தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வை ஸ்டேட் போர்ட் மாணவர்களுக்கு மட்டும் நீக்கி பிற போர்ட் மாணவர்களுக்கு மட்டும் வைக்கும் தமிழக சட்டமன்றத் தீர்மானம் செல்லாது என்று இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதற்குப் பின்னணியில் மூன்று விஷயங்களை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் எடுத்து வைத்துள்ளனர். (தொலைக்காட்சிச் செய்தியிலிருந்து கேட்டதன்மூலம் எழுதுவது; அதனால் சில தவறுகள் இருக்கலாம்.)
1. இந்த மாதிரியான நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநிலச் சட்டமன்றத்துக்குக் கிடையாது.
2. மேற்படிச் சட்டம் மெடிகல் கவுன்சில் ஆஃப் இந்தியா (MCI), ஆல் இந்தியா கவுன்சில் ஃபார் டெக்னிகல் எஜுகேஷன் (AICTE) ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு எதிரானது.
3. மேற்படிச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள 'அனைத்து மக்களின் சம உரிமைக்கு' எதிரானது.
-*-
திருப்பத்தூருக்கு அருகில் உள்ள மிட்டூர் என்ற கிராமத்தில் 'மனம் மலரட்டும்' என்ற அறக்கட்டளை அமைப்பை சரவணன் என்ற நண்பர் நடத்தி வருகிறார். சரவணனும் அவரது நண்பர்களும் கிராமப்புறங்களில் தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தொழில் துறை நுழைவுத் தேர்வுப் பயிற்சியினை இலவசமாகச் அளித்து வருகின்றனர்.
நேற்று இந்த மாணவர்களைச் சந்திக்க நான் திருப்பத்தூர் சென்றிருந்தேன். 44 மாணவர்கள். பாதிக்குப் பாதி (22) பெண்கள். திருப்பத்தூரில் YMCA மேல் நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன. இந்த மாணவர்கள் தற்போது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் நுழைவுத் தேர்வை உடைப்பதற்கான பயிற்சிகள் நடத்தும் பள்ளிகள் பல உள்ளன. இந்தப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் வருடத்துக்கு கிட்டத்தட்ட ரூ. 24,000 வரை கட்டுகிறார்கள். தமிழகத்தின் பல பாகங்களிலிருந்தும் வருகிறார்கள். இங்கு படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நுழைவுத் தேர்விலும் சரி, ஆண்டிறுதித் தேர்விலும் சரி - அதிக மதிப்பெண்கள் பெற்று நிச்சயமாக மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேர்கிறார்கள். ஆனால் கிராமப்புறங்களைச் சேர்ந்த - அதுவும் குறிப்பாக தமிழ் மீடியத்தில் படிக்கும் - மாணவர்களால் இந்த ராசிபுரம்/நாமக்கல் மாணவர்களுடனோ, அல்லது சென்னையைச் சேர்ந்த மாணவர்களுடனோ போட்டி போட முடிவதில்லை.
சரவணனுடன் பேசிக்கொண்டிருந்தபோது நுழைவுத் தேர்வு நீக்கப்பட்டால் கிராமப்புற மாணவர்களுக்குப் பலன் இருக்கும் என்றார். ஒரு சிலராவது பொறியியல் கல்ல்லூரிகளில் சேரும் அளவுக்கு ஆண்டிறுதித் தேர்வில் மதிப்பெண்கள் பெறுவார்கள் என்றார். நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் பயிற்சி இவர்களுக்குக் குறைவு என்றும் அதுபோன்ற பயிற்சியை எந்த அரசுப் பள்ளிக்கூடங்களாலும் கொடுக்க முடியாது என்றும் சொன்னார்.
நான் பேசிக்கொண்டிருந்த 44 மாணவர்களில் 8 பேர் மருத்துவப் படிப்பு படிக்க ஆசைப்படுவதாகச் சொன்னார்கள். அதில் 6 பேர் பெண்கள். ஆனால் வெறும் 1,000 இருக்கைகளே உள்ள மருத்துவப் படிப்பில் இவர்களில் யாராவது ஒருவருக்காவது இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஓரிருவர் வர வாய்ப்புள்ளது என்றார் நண்பர் சரவணன். பொறியியல் கல்லூரிகள் நிறைய இருப்பதால், முக்கியமாக சுயநிதிக் கல்லூரிகள் இருப்பதால், இந்த மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால் கல்விக் கட்டணம் அதிகமாகும். இந்த மாணவர்கள் அனைவரும் மிகவும் பின்தங்கிய பொருளாதாரப் பிரிவினர். பின் தங்கிய சமூகப் பிரிவினரும்கூட. தத்தம் கிராமங்களிலிருந்து நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்காக திருப்பத்தூர் வரையில் வரும் பஸ் கட்டணம்கூடக் கட்ட முடியாதவர்கள். அந்தக் கட்டணத்தையும் 'மனம் மலரட்டும்' அமைப்பே இவர்களுக்குக் கொடுக்கிறது.
