Saturday, September 24, 2011

தூக்கு தண்டனை எதிர்ப்புக் கூட்டம் இன்று


கிழக்கு பதிப்பக அலுவலகத்துக்கு எதிரே உள்ள ஹேமமாலினி திருமண மண்டபத்தில் இன்று ‘தூக்கு தண்டனை எதிர்ப்புக் கூட்டம்’ என்ற தட்டியைப் பார்த்தேன். வைகோ, திருமாவளவன், நல்லகண்ணு, ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்ற அரசியல்வாதிகளும் பழ. நெடுமாறன், கொளத்தூர் மணி போன்ற தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொள்கிறார்கள். பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கலந்துகொள்கிறார். 4.00 மணிக்கு.

அடுத்ததாகத்தான் அஇஅதிமுக தலைமை அலுவலகம் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு இடம் கேட்டு நிற்கும் வெள்ளை-வெள்ளை சீருடைக் கூட்டம் ஒன்றும் நிற்கிறது.

1 comment: