Wednesday, September 12, 2012

செர்னோபில் விபத்தில் எத்தனை பேர் இறந்தார்கள்?

முத்துக்கிருஷ்ணன் எழுதியுள்ள நூலில், செர்னோபில் அணு உலை விபத்தில்
1984 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் 9,85,000 பேர் புற்றுநோயால் இறந்துவிட்டதை ரஷ்ய அரசு அறிக்கை ஒன்றில் உறுதி செய்கிறது
(பக்கம் 22) என்கிறார்.

ஐ.நாவின் பல அங்கங்களும், ரஷ்யா, பெலாருஸ், உக்ரைன் நாட்டின் அரசுகளும் இணைந்து 2006-ம் ஆண்டு வெளியிட்ட செர்னோபில் பற்றிய முழுமையான ஆவணம் அப்படி ஏதும் சொல்லவில்லை. அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை (பக்கம் 14, 15)
நேரடியாக
1986-ல் கதிர்வீச்சுக் காயங்களால்: 28 பேர்
பிற வகையில் ஏற்பட்ட காயங்களால்: 2 பேர்
1987-லிருந்து 2004 வரை பல காரணங்களால்: 19 பேர் (ஆனால் அனைவரும் செர்னோபில் விபத்தின் காரணமாகத்தான் இறந்தனர் என்று சொல்ல முடியாது)
மறைமுகமாக
கேன்சர் அதிகரிப்பு - மிகக் குறைவான சதவீதம்
ஆனால் தைராய்ட் கேன்சர் அதிகரிப்பு - இளைஞர்கள், குழந்தைகளிடையே இருந்துள்ளது. 4,000-க்கு மேற்பட்ட தைராய்ட் கேன்சர் நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அதில் 15 பேர் இறந்தனர்.
மீதத்தை நீங்களே முழுதாகப் படித்துக்கொள்ளுங்கள்.

எண்ணிக்கை ஒன்று சொல்லப்படுகிறது. அதற்கு அடிக்குறிப்பு எதுவும் இல்லை. ஆனால் ரஷ்ய அரசே அப்படிச் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. அப்படி ஏதும் இல்லை, இறப்பு என்பது 100-ஐக்கூடத் தாண்டவில்லை என்பதை நான் மேலே கொடுத்துள்ள ஆவணம் காட்டுகிறது.

100 உயிர்கள் என்றாலும் உயிர்களே. அதற்கு செர்னோபில் முழுக் காரணம். ஆனால் இல்லாத, பொல்லாத எண்ணிக்கை எதற்கு?

24 comments:

  1. :)) இதை ஒரே வரியில் நிராகரிப்பார்களே? இதெல்லாம் ஐநா ஸ்பான்ஸர் செய்யும் பயங்கரவாதம். :>

    ReplyDelete
  2. அ.முத்துகிருஷ்ணன் பரபரபபிற்காக எதையும் எழுதக் கூடியவர்.
    அவர் எழுதியதை கேள்வி கேட்டால் நீங்கள் பார்பனர் என்று வசையும் நூறு பொய்களும் அவரிடமிருந்து வரும். சான்று வேண்டுமானால் அவரது நூலின் 15ம் பக்கத்தைப் பார்க்கவும்.

    ReplyDelete
    Replies
    1. Verifiable Fact என்பதற்குள் வரக்கூடியவை பற்றி மட்டும்தான் நான் எழுதப்போகிறேன். இது யாருக்காகவும் அல்ல, எனக்காக. நம் காலத்தில் நடக்கும் மிகப் பெரிய போராட்டம் கூடங்குளம் போராட்டம். அதன்மீது எனக்கு மரியாதை உண்டு. பொய்யற்ற நியாயமான விவாதமே சிறந்தது என்ற அடிப்படையில் தரவுகளற்றவற்றைப் பற்றி மட்டுமே எழுதப்போகிறேன். சாதி, மத, பிற காழ்ப்புகள் பற்றி நான் தொடவே போவதில்லை.

      Delete
  3. அதே அறிக்கையில் இதையும் கூறியிருக்கிறது...
    ...the possible increase in cancer mortality due to this radiation exposure might be up to a few per cent. This might eventually represent
    up to four thousand fatal cancers in addition to the approximately 100 000 fatal
    cancers to be expected due to all other causes in this population....
    The absence of a demonstrated increase in cancer risk — apart from thyroid cancer — is
    not proof that no increase has in fact occurred. Such an increase, however, is expected to be very difficult to identify in the absence of careful large scale epidemiological studies with individual dose estimates.

    ReplyDelete
    Replies
    1. http://en.wikipedia.org/wiki/Chernobyl:_Consequences_of_the_Catastrophe_for_People_and_the_Environment

      இந்த இடத்தில் 9.85 லட்சம் எங்கிருந்து வந்தது என்பதற்கான விடை கிடைக்கிறது. (நன்றி: ட்விட்டரில் @ezharai)

      இப்ப்டி ஒரு எண்ணிக்கை ஒரு புத்தகத்தில் வந்திருப்பத் ஊண்மை. ஆனால் அதனை ரஷ்ய அரசு சொல்லவில்லை. மேலும் இந்த எண்ணிக்கையை நம்பலாமா வேண்டாமா என்பதை மேலே உள்ள விக்கிபீடியா பக்கத்தைப் படித்து முடிவு செய்துகொள்ளுங்கள்.

      Delete
    2. விக்கியையு பார்த்தபிறகுதான் மேற்கண்ட பின்னூட்டம் இட்டேன். 9.85 லட்சம் மிகவும் மிகை என்றே வைத்துக்கொண்டாலும், இறந்தவர்கள் எண்ணிக்கை நூறையும் தாண்டவில்லை என்பதை நீங்களும் நம்புகிறீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை.
      இங்கே முக்கியமான கேள்வியாக இருப்பது - ஏதேனும் விபத்து நிகழ்ந்தால்... இந்த ஆல் விகுதிதான் எந்தவித ஆதரவுவாதத்தையும் சந்தேகிக்க வைக்கிறது. நம்நாட்டில் நிலவும் ஊழல், அரசுகளின் ஆணவப் போக்கு, மக்களின் கருத்தை துச்சமாக மதிப்பதல்ல, எட்டி உதைக்கும் போக்கு, எல்லாவற்றையும் ரகசியமாக வைக்கும் சட்டங்கள், முறையான நெறிமுறைகளும், கண்காணிப்பு அமைப்புகளும் இல்லாமை, பயன்படுத்தப்பட்ட எரிபொருள் என்ன செய்யப்படும் என்பது குறித்து இதுவரை தெளிவான பதில் இல்லாமை, போபால் அனுபவம், இவற்றையும் கணக்கில் கொண்டு பார்க்கும்போது அச்சமாக இல்லையா... ஆஹ்... விபத்து எங்கேதான் நிகழவில்லை, விமான விபத்து, ரயில் விபத்து என்று அப்துல் கலாம், நாராயணசாமி பதில்கள் போல நீங்களும் பதில் வைத்திருப்பீர்கள் என்றும் நான் கருதவில்லை.

      Delete
  4. http://www.ens-newswire.com/ens/apr2010/2010-04-26-01.html
    இதை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு ஒருவர் எழுதலாம்.ஆனால் http://www.nyas.org/Publications/Annals/Detail.aspx?cid=f3f3bd16-51ba-4d7b-a086-753f44b3bfc1
    இது குறித்த சர்ச்சையை அறிந்து கொள்ள உதவுகிறது.முத்துகிருஷ்ணன் சான்றாகக் காட்டுவது ஒரு செய்திக் குறிப்பை மட்டுமே.அவரும் அந்த வெளியீட்டினை படித்திருக்கவில்லை. இப்படி அங்கும் இங்கும் கிடைக்கும் தகவல்களை தொகுத்து பூமி தட்டையானது, சூரியன் பூமியை சுற்றுகிறது, பரிணாமவாதம் பொய்,கடவுள்தான் உலகையும் உயிரினங்களையும் உருவாக்கினார் என்று எழுத முடியும்.அவர் செய்திருப்பதும் இதை ஒத்ததுதான்.என்னால் இன்னொன்றையும் உறுதியாக சொல்ல முடியும்.அவருக்கு அடிப்படை அறிவியல் அறிவும் இல்லை, பகுத்தறிவு கொண்டு காரண-காரிய ரீதியாக அணுகவோ,தர்க்க ரீதியாக சிந்திக்கவோ தெரியவில்லை. ஹோமி பாபா எத்தகைய விஞ்ஞானி என்பதை அறியாமல் மத்தாய் எழுதிய நூலை ஆதாரமாக் கொண்டு அவரை தூற்றுபவரிடம் verifiable fact என்று எதைச் சொல்லமுடியும் :(

    ReplyDelete
  5. பத்ரீ, நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருபவன். உங்கள் பதிவையும் அதன் பின் வந்துள்ள கருத்துகளையும் பார்த்தேன். முதலில் ஆதாரம் எங்கே என்றும், இதுக்கு ஆதாரம் எல்லாம் இருக்கா என்ன என்ற பானியில் கேள்வி எழுப்பியுள்ளீர்கள். அதன் பின் ஒஹோ இந்தா இருக்கு ஆதாரம் என்றும், இதுவாகத்தான் இருக்குமோ என்று கொஞ்சம் தடம் மாறினீர்கள். அதன் பின் இத எப்படி நம்ப முடியும் என்கிறீர்கள். அது எப்படி கேள்வியும் நானே பதிலும் நானே என்று கூறுகிறீர்கள். ஒரு பேச்சுக்கு நீங்கள் 100 என்று கூறுவதற்கு நீங்கள் அளிக்கும் ஆதாரமும் பொய்யாக இருக்க வாய்ப்பில்லையா. இதை எல்லாம் விடுங்கள் உங்களையும் முத்துக்கிருஷ்ணனையும் பல நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன், முதலில் நீங்கள் இந்த பதிவை இங்கு இடுவதற்கு முன்னால், அவரிடம் விளக்கம் கேட்டீர்களா?? உங்கள் பதில் இல்லை என்று இருந்தால் நிச்சயம் அவர் மீது சேற்றை வாரி இறைப்பது தான் உங்கள் வகையறாக்களின் நோக்கம் என்று நான் எடுத்துக் கொள்ளலாமா????

    ReplyDelete
    Replies
    1. It is upto you to take whatever view you want. Read what I wrote again. Official sources claim a low number. Sources of other kind show a very large number which has not been sustainable. Here, the author takes the inordinately large number and then assigns the same to the official sources. That is wrong.

      This number 9,85,000 is used by both Gnani and Muthukrishnan. I consider this huge exaggeration.

      At the same time, I consider official numbers put out as above as not honest either.

      Delete
    2. //

      நேரடியாக
      1986-ல் கதிர்வீச்சுக் காயங்களால்: 28 பேர்
      பிற வகையில் ஏற்பட்ட காயங்களால்: 2 பேர்
      1987-லிருந்து 2004 வரை பல காரணங்களால்: 19 பேர் (ஆனால் அனைவரும் செர்னோபில் விபத்தின் காரணமாகத்தான் இறந்தனர் என்று சொல்ல முடியாது)
      மறைமுகமாக
      கேன்சர் அதிகரிப்பு - மிகக் குறைவான சதவீதம்
      ஆனால் தைராய்ட் கேன்சர் அதிகரிப்பு - இளைஞர்கள், குழந்தைகளிடையே இருந்துள்ளது. 4,000-க்கு மேற்பட்ட தைராய்ட் கேன்சர் நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அதில் 15 பேர் இறந்தனர்.

      At the same time, I consider official numbers put out as above as not honest either.
      //

      நீங்களே நம்பாத ஒன்றை எதிர் வாதமாகக் கொடுத்துள்ளீர். இது எப்டி இருக்குதுனா.... வேண்டாம் விடு்ங்க

      Delete
  6. ஆகா ஹரன் பிரசன்னா மேல இருக்கானா
    அப்ப இது டீல் தான் என்பது அம்பலம்,
    why should we waste our time in answering this propoganda???