ஆனால் இந்த மாணவர்களில் யாருக்கேனும் பொறியியல், மருத்துவம் இடம் கிடைத்தால் மேற்கொண்டு படிக்க ஸ்பான்சர்ஷிப் பணம் கொடுக்க அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சில நிறுவனங்கள் முன்வந்திருப்பதாக சரவணன் சொன்னார்.
-*-
'நுழைவுத் தேர்வு அவசியம் தேவை' என்று கொள்கையளவில் நினைப்பவன் நான். ஆனால் நேற்றைய சந்திப்புகள் என் கருத்தை நிறையவே மாற்றியுள்ளன.
ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம்
3 hours ago
திருவல்லிக்கேணி ஹிந்து சீனியர் செகண்டரி ஸ்கூல் வாசலில், ஞானக்கூத்தன் எழுத்தில் வரவேற்பு
அசோகமித்திரனின் ஓவியம், நல்லி குப்புசாமி செட்டியார் படத்தைத் திறந்துவைக்கிறார்.
மேடையில் அமர்ந்திருக்கும் மேன்மக்கள்!
ஜெயராவின் க.நாசு. எழுதிய உயில் என்ற கவிதையின் மோனோ ஆக்டிங்
தில்லியில் அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் ஒவ்வொரு குழந்தைக்காகவும் அரசு மாதாமாதம் எவ்வளவு செலவு செய்கிறது என்று தெரியுமா? ரூ. 100? ரூ. 200? ரூ. 500? ரூ. 1,000?
(தனியார் பள்ளிகள் எல்லாமே உயர்வா என்று நீங்கள் கேட்கலாம். பல தனியார் பள்ளிகளும் சரியான வசதிகளின்றியே உள்ளன. ஆனால் காசைக் கொடுத்துக் கல்வியைப் பெறும் பெற்றோர்கள் கல்விக்கூடத்தை மாற்றும் உரிமை பெறுகிறார்கள். அரசுப் பள்ளிக்கூடத்தில் இலவசக் கல்வியை பெறும் குழந்தைகளில் பெற்றோர்கள் தம் விதியை நொந்துகொள்கிறார்கள்.)
இந்த நிகழ்ச்சி முழுமையாக விடியோ செய்யப்பட்டது. இதைப்போல பல பஸ்திகளில் 'ஜன் சுன்வாயி' நிகழ்த்தி அதன்மூலம் அரசை 'கல்வி வவுச்சர்களை' தரவைப்பது CCS-ன் நோக்கம். அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ. 15,000 செலவு செய்கிறது என்பது உண்மையானால் அந்த மதிப்புக்கான வவுச்சர்களை பெற்றோர்களுக்குக் கொடுக்கலாம். பெற்றோர்கள் அந்த வவுச்சர்களை எடுத்துக்கொண்டு தங்களுக்கு வேண்டிய பள்ளிகளைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
தமிழகத்தில் கடந்த சில வருடங்களில் அரசு (மாநில அரசு, பஞ்சாயத்துகள், நகராட்சிகள்) எந்தப் புதுப் பள்ளிக்கூடத்தையும் திறக்கவில்லை. எம்.ஜி.ஆர் காலத்தோடு அரசு பள்ளிக்கூடம் கட்டுவதை நிறுத்திவிட்டது என்று நினைக்கிறேன். அதேபோல அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளும் எண்ணிக்கையில் அதிகரிக்கவில்லை. ஆனால் வருடா வருடம் பள்ளிக்கூடம் சென்று படிப்போர் தொகை அதிகரிக்கிறது. இந்த மாணவர்களுக்கான கல்விகளை வழங்குவது தனியார் பள்ளிக்கூடங்களே.
கொல்காதாவில் புத்தகக் கண்காட்சியின் இறுதி நாள்களில் கூட்டம் அலைமோதி, பக்கத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் வரை வரிசைகள் நின்றதாகச் செய்தி:
தில்லி புத்தகக் கண்காட்சிக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வந்தனராம். விற்பனை எவ்வளவு என்று சரியான கணிப்பு இல்லை. 