Monday, November 24, 2008

ஞானபீட விருது

41-வது ஞானபீட விருது, கொங்கணி மொழியில் எழுதும் 83 வயதாகும் ரவீந்திர ராஜாராம் கேலேகர் என்ற கோவா எழுத்தாளருக்கும் சமஸ்கிருத நிபுணர் சத்வீத் சாஸ்திரி என்பவருக்கும் இணைந்து கொடுக்கப்படுகிறது. கேலேகர், கொங்கணியைத் தவிர, மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் எழுதுபவர் என்பது குறிப்பிடத்தகக்து.

40-வது ஞானபீட விருது, ரஹ்மான் ராஹி (அவருக்கும் 83 வயதானபோது) என்ற காஷ்மீரி மொழி எழுத்தாளருக்குக் கிடைத்தது.

39-வது ஞானபீட விருது மராத்தி எழுத்தாளர் கோவிந்தா கராண்டிகருக்கும், 38-வது ஞானபீட விருது தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் கிடைத்தது.

No comments:

Post a Comment