Friday, September 02, 2011

அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்

அண்ணா ஹசாரேவின் போராட்டம் ஆரம்பித்ததுமுதல் அவருக்கு எதிராக அவதூறுகள் கொட்ட ஆரம்பித்தன. அண்ணா ஹசாரேவும் அவரது குழுவினரும் முன்வைக்கும் ஜன் லோக்பால் மசோதாபற்றி எனக்கு இன்றுவரை கேள்விகள் உள்ளன. மசோதாவில் மாற்றம் தேவை என்றே நான் நினைக்கிறேன். ஆனால் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் அண்ணா ஹசாரே யார் என்ற கேள்வியில் தொடங்கி, அவரது நேர்மையைச் சந்தேகிப்பது, அவர் அந்நிய நாட்டின் கைக்கூலி என்பது, அவர் இந்தப் போராட்டத்தைச் செய்தாரா - அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாரா என்று கேள்வி எழுப்புவது என்ற வகையிலேயே இருந்தன.

காங்கிரஸ் அவரைத் தாக்கியது. இடதுசாரிகள், வலதுசாரிகள் இருவருமே தாக்கினார்கள். ஆரோக்கியமான விவாதம் அவசியமே. ஆனால் கடுமையான முன்முடிவுகளுடன் தாக்கிப் பேசுபவர்கள் நிஜமாகவே விவாதத்தை விரும்புகிறர்களா என்ற சந்தேகமே ஏற்படும்.

எழுத்தாளர் ஜெயமோகன், அண்ணா ஹசாரே பற்றி எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கும் தன் இணையத்தளத்தில் தெளிவான பதில்களை அளித்தார். தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். அண்ணா ஹசாரே கைது செய்யப்பட்டதும் அதற்கான கண்டனங்கள் குவிய ஆரம்பித்தன. கேள்விகளும் குவியத் தொடங்கின. பதில்களும்தான். அரசுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு, அண்ணா ஹசாரே விடுவிக்கப்பட்டு, அவர் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கியபோது நாடெங்கிலும் ஆதரவு பெருகத் தொடங்கியது. ஆனால் கேள்விகளுக்கோ குறைவில்லை.

ஒரு கட்டத்தில் ஜெயமோகன் அண்ணா ஹசாரே பற்றி எழுதியவற்றையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டுவர முடிவெடுத்தோம். ஆனால் புத்தக எடிடிங் நடந்துகொண்டிருக்கும்போதே மேலும் பல கேள்விகளும் கட்டுரைகளும் இணையத்தளத்தில் வெளியாகின. இறுதியில் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் முடிவடைந்ததும் அது தொடர்பான ஜெயமோகனின் கட்டுரையையும் சேர்த்து புத்தகமாகக் கொண்டுவந்துள்ளோம்.

இணையத்திலேயே படித்திருந்தாலும், அச்சில் அனைத்தையும் ஒருசேரப் படிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

புத்தகம் நாளை முதல் மதுரை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

இணையத்தில் புத்தகம் வாங்குபவர்களுக்கு ஒரு வாரத்துக்கு மட்டும் பிரத்யேகமான சலுகையாக 30% விலைகுறைப்பு. ரூ. 80 மதிப்புள்ள புத்தகம் வெறும் ரூ. 56 மட்டுமே. இந்தச் சலுகை இணையம் வழியாக நேரடியாக வாங்குபவர்களுக்கு மட்டுமே.

புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும். .

3 comments:

  1. 80 - 56 = 24 rupees is the corrupted money

    ReplyDelete
  2. no comments over bjp yaa ?.. enna voi .. pongo ...

    ReplyDelete
  3. கொடுக்கற பில்டப்ல காந்தியே ரெண்டாம்பட்சமாகிடுவார் போலிருக்கு.

    ReplyDelete