    ReplyDelete
  7. பரபரப்பிற்காக பிண்ணுட்டங்கள் இடுபவரும் இங்கும் வந்துவிட்டாரே, பாஸ் நீங்க எல்லாம் ஒரே கம்பேனியா?

    ReplyDelete
  8. How do you define which is a valid source? I also checked this with Neeraj Jain's book yesterday night, Neeraj Jain is one of the pioneer engineer's in this anti nuke struggle. I also have a few more source which exactly quote it is 9,85,000.

    Just talked to Muthukrishnan, He laughed at this and told he has 6 world renowned research articles which are done and submittted to the Russain Govt, This has been quoted in various anti nuke articles. You could have verified by asking him through a email or a phone conversation. By you have written 3 posts, may be this would make your friends happy, fine.

    ReplyDelete
    Replies
    1. You can believe any number you want. Muthukrishnan can believe any number he wants.

      It is not Muthukrishnan/Gnani vs Badri Seshadri. There are more competent people out there.

      I question the exact quote available in Muthukrishnan's book, which claims Russian Government has itself said 9,85,000. Further Muthukrishnan says, that many people died of CANCER.

      Gnani merely states 9,85,000 died, without stating who said this and how they died.

      Delete
  9. செர்னோபில் தற்போது..

    http://www.boston.com/bigpicture/2011/04/chernobyl_disaster_25th_annive.html

    ReplyDelete
  10. பத்ரீ சார் நல்லா தேடுங், போபால் கம்பேனியின் ஆண்டர்சன் ஒரு அறிக்கையில் இப்படித்தான் போபாலில் விஷவாயு வினால் 50 பேரு தான் செத்தாங்கன்னு சொன்னார், முத்துக்கிருஷ்ணனின் போபால் பற்றிய கட்டுரைகளையும் பொய்யாக்கிவிடலாம்.

    ReplyDelete
  11. Gnani is not homest, Muthukrishnan is not honest, Official nos is not honest, Only Badri is honest hence proved...

    ReplyDelete
  12. இரண்டு தரப்பிலும் திறந்த மனதுடன் உண்மையை அண்கும் போக்கு இல்லாதது அணு உலை விபத்தை விட பயங்கரமானது. அந்த மாவட்டத்தில் வாழ்பவர்களின் வாழ்வைப் பணயம் வைக்கிறோம் என்பதே வருந்தத்தக்க உண்மை. அணு உலை வேண்டாம் என்று சொல்பவர்களை விட வேண்டும் என்று சொல்பவர்களுக்குப் பொறுப்பு அதிகம். உண்மையை எடுத்துரைப்பதுடன் தங்கள் நம்பகத்தன்மையையும் அவர்கள் நில நாட்டியாக வேண்டும்.
    எது எப்படி இருப்பினும் அரசின் போக்கு கண்டிக்கத் தகுந்தது. போராடும் மக்களைக் கன்வின்ஸ் செய்ய அரசு இது வரை நேர்மையான அணுகுமுறையுடன் ஒரு முயற்சி கூட செய்யவில்லை என்பது வருந்தத் தக்க விஷயம். இதுதான் எதிர்ப்பாளர்களின் பலத்தைக் கூட்டுகிறது. உண்மையை மறைப்பது மட்டுமின்றி பொய்ப் பிரச்சாரம் வேறு செய்கிறது. உதா: புற்று நோய் மருத்துவமனைத் தலைவர் திருமதி சாந்தா அவர்கள் மூலம் தொலைக்காட்சியில் செய்யப்படும் பிரச்சாரம்: அணு உலை இருக்கும் இடங்களில் புற்று நோய் வரும் வாய்ப்பு குறைவாக இருப்பது என்பது பயங்கரமான நகைச்சுவை. அப்படியானால் புற்று நோய் மருத்துவமனையை மூடி விட்டு ஊருக்கு ஒரு அணு உலை திறக்காமல் இருப்பது ஏன்?
    இப்படி முழுப் பூசணிக்காயை சேற்றில் மறைப்பதற்கு பதில் நம் நாட்டில் ஜனநாயகம் நடக்கவில்லை என்ற ஒரே ஒரு பேருண்மையை இந்த வெற்று வேட்டு அரசு ஒப்புக் கொண்டு விடட்டும், எதிர்ப்பாளர்கள் அக்கணமே பணிந்து விடுவார்கள்.

    ReplyDelete
  13. **
    நம் நாட்டில் ஜனநாயகம் நடக்கவில்லை என்ற ஒரே ஒரு பேருண்மையை இந்த வெற்று வேட்டு அரசு ஒப்புக் கொண்டு விடட்டும், எதிர்ப்பாளர்கள் அக்கணமே பணிந்து விடுவார்கள்.
    **

    அதெல்லாம் எதுக்குங்க? நம் நாட்டில் நடப்பது ஒரு வகையான oligarchy அரசாங்கம். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய மக்கள் தங்களை ஆளும் உரிமையை 7,8 கம்பேனிகளில் ஒன்றிடம் டெண்டர் விட்டு அவுட்சோர்ஸ் செய்துவிடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. Good expression!ஆனால் உண்மை சுடுகிறது.

      Delete
  14. முத்துக் கிருஷ்ணனின் 'நித்திரை இழந்த ஏழு தங்கைகள்' என்ற கட்டுரையைப் படித்துப் பாருங்கள். அதில், ஆர்ஸ்ஸ் , பிஜேபி செய்கிற தவறுகளை சுட்டிக் காட்ட முற்பட்டவர் உல்பா போன்ற அமைப்புகளின் கோரிக்கைகள் நியாயம் என்று கற்பிக்க முயல்வது தெரியும். அதாவது அவருடைய பார்வையில் ஹிந்துத்துவ சக்திகள் தேசப் பிரச்சினைக்கான ஆணி வேர் என்று தன் நியாயப்பாட்டை எடுத்து வைக்க அவருக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் அதை நிறுவுகிற முயற்சியில், உல்பாவை தூய இயக்கமாக சொல்ல முற்படும் போதுதான் குரோதமான எழுத்தாக பார்க்க வேண்டியுள்ளது.

    ReplyDelete
  15. செர்னோபில்லில் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற கணக்கு எதற்கு? சென்ர்னோபில் என்ற ஊர் தற்பொழுது உயிரோடு இருக்கிறதா? அதன் ஐம்பது கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் 25 ஆண்டுகள் கழித்து இன்று கூட யாரும் வசிக்க முடியாது. கூடங்குளத்தில் அப்படி ஒரு விபத்து நடந்தால், கன்னியாகுமரியை நாம் மறந்து விட வேண்டியதுதான். செர்னோபில், புகுஷிமோவில் நடந்த விபத்துகளை உலகின் வேறு எந்த விபத்தோடு ஒப்பிட முடியுமா? ஹிரோஷிமாவை, நாகசாகியை கூட கட்டியெழுப்ப முடிந்தது. போபால் இன்றும் ஒரு பெரிய நகரம்தான். செர்னோபில்லை ஏன் மீண்டும் கட்டியெழுப்ப முடியவில்லை. புகுஷிமாவில் யாரும் ஏன் வசிக்க முடியவில்லை!

    ReplyDelete
  16. The International Agency for Research on Cancer has estimated 16,000 cancer deaths in Europe through 2065 that would not have happened but for Chernobyl. Because radiation spread beyond Europe to other areas in the northern hemisphere — Asia, Africa and the Americas — the Union of Concerned Scientists, a nonprofit watchdog, puts the global death toll closer to 27,000.

    Read more: http://www.time.com/time/health/article/0,8599,2067562,00.html#ixzz26TH3icKq

    ReplyDelete
  17. Is it right to compare chernobyl with koodankulam technology have changed. Pl do not argue keeping chernobyl in mind.

    ReplyDelete