Thursday, December 08, 2011

முல்லைப் பெரியாறு பிரச்னை

இந்தியாவில் இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லாப் பிரச்னைகளும் இறுதியில் வன்முறையில்தான் போய் முடியும். ஏனெனில் மாநில அரசியலை மட்டும் முன்வைப்போர் மட்டுமல்ல, தேசியக் கட்சிகளின் உள்ளூர் கிளைகளும் அதே மாதிரியான ஸ்டேட்ஸ்மன்ஷிப் இல்லாத வாக்குவங்கி அரசியலை மட்டுமே முன்வைக்கக்கூடியவை.

எப்போது நீதிமன்றங்கள், ஆர்பிட்ரேஷன், பிரதமரின் தலையீடு ஆகியவை வேலை செய்யவில்லையோ, எப்போது மாநிலங்கள் தத்தம் சட்டமன்றங்களைக் கூட்டி உச்ச நீதிமன்ற ஆணையைச் செயல்படுத்தாத முறையில் சட்டங்களை இயற்றுகிறார்களோ, அப்போதே இதுபோன்ற பிரச்னைகளுக்கு நியாயமான தீர்ப்புகள் இல்லை என்பதாகிவிட்டது.

இது கர்நாடகம்-தமிழகம், தமிழகம்-கேரளம், பஞ்சாப்-ஹரியானா-ராஜஸ்தானம், மகாராஷ்டிரம்-ஆந்திரா-கர்நாடகம் என்று பல்வேறு இடங்களிலான நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னையை மட்டுமல்ல, மகாராஷ்டிரம்-கர்நாடகம், கர்நாடகம்-கேரளம், கேரளம்-தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகள் தொடர்பாகவும் மொழிப் பெரும்பான்மையினர்/சிறுபான்மையினர் தொடர்பாகவும் நிகழும் பிரச்னைகளையும் உள்ளடக்கியது.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரளா பக்கம் தவறு, தமிழகம் பக்கம்தான் நியாயம் என்று அதனை விரித்துப் பேசுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. மாறாக, நீங்கள் கேரளத்தவராக இருந்து (மலையாளியோ, இல்லை தமிழரோ அல்லது வட நாட்டவரோ), கேரளத் தரப்பு நியாயமற்றது என்று நினைத்தால் என்ன செய்வீர்கள் என்பது பற்றியதுதான் என் சிந்தனை. அதுவும் நீங்கள் சாதாரண ஆசாமியாக இல்லாமல் ஒரு கலைஞராக, எழுத்தாளராக, அரசியல்வாதியாக இருந்து, கேரளா முல்லை பெரியாறு பிரச்னையில் எங்கெல்லாம் தவறு இழைத்திருக்கிறது என்பதை அருகிலிருந்து பார்த்தவராக இருந்தால் என்ன செய்வீர்கள்? என்ன செய்துள்ளீர்கள்?

கேரளத்தில் மாற்றுக் கருத்துக்கான இடம் இன்று இல்லவே இல்லையா? கேரள இதழ்களைப் படிப்போர் இதுபற்றிக் கருத்து சொல்லமுடியுமா?

12 comments:

  1. சரியான கேள்வி. சில மலையாள நாளிதழ்களின் பக்கங்களைப் புரட்டினாலே எல்லாரும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். திரு. தண்டபாணி உடைந்தால் கூட மிகப் பெரிய பாதிப்பு வராது என்று சொல்லப் போக அவரை மலையாளப் பத்திரிகைகளும், பெரியவர்களும் காய்ச்சிஎடுத்துவிட்டதா மலையாளம் படிக்கத் தெரிந்த என் நாபன் சொன்னார். நீங்கள் சொல்கிற மக்கள் பெரும்பாலும் மிக அமைதியாகத் தான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. /////கேரளத்தில் மாற்றுக் கருத்துக்கான இடம் இன்று இல்லவே இல்லையா? கேரள இதழ்களைப் படிப்போர் இதுபற்றிக் கருத்து சொல்லமுடியுமா?////


    தமிழ்நாட்டில் வாழும் பார்ப்பான் பத்ரிடமிருந்து வந்த வரிகள் பாராட்டப்பட வேண்டியது... இவன் இரஜினியயைப் பற்றியும் பேசுவான் புறநானுறைப்பற்றியும் பேசுவனான்......எச்சரிக்கை.. if v wl do together as the tamilan its simple for THANI THAMIZHNADU... நிச்சயம் அடிபடுவான் மலையாளி..
    துணைநிற்போம் மலையாளியை கருவருக்க....

    ReplyDelete
  3. please dont entertain these kind of comments from anonymous,

    தமிழ்நாட்டில் வாழும் பார்ப்பான் பத்ரிடமிருந்து வந்த வரிகள் பாராட்டப்பட வேண்டியது... இவன் இரஜினியயைப் பற்றியும் பேசுவான் புறநானுறைப்பற்றியும் பேசுவனான்......எச்சரிக்கை.. if v wl do together as the tamilan its simple for THANI THAMIZHNADU... நிச்சயம் அடிபடுவான் மலையாளி..
    துணைநிற்போம் மலையாளியை கருவருக்க.


    here also cast & religion following response....

    desa thuroooggi......


    januanand

    ReplyDelete
  4. Comments make for the lack of a community in the blogging medium. But when it comes to Tamizh blogs, I see an insane amount of slanderous, contrived and off-topic comments (especially in communal lines...perhaps the most visible ones are on a particular community). It's so off-putting that you cannot participate without someone lurking in to spoil it all.

    For once, I feel like entertaining Sibal's line of thought. It's so cheap a taste that something's got to give!

    ReplyDelete
  5. நீதிமன்றம் முன்பாக உள்ள ஒரு பிர்ச்சினையை கேரள அரசும் கேரள அரசிய்ல்வாதிகளும் அரசியலாக்கி ஆதாய்ம் பெறப் பார்க்கிறார்க்ள்.கேரள மக்க்ளுக்கு ஆப்த்து என்று கூறி தமிழகத்துக்கு எதிராக வெறி கிளப்புவது சுலபம்.இப்ப்டி வெறியைக் கிளப்பியதன் விளைவாக வன்முறை வெடித்துள்ளது இது மேலும் முற்றுமானால் அடக்குவது கடினம்.சாதாரண அரசியல்வாதிகள் ஓட்டுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். ஆனால் முதல்வருக்கு அரசியல் விவேகமும் தேவை.அந்த விவேகம் கேரள ஆளும் கட்சித் தலைவர்களுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும்.
    நூறு ஆண்டுகளாக இருந்துவ்ந்துள்ள அணை ஏதோ நாளைக்கே தகர்ந்து விடப் போவது போல ஒரு கற்பனைத் தோற்றத்தை ஏற்படுத்துவதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
    தொழில் நுட்ப நிபுணர்கள் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டிய விஷயத்தை நடு ரோடுக்கு கொண்டு வருவது சரியல்ல.மத்திய அரசாவது கேரள அரசை இழுத்துப் பிடித்து நிதானத்தை கடைப்பிடிக்கச் செய்திருக்க வேண்டும். கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் கை ஓங்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசும் பேசாமல் இருந்து விட்டால் நாளைக்கு பல்வேறு மானிலங்களும் இப்படி வெறி கிளப்பி மக்களின் கவனத்தை திசை திருப்ப கேரளத்தின் முன்மாதிரியப் பின்பற்றுகின்ற நிலை ஏற்படலாம்.

    ReplyDelete
  6. janaki u only thesa thurogi... தமிழையும் தமிழ்நாட்டையும் கேவலப்படுத்துகிறாய்... where is இறையாண்மை? அன்று உலகம் முழுவதும் கோலச்சிவன் தமிழன் ஆரியன் வந்தான் அப்படியே சாய்ந்தது....... தமிழ்நாட்டை தவிர்த்து நீங்களே இந்தியாவை வைத்துக்கொள்ளுங்கள்...

    ஒட்டுண்ணி வர்க்கம்தான் ஜானகி போன்றவள்.....
    by ramesh.

    ReplyDelete
  7. if we have only tamil nadu, how do u propose to get water from kerela and tamilnadu??

    fight with the india??

    ReplyDelete
  8. I agree ramesh commends...

    நான் ஒரு இந்தியன் என்று சொல்வதை விட நான் ஒரு தமிழன் என்று சொல்வதில் தான் பெருமை அடைகிறேன்...

    by வினோத்

    ReplyDelete
  9. இந்தியாவில் நூறாண்டு பழமையான பல அணைகள் உள்ளன.
    http://newshopper.sulekha.com/99-dams-more-than-100-years-old_news_845012.htm
    இவற்றையும் இடிப்பார்களா? பெரியார் ஆணை விஷயத்தில் கேரளம் அராஜகம் செய்கிறது.

    அதே நேரம் உச்சநீதிமன்ற ஆணையை எதிர்த்து கேரளா சட்டம் இயற்றியதற்கு முன் மாதிரி உண்டு. இட ஒதுக்கீடு 50 சதம் மேல் கூடாது என்ற உச்சநீதிமன்ற ஆணையை எதிர்த்து தமிழக சட்ட மன்றம் சட்டம் இயற்றி அதை ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்த்தது.

    ReplyDelete
  10. The comments that guys like 'anonymous' write are only aimed at digressing from constructive conversations and shifting the focus. Best thing to do is "Ignore". I think Badri is already doing it, because he is pretty much active in responding to sensible comments otherwise.

    ReplyDelete
  11. முல்லை பெரியாறு பிரச்சனையிலும் பார்பனன் எங்கிருந்து வந்தான்னு தெரியலை :)

    ReplyDelete
  12. அறிவிலும்,நாகரிகத்திலும் மேம்பட்டவர்களாக நாம்
    இதுவரை கருதிவந்த மலையாள இண்டலக்சுவல்களிடமிருந்து எந்த சத்தத்தையும்
    காணோமே .கலைஞரிடமிருந்து கற்றுக் கொண்டுவிட்டார்களோ?

    ReplyDelete