Thursday, December 01, 2005

இட ஒதுக்கீடு - மறு பரிசீலனை மனு தள்ளுபடி

தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை செல்லுபடியாகாது என்ற அதிரடித் தீர்ப்பை அடுத்து தமிழக அரசு அந்தத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

அதையொட்டி உருவாக்கப்பட்ட ஏழு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், முந்தைய ஆகஸ்ட் 12 தீர்ப்பை மறு பரிசீலனை செய்யத் தேவையில்லை என்று சொல்லி நேற்று தள்ளுபடி செய்துள்ளது.

இதுபற்றிய தி ஹிந்து செய்தி சற்று குழப்பமாக உள்ளது.

மறு பரிசீலனை மனு தள்ளுபடி செய்யப்பட்டதென்றால் தனியார் கல்லூரிகளில் அரசுக்கு என அளிக்கப்படும் ஒதுக்கீடு (Government Quota) ஏற்றுக்கொள்ளப்படாது என்று பொருள்.

இனி மத்திய அரசு கொண்டுவரும் சட்டத்தைப் பொருத்துதான் மாறுதல்கள் இருக்கும். அப்படிக் கொண்டுவரப்படும் சட்டமும் கூட கவனமாக, நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்படுமாறு இருக்க வேண்டும்.

ஆகஸ்ட் 12 தீர்ப்பைப் பற்றிய என் மற்றுமொரு பதிவு

2 comments:

  1. உங்கள் புளாகு மிகவும் போர் அடிக்கிறது

    ReplyDelete
  2. That's a good news. There is no need to introduce the obnoxious reservation system into the private sector. The supreme court is the only sensible institution in India.

    ReplyDelete