Thursday, December 22, 2005

இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு மீதான அரசியலமைப்புச் சட்ட மாற்ற மசோதா நிறைவேறியது.

பாஜக அரசு கொண்டுவந்த மசோதாவில் ஒரு மாற்றத்தை முன்மொழிந்தது. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு மேற்படி மசோதாவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அந்தக் கல்வி நிறுவனங்களையும் மசோதாவுக்குள் இணைக்க வேண்டும் என்ற பாஜகவின் பரிந்துரை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறியது. பாஜக உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த மசோதா குடியரசுத் தலைவர் கையெழுத்திடப்பட்டதும் சட்டமாகும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசும் தத்தம் மாநிலங்களில் தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மீது சில விதிமுறைகளைப் புகுத்தலாம். அடுத்தக் கல்வியாண்டு வெகு அருகிலேயே இருப்பதால் சில மாநிலங்கள் அவசரச்சட்டங்களாக (Ordinanace) கொண்டுவந்த பின்னர் சட்டசபைகளில் சட்டங்களை இயற்றலாம்.

அதே நேரம் சில தனியார் கல்லூரிகள் இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளுக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டும் போகலாம். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த விஷயத்தின் மீதான என் முந்தைய பதிவுகள். இவை இந்த விவகாரத்தின் வரலாற்றை ஓரளவு தெரிவிக்கும்.

இட ஒதுக்கீடு பற்றிய மசோதா - update
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு - மறு பரிசீலனை மனு தள்ளுபடி
இட ஒதுக்கீடுகள் பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

No comments:

Post a Comment