ஏற்கனவே நான்கு முறை டாக்டர் பட்டம் பெற்ற தமிழக முதல்வர் டாக்டர் ஜெயலலிதாவுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றுமொரு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. இந்தப் பட்டம் "மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வதற்காகவும், தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை உயர்த்தியதற்காகவும், ஆண்-பெண்களிடையே சம்த்துவத்தைக் கொண்டு வந்ததற்காகவும், அரசில் சீர்திருத்தம் கொண்டு வந்ததாலும், மழைநீர் சேமிப்பைத் தீவிரமாக வலியுறுத்தியதாலும், பள்ளிகளில் அறிவியல் தமிழை உள்ளிட்டதாலும்" கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
ஏதோ கட்சிக் கூட்டத்தில் புகழாரம் கொடுப்பது போல் உள்ளது.
இந்தப் புகழாரத்தில், "யானைகளுக்கு சத்துணவு கொடுத்ததாலும், கோயிலில் 1000 பேருக்கு மணம் செய்வித்ததாலும், இலவச உணவு போட்டதாலும், கிடா வெட்டத் தடை செய்ததாலும்" என்று சேர்க்காமல் விட்டார்களே, அதுவரை மகிழ்ச்சியே.
இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்
3 hours ago














No comments:
Post a Comment