்களுக்கு மடும் சில சொவனீர் என்றால் சாதரணமானவர்கள் கிடைத்ததைச் சுருட்டப் பார்ப்பார்கள்.

    இதில் உள்ளது தேவை மற்றும் தட்டுப்பாடு சம்பந்தப்பட்டது.
    மக்களுக்கு சில விசயங்கள் தெரியாது. அல்லது அவர்கள் செய்வதைச் சரி என்றே நினைப்பார்கள் வேறு யாராவது சொல்லும் வரை.

    உங்களின் இணையத் திருட்டு மற்றும் சினிமா பைரஸி / பொதுக்காட்சி விசயங்களில் நடந்தது இதுதான்.

    உலக வரலாறு எழுதும் கதைபுத்தக வியாபாரிகளுக்கே இணையத் திருட்டு மற்றும் சினிமா பைரஸி / பொதுக்காட்சி குற்றங்கள் தெரியாதது அறியாமை என்றால் .... அவர்களுக்கு எந்தப் புத்தகத்தை சிபாரிசு செய்வது?
    என்ன கொடுமை பத்ரி இது?

    **

    குறைந்த அளவே உள்ளது அதாவது காத்திருந்தால் கிடைக்காது என்ற பட்சத்தில் முண்டியடித்துக் கொண்டு சண்டைபோட்டாவது பெற்றுக்கொள்ள முயல்வது அடிப்படை விலங்குக்குணம். இது இனம் மொழி நாடு கடந்து எல்லாருக்கும் உண்டு.

    அமெரிக்காவில் தேங்க்ஸ்கிவிங் டேயின் போது பல பெருங்கடைகளில் முதலில் வரும் 100 பேருக்கு அல்லது சில எண்ணிக்கை மக்களுக்கு மட்டும் இலவசமாக சில பொருட்களையோ அல்லது குறைந்த விலையில் சில பொருட்களையோ கொடுப்பதாக அறிவிப்பார்கள். அதற்கு வெள்ளை முதல் கருப்பு மற்றும் பிரவுன் கலர் மக்கள் எல்லாம வரிசையில் காலை 4 மணிமுதல் டெண்ட் அடித்து காத்து இருப்பார்கள்.

    பெஸ்ட் பை மற்றும் வார்மார்ட் கடைகளில் வருடா வருடம் இந்த இலவசத்திற்காக தள்ளுமுள்ளு ஏற்படும் சில நேரங்களில் அடிதடி சண்டை ஏற்படுவது மிகச்சாதரணம்.

    Wal-Mart worker trampled to death by frenzied Black Friday shoppers
    http://seattletimes.nwsource.com/html/nationworld/2008448574_shop290.html

    ***

    எதற்கெடுத்தாலும் இலவசத்திற்கு / மானியத்திற்கு எதிரானவன் என்று சொல்லும் பத்ரி அண்ட் கோ கம்பெனி செய்யவேண்டியது....

    1. உங்கள் வாகனத்திற்கு பெட்ரோல் டீசல் பயன்படுத்தாதீர்கள். அதில் அரசின் மானியம் உள்ளது. அப்படியே பயன் படுத்தினாலும் , மானியத்தைக் கணக்கிட்டு பெட்ரோலிய அமைச்சகத்திற்கு மாதமாதம் பணத‌தை அனுப்பி விடுங்கள்.

    2. வீட்டில் அரசு மானியத்தில் வழங்கும் சமையல் கேஸைப் பயன்படுத்தாதீர்கள். இதிலும் அரசின் மானியம் உள்ளது. அப்படியே பயன் படுத்தினாலும் , மானியத்தைக் கணக்கிட்டு பெட்ரோலிய அமைச்சகத்திற்கு மாதமாதம் பணத‌தை அனுப்பி விடுங்கள்.

    3. உங்கள் அச்சுத் தொழிலில் ஏதாவது மானியம் அல்லது விலக்குகளை அரசு அறிவித்தால் அல்லது நீங்கள் தற்போது பயன்படுத்திக் கொண்டு இருந்தால்...ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

    4. உங்கள் புத்தகங்களை தள்ளுபடி, கழிவு, கண்றாவி என்று விலை குறைத்து வாங்கத்தூண்டி மற்றவர்களை பிச்சைக்காரர்களாக‌ மாற்றாதீர்கள். ஏன் என்றால் நீங்கள் கழிவு, மானியம், இலவசத்திற்கு எதிரானவர்கள்.

    5.மேலும் புருனோ சொன்னதுபோல ஜவுளிக்கடைப் பை, ஸ்டார் ஓட்டல் காம்ளிமென்டரி எல்லாவற்றையும் விலக்கி வாழுங்கள்.
    நீங்களும் வாங்காதீர்கள்.
    உங்கள் நிறுவனம் சார்பாக கொடுக்கவும் செய்யாதீர்கள்.

    6. அமெரிக்காவில் ஏதாவது காலேஜில் படித்து இருந்தாலும் அதில் பல மானியங்கள், பலரின் நன்கொடைகள், என்று உங்கள் கண்ணுக்குக் தெரியா பல விசயங்கள் உள்ளது. நீங்கள் பணம் கட்டிப் படித்து இருந்தாலும் அது பலபேரின் நன்கொடை , பல சாரிட்டி நிறுவனங்களின் வைப்பி நிதியில் இருந்து வரும் மானியம் போக கழிக்கப்பட்ட தொகைதான் உங்களிடம் வசூலிக்கப்பட்டது அப்படி வாங்கிய பட்டத்தை திருப்பி கொடுத்து விடுங்கள்.

    இப்படியெல்லாம் சுய சுத்திகரிப்பு செய்துவிட்டு டமிலனின் இலவச மானிய புத்தியை கண்டியுங்கள்.


    .

    ReplyDelete
  44. ஜவுளிக்கடையில் நீங்க ஜவுளி வாங்கல்லைன்னா இலவச பிக் ஷாப்பர் கிடைக்காது. ஹோட்டலில் நீங்க ரூம் போட்டு தங்கல்லைன்னா இலவச சிற்றுண்டி கிடைக்காது. இவ்விடங்களில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. உங்கள் காசை வாங்கிக்கொண்டு அவர்கள் கொடுக்கிறார்கள்.

    ஆனால் ஹோட்டலுக்குப் போய் ரூமே போடாமல் காம்பிளிமெண்டரி சிற்றுண்டி சாப்பிட எண்ணி அப்படிச் செம்மொழி மாநாட்டில் செய்தவர்களைப் பற்றித் தான் இங்கு பேச்சு.

    ReplyDelete
  45. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  46. மருதனின் நடை மிக அருமை, ரொம்ப நாளைக்கு பிறகு வயிறு சுளுக்க சிரிச்சோம்!!!

    மற்றவர்களை ஒப்பிடும் பொழுது இது கொஞ்சம் அதிகம் நம்மவர்களிடம்,

    வால்மார்ட் போன்ற வற்றை இதனுடன் ஒப்பிடக்கூடாது, இது வியாபார இடம் இல்லை,
    நன்கு படித்த மற்றும் மொழிக்காக வந்தவர்கள், அவர்கள் நினைப்பது இது தான்,
    நான் செலவு செய்து வந்திருக்கிறேன் எனக்கு அதற்கு பயனாக என்னவெல்லாம் கிடைக்கிறதோ அதை முடிந்தவரை எடுத்து செல்லவேண்டும் (Grab)

    மேலும் நாம் உணர்வுபூர்வமாக திருப்தி அடைந்து இருக்கலாம், ஆனால் மற்றவர்கள் ??!!!

    சஹ்ரிதயன்

    ReplyDelete
  47. திரு.பத்ரி அவர்களே! நீங்களே இப்படி பொத்தாம்பொதுவாக "தமிழர்களுக்கு பிச்சைக்கார அந்தஸ்து என்றும் இருக்கும்" என்று சொல்லியிருக்கக் கூடாது. நீங்கள் ஆந்திரா கர்நாடகாவிலோ, இல்லை வட இந்தியாவிலோ அவர்கள் மொழி சார்ந்த புத்தகங்கள் அடங்கிய கண்காட்சி நடத்தி அதில் குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் அனைத்தும் இலவசமாக கிடைக்கும் என்று அறிவித்துப்பாருங்கள்..என்ன நடக்கிறது என்று. கல்லாப்பெட்டி கூட இருக்காது. திரும்பி வருவதற்குக் கூட யாரிடமாவது கடன் வாங்கித்தான் வர வேண்டும். இது மனித இயல்பு. இதற்கு இனச்சாயம், மதச்சாயம், மொழிச்சாயம் அல்லது இங்கே சிலர் உங்களைத் தாக்கியிருப்பதுபோல் சாதிச்சாயம் எதுவும் கிடையாது. நீங்களே நேரடியாக பாதிக்கப்பட்டதால்..உங்கள் மனம் கோபத்தில் கொதித்துக்கொண்டிருந்த வேளையில் ஒரு பதிவைத்தட்டி விட்டீர்கள். புரிந்துகொண்டு உங்கள் வார்த்தைகளைத் திரும்பப் பெறுவீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  48. //கார்த்திகேயன்....
    தனக்கு தரப்படாததை பறித்தெடுத்துக்கொள்ளும் மனப்பாங்கைத்தான் இவ்விடுகை குறிப்பிடுகிறது.//


    :‍-))))

    பத்ரி,
    நீங்களே கார்த்திகேயன் கேள்விக்கு பதில் சொல்லிவிடுங்களேன். கார்த்திகேயனும் தரப்படாததை பறித்தெடுத்துக்கொள்ளும் மனப்பாங்கை எதிர்க்கிறார் .

    வ‌ணிக பயன்பாட்டிற்காக இணையத்தில் திருடப்பட்ட படங்களும், உங்கள் அலுவலக மொட்டை மாடியில் திரையிடப்பட்ட சினிமாவும் உங்களுக்காகவேயென்று அல்லது உங்கள் நிறுவனத்திற்காகவென்று பிரத்யோக அனுமதி அளிக்கப்பட்டு தரப்பட்டதா? அல்லது ஊரான்வீட்டு நெய்யே என்று சும்மா எடுத்துக் கொண்டீர்களா?

    நீங்களாக எடுத்துக் கொண்டீர்கள் என்றால் இந்தப்பதிவு உங்களுக்கானதும்தான்.

    .

    ReplyDelete
  49. வஜ்ரா..
    //ஆனால் ஹோட்டலுக்குப் போய் ரூமே போடாமல் காம்பிளிமெண்டரி சிற்றுண்டி சாப்பிட எண்ணி//

    மாநாட்டில் இலவசமாகப் போய் காம்ளிமென்டரி கேட்கக்கூடாது அல்லது குடுத்தாலும் வாங்கக்கூடாது. சரியா?

    விழாமலர் இத்யாதி போன்றவை சிலருக்கு மட்டும் கொடுக்கப்பட்டதாகா (வி.ஐ.பி) தவகல். அது உண்மையாயின்....

    Q1.ஏன் சிலருக்கும் மட்டும் விழாமலர் கொடுக்கப்பட்டது? சில காம்ளிமென்டரி அயிட்டங்கள் கொடுக்கப்பட்டது?

    Q2.அவர்கள் மாநாட்டிற்கு நுழைவுச் சீட்டை காசு கொடுத்து வாங்கி பார்க்க வந்தவர்களா?

    Q3.மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் ஒரு விழாவில் ஏன் சிலருக்கும் மட்டும் இலவசங்கள் போகிறது? மாநாட்டிற்கு வந்தவர் அனைவருக்குமல்லவா கொடுத்து இருக்கவேன்டும்?


    .

    ReplyDelete
  50. இங்குக் கல்வெட்டு என்பவர் காட்டும் பொலிடிக்கல் கரக்ட்னேஸ் சகிக்கவில்லை.

    ReplyDelete
  51. கார்த்திகேயன்,
    //ஏன் இந்த வெத்து கூச்சல் காசி/கல்வெட்டு? வேறு வேலை எதுவும் இல்லையா?//

    என்னை விளித்து "வெத்து கூச்சல்" என்று நீங்கள் சொல்ல எல்லா உரிமையும் உள்ளது. ஏன் என்றால் நாம் பொது வெளியில் பேசிக் கொள்கிறோம் .

    இருந்தாலும் ,உங்களைக்குறித்து எந்த விமர்சனமும் பின்னூட்டமும் நான் இடாத பட்சத்தில் நீங்கள் ஏன் இப்படி நீங்கள் சொல்லவேண்டும் என்று தெரியவில்லை. எப்படியோ அது உங்கள் விருப்பம்.

    மேலும் பின்னூட்டங்கள் பத்ரியின் அனுமதியுடனே வருகிறது.நான் வெற்றுக்கூச்சல் போடுவதாக பத்ரி நினைத்தால் பின்னூட்டங்களை வெளியிட வேண்டாம்.

    எனக்கு வேறு வேலை எதுவும் இல்லை என்பதால் இதைச் செய்து கொண்டு இருக்கிறேன். நீங்கள் ஏன் பாவம் நேரம் செலவழித்து எனது "வெத்து கூச்சல்" பின்னூட்டங்களைப் படிக்கிறீர்கள்? வேண்டாம் உங்களுக்கு அந்த துன்பங்கள்.

    எனது "வெத்து கூச்சல்" உங்களை நோக அடித்து அல்லது உங்களுக்கு நேரவிரயம் ஏற்படுத்தி இருந்தால் மன்னிக்க. :-((((((

    .

    பத்ரி,
    பின்னூட்டங்களை வெளியிடுவதால் நீங்கள் எனது கருத்தை நீங்கள் ஏற்கிறீர்கள் என்பது அல்ல, எனது கருத்தைச் சொல்ல அனுமதிக்கிறீர்கள் என்பதே பொருள்.

    எனது கருத்து, பதிவின் நோக்கத்தை திசைதிருப்பும் என்றால் கடாசிவிடுங்கள். கார்த்திகேயன் போன்றவர்களுக்கு அநாவசிய மன உளைச்சலை ஏற்படுத்த விரும்பவில்லை.

    **

    மன்னிக்க கார்த்திகேயன்.

    .

    ReplyDelete
  52. நல்ல மறுமொழி. நன்றி மருதன்.

    ReplyDelete
  53. போங்க சார், உங்க நேந்திரங்கா வறுவலை நான் சாப்பிட சோனியா காந்தியவா கேக்கணும்?

    கொஞ்சம் விட்டா, வறுவல் பாக்கெட் விலை 60,000 கோடி ரூபாய்ன்னு கூட சொல்லுவீங்க போலிருக்கே.

    மாநாட்டில் முடிந்ததை மட்டுமே சுருட்டிக்கொண்டேன். மீதி (இருந்தால்) அடுத்த வருடம் வீடு தேடி வரும்னு சொல்றாங்க.

    இப்படிக்கு,
    வெல்வெட்டு

    ReplyDelete
  54. சூறைத் தேங்காய்க்குப் பறக்கும் பண்பாடு ஆச்சரியமளிக்கவில்லை. இதற்கு ஒவ்வொருவரும் தத்தம் அரசியல் வண்ணம் பூசுவது வேடிக்கையாக இருக்கிறது. குறிப்பாக பா. ரெங்கதுரை, வஜ்ரா போன்ற ஜாதி வெறியர்கள் இது தமிழர், திராவிடர் குணமாக அல்லாத அந்த அரசியலின் பண்பாட்டுச் சீரழிவாக நிறுவ முயற்சிப்பது கேவலமாக உள்ளது. இது வெறும் தமிழர்/திராவிடர் பண்பாடல்ல, பரவலான இந்திய குணம் என்பதை இந்து ஞான மரபை அடிப்படையாக வைத்து ஜெயமோகன் கூட விளக்க வேண்டியதில்லை. இதற்கு ஒரு சிறு உதாரணம் அளிக்கிறேன்.

    இங்கு விவரிக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சி நடந்த அதே வேளையில், பூமிப்பந்தின் அடுத்த பக்கத்தில், அமெரிக்க நகரொன்றில் நடந்த நிகழ்ச்சியில் இந்துக்கள்/இந்தியர்கள் சூறைத் தேங்காய்க்குப் பறந்த காட்சி இது.

    நாங்கள் வசிக்கும் பகுதியில் போன வாரம் புதிதாக ஒரு சர்ச் திறந்தார்கள். அதைக் கொண்டாட அல்லது சர்ச்சுக்கு ஆள் பிடிக்க ஒரு carnival ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது open to public நிகழ்ச்சி என்பதை மோப்பம் பிடித்த ஒரு இந்திய பெண்மணி (இவர் தமிழர் அல்ல) தன் தோழிகளுக்கு தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் செய்தியை ஒலிபரப்ப ஞானக்கூத்தனின் நாய் கவிதையில் வருவது மாதிரி அடுத்த ஓரிரு மணி நேரத்தில் அனேகமாக அந்தப் பகுதி இந்தியர்களுக்கெல்லாம் செய்தி எட்டிவிட்டது. பிறகென்ன. கோடைவிடுமுறையில் போரடித்துக்க&#