Wednesday, May 12, 2004

யாக்கை திரி காதல் சுடர்

காலையில் காரில் வந்துகொண்டிருக்கும்போது தெரியாத்தனமாக வானொலியில் மேற்படி பாட்டு ஒலித்துக்கொண்டிருக்கும் பண்பலை வரிசைக்கு வந்துவிட்டேன். வெங்கலக் கடையில் யானை புகுந்தது போன்ற கர்ணகடூரமான இசையில் நடுநடுவே ஒருசில சொற்கள் காதில் விழுந்தன.

தலைவலி தாள மாட்டாமல் வேறு அலை வரிசைக்கு 'தப்பித்தேன்-பிழைத்தேன்' என்று எடுத்தேன் ஓட்டம்!

இந்தப்பாடலைக் கேட்கும் எத்தனை பேர் 'யாக்கை' என்னும் சொல்லுக்குப் பொருள் தேடி அலைவர் என்று நினைக்கிறீர்கள்?

3 comments:

  1. >>பொருள் தேடி அலைவர் என்று நினைக்கிறீர்கள்--<<

    'மாட்டி ஓஸே'வைக் கூட சரியாகப் புரிந்து கொள்கிறார்கள். இரட்டைக் கிளவி எல்லாம் கற்றுக் கொடுத்தார்; இந்த மாதிரி வார்த்தை எல்லாம் அநேகரிடம் அறிமுகமாகியுள்ளதால் யாருமே தேடி அலையமாட்டார்கள் ;)

    >>கர்ணகடூரமான இசை---<<

    இருநூறு தடவை கேட்டால் பிடித்துப் போய் விடும் பத்ரி.

    ReplyDelete
  2. 'மாட்டி ஓஸே' என்றால்? இது ஏதாவது தமிழ்ப்பாட்டில் வருகிறதா?

    இந்தப் பாட்டை இருநூறு தடவை கேட்டாலும் காதும் தலையும் வலிக்கும் என்றே தோன்றுகிறது. அவ்வளவு மோசம்.

    ReplyDelete
  3. 'Secret of Success' - பாய்ஸ் பட ஆரம்பத்தில் வரும் வரிகள். 'மாற்றி யோசி' என்பதன் மரூஉ.

    முதல் தடவை கேட்டபோதும் 'ஃபனா' என்னும் அந்தப் பாடல் பிடித்திருந்தது. காட்சியமைப்பை பார்த்தபிறகு உங்களுக்கும் பிடித்துப் போக வாய்ப்பிருக்கிறது?!

    ReplyDelete