நேற்று பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் இரண்டும் ஒரே சீரான எஸ்.டி.டி கட்டணச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன. அதன்படி நாட்டில் எந்த இடத்துக்குப் பேசுவதாக இருந்தாலும் கட்டணம் நிமிடத்துக்கு ரூ. ஒன்றுதான். உள்ளூர் தொலைப்பேசிக் கட்டணம் மூன்று நிமிடத்துக்கு ஒரு ரூபாய்.
தூர அழைப்புகளுக்கு இப்படி ஒரே கட்டணம் ஏற்படும் என்பது நாம் ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். ஆனால் அதை முதலில் அறிமுகப்படுத்துவது பி.எஸ்.என்.எல் என்பதுதான் ஆச்சரியம். இனி தனியார் நிறுவனங்கள் அவசர அவசரமாக இதே கட்டணத்தை ஏற்றுக்கொள்ளுவார்கள்.
[எனது 28 ஜூலை 2005 பதிவைப் பார்க்கவும். அதில் நான் சொல்லியிருந்த முதல் கணிப்பு இதுதான். இப்படி நாடு முழுவதும் ஒரே சீரான கட்டணம் இருப்பதால் நான்காவது கணிப்பு வெகு சீக்கிரமாகவே பலிக்கும். அதாவது மிகக்குறைந்த செலவில் toll-free எண் வசதிகள் கிடைக்கும். அதனால் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென கட்டணமில்லாத் தொலைபேசி எண்களை வைத்திருக்கும் - இப்பொழுது அமெரிக்காவில் இருப்பதைப் போல.]
தயாநிதி மாறனின் தொலைத்தொடர்பு சீர்திருத்தங்களுக்கு நமது பாராட்டுகள்!
ஒரே ஒரு அதிசயம்
3 hours ago
No comments:
Post a Comment