Friday, May 07, 2004

அயலுறவு அலர்ட்: சிக்கிம் விஷயம் + இலங்கை பற்றி வைகோ

1. இந்தியா-சீனா சுமுக உறவுக்குப் பின்னர் சீனா அதிகாரபூர்வமாக சிக்கிம் இந்தியாவைச் சேர்ந்தது என்று தான் ஒத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. [தி ஹிந்து செய்தி] இது நடப்பதற்காக திபெத் விஷயத்தில் தனது நிலையை எந்த விதத்தில் மாற்றிக்கொண்டுள்ளது என்று இந்தியா அதிகாரபூர்வமாக இதுவரை தெரிவிக்கவில்லை.

மே 1975இல்தான் சிக்கிம் இந்திய யூனியனில் இணைந்தது. அதுவரையில் இந்தியாவின் பாதுகாப்பில் இருந்த ஒரு முடியரசாகத்தான் அந்நாடு இருந்து வந்தது. அந்த நாட்டை ஆண்டு வந்தவர் க்யால்சே பால்டென் தோண்டுப் நாம்கியால் என்னும் மன்னராவார். [இந்த பரம்பரை மன்னர்களுக்கு சோக்யால் என்று பெயர்.] இந்திரா காந்தியின் எமர்ஜென்சி நேரத்தில் சற்றே இராணுவ மிரட்டல்களுடன் சிக்கிமில் புது அரசியல் நிர்ணயச் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதைத் தொடர்ந்து ஒரு ரெபெரண்டம் (referendum) நடைபெற்று சிக்கிம் மக்கள் "ஒருமனதாக" இந்தியாவுடன் இணையச் சம்மதம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இந்தியாவின் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டு சிக்கிம் இந்தியாவின் 22வது மாநிலமாக ஏப்ரல் 1975இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்திரா காந்தி சிக்கிமை இந்தியாவுடன் இணைப்பதில் காட்டிய அவசரம், சீனா சிக்கிமைத் தன்னுடன் இணைத்துவிடக் கூடாதே என்ற பயம்தான். சீனாவும் போன வருடம் வரை சிக்கிமைத் தனி நாடாகவே கருதி வந்தது.

ஆனால் சிக்கிம், பிற வட கிழக்கு மாநிலங்கள் அனைத்துமே தங்களை இந்தியாவுடன் முழுவதுமாக இணைந்தவர்களாக இதுவரை நடந்துகொண்டதில்லை. அவ்வாறு நடக்க இந்தியாவின் முக்கியக் கட்சிகளும் அனுமதிக்கவில்லை, பெரும்பான்மைப் பொதுமக்களும் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. சிக்கிமைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?

2. நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ இலங்கையின் புது அரசைப் பற்றிய கருத்தாகச் சொன்னதாக தி ஹிந்துவில் வெளியானது:

" Talking to mediapersons at Cumbum, Mr. Vaiko said that the newly-formed Sri Lankan Government would not be able to find an amicable solution to the Tamils problem, as Chandrika Kumaratunga destroyed the peace process by advancing the general elections.

Also, the government would not last long, he said."

No comments:

Post a Comment