* தி ஹிந்து விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரவில்லை. தினமலர்தான் காலையை ஆரம்பித்தது.
* பெட்ரோல், டீஸல் விலை உயர்வு. உயர்த்தும் போது ரூ 1 அல்லது 2; குறைக்கும் போது வெறும் 10 பைசாதான். தினமலர் தலைப்பு "கிடு கிடு".
* பாவப்பட்ட தமிழக அரசு ஊழியர்கள் இன்றுமுதல் கூட்டம் கூட்டமாக உயர் நீதிமன்றம் நியமித்த மூன்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன் வந்து கெஞ்சவேண்டும். அவர்களுக்கு விடிவு கிடைக்க நம் பிரார்த்தனைகள்.
* தினமலர் தற்கொலைப் பக்கம்: விதவிதமான வேதனைகளினால் பலர் தற்கொலை செய்து கொள்ள (மொத்தம் ஐந்து தற்கொலைகள் அந்தப் பக்கத்தில் வந்துள்ளது), இரண்டு குழந்தைகளுக்குத் தாய் ஒருவர் விநாயக சதுர்த்தி கொண்டாடத் தேவையான பணம் இல்லை என்பதனால் தற்கொலை செய்து கொண்டாராம். பிள்ளையார் இவரை நரகத்தில் சந்தித்துத் தன் தும்பிக்கையால் நான்கு போடு போடவேண்டுமென்று வேண்டிக் கொள்வோம்.
* கடைசியாக ஜெயலலிதாவின் "கிடா வெட்டல் தடை": காவலர்கள் ஊர் ஊராக சென்று கோயில்களில் ஆட்டையும், கோழியையும் வெட்டி விருந்து படைப்பதைத் தடை செய்ய, கோயிலுக்கும், ஊருக்கும் வெளியே அவை நடைபெறுகின்றன. வீட்டுக்குள் நடந்தால் என்ன செய்வார்கள் காவலர்கள்?
மணியா வரலாறு தெரிஞ்சுக்கோணும்.
40 minutes ago














No comments:
Post a Comment