Wednesday, May 18, 2005

விடைத்தாள் மாற்றம் - மேலதிகத் தகவல்கள்

முந்தைய பதிவு

இன்றைய சன் நியூஸ் செய்தியிலிருந்து:

* சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்கள் பெயில் கேட்டுச் செய்திருந்த விண்ணப்பத்தை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.

* குற்றம் நிரூபிக்கப்பட்டால் மாணவர்களுக்கு பத்து வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்று காவல்துறை தரப்பில் சொல்கின்றனராம்.

முழுப்பேத்தலாக இருக்கிறது. எத்தனையோ மோசமான குற்றங்களுக்கு ஏழு வருடக் கடுங்காவல் தண்டனைக்கு மேல் செல்வதில்லை. இந்த விஷயத்துக்குப் போய் பத்து வருடம் என்பது முழு முட்டாள்தனம். இரண்டாவது... இது பெயில் கூடத் தரமுடியாத அளவுக்கு அப்படி என்ன மோசமான குற்றம் என்று புரியவில்லை.

20 comments:

  1. Àò¾¢Ã¢ «ñ½¡,
    À¢ÊôÀð¼ Á¡½Å÷¸Ç¢ý ¦Àü§È¡÷¸û ±ó¾ì ¸ðº¢¨Âî §º÷ó¾Å÷¸û. «øÄÐ «ó¾ Á¡½Å÷¸û ±ó¾ «¨ÁôÀ¢ý ¯ÚôÀ¢É÷ ±ýÚ §¾ÊôÀ¡Õí¸û, ¯í¸û ¿¡ðÎ ÅÆì¸ôÀÊ þÐ “«Ãº¢Âø ÀƢšíÌõ” ¿¼ÅÊ쨸 þÕì¸Ä¡õ ±ýÈ §¸¡½ò¾¢ø ÜȢŢÎí¸û ¸¡ÅüÐ¨È ÜüÚôÀÊ.

    þø¨Ä¦ÂýÈ¡ø ¿£í¸Ùõ ÌüÈò¾¢üÌ ¯¼ýÀ¡Î ±ýÚ ¯í¸û §Áø.....

    ±ý¨Éô¦À¡Úò¾Å¨Ã “ºð¼õ” ¾ý ¸¼¨Á¨Âî ¦ºö¸¢ÈÐ. (¦¸¡ïºõ ¸¡ÄÁ¡¸ ¾Á¢úò ¾¢¨ÃôÀ¼ò¾¢ø ºð¼ô À̾¢ ̨ÈÅ¡¸ ¯ûÇÐ. ²§¾ ´Õ ºó¾¢Ã§º¸÷ þÂìÌ¿÷ ¬¸¢È¡÷.)

    þÚ¾¢Â¡¸, “Å¢¨ÇÔõ À¢÷ ӨǢ§Ä§Â“ ¸¢ûÇôÀθ¢ÈÐ.

    Ò.Ó.ͧÄ,
    §¸¡Ä¡Äõâ÷.

    ReplyDelete
  2. நான் சிறை தண்டனையில் தவறில்லை என்று சொன்னேன்; இருப்பினும் இது மிக அதிகம். பெயில் வழங்கப்பட வேண்டும். அதிகபட்சம் ஆறு மாதங்கள் தண்டனை (மூன்று மாதங்களில் நன்னடத்தைக்காக வெளிவரக் கூடிய சாத்தியத்தோடு) என்பது தான் முறையாக இருக்கும்.

    ReplyDelete
  3. Quick clarification: மே 12, 2005 செய்திப்படி, முதலில் கைதான 11 மாணவர்கள் பெயிலில் வெளிவந்துள்ளனர் என்று தெரிகிறது.

    ஆனால் நிச்சயமாக இன்றைய தொலைக்காட்சிச் செய்தியில் நான் கேட்டது உண்மையே. எனவே பெயில் பற்றிய விஷயத்தை உறுதி செய்துகொண்டு எழுதுகிறேன்.

    ReplyDelete
  4. 1)Brokers has to be punished
    2)10 years is too much

    ReplyDelete
  5. ok. இதுதான் நான் அறிந்துகொண்டது. முதலில் கைதான 11 மாணவர்களுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அடுத்துக் கைதான இரண்டு மாணவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை இதுவரையில். இன்னமும் இரண்டு மாணவர்கள் (ஒருவர் பெண்) தாம் கைதாக்கப்படுவோம் என்று கருதி முன்ஜாமீன் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  6. //முழுப்பேத்தலாக இருக்கிறது.//
    அப்படியே நானும் நினைக்கிறேன்..

    ReplyDelete
  7. this is ridiculous. எதேச்சையாக், தீம்தரிகிட வாசித்த போது, இந்த விஷயம் பற்றி ஞாநி தலையங்கத்தில் எழுதியிருந்ததை வாசித்தேன். லட்சங்கள் என்றெல்லாம் பேசப்படுகின்றன. இவ்வளவு பணம், மாணவர்களுக்கு எப்ப்படிக் கிடைத்திருக்கும்? பெற்றோர்களும் இதிலே சம்மந்தப் பட்டிருக்க வேண்டும் என்று எழுதி இருந்தார். இது மிக மிக, அதிக பட்ச தண்டனை. அவ்ர்கள், இதை மறுபரிசீலனை செய்தே ஆகவேண்டும்.

    ReplyDelete
  8. லட்சங்கள் என்றெல்லாம் பேசப்படுகின்றன. இவ்வளவு பணம், மாணவர்களுக்கு எப்ப்படிக் கிடைத்திருக்கும்? பெற்றோர்களும் இதிலே சம்மந்தப் பட்டிருக்க வேண்டும் என்று எழுதி இருந்தார்.

    ReplyDelete
  9. பத்ரி இப்போதெல்லாம் நிறைய அவசரப்பட்டு (கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டும்) பதிந்து விடுகின்றார். ஆரம்பத்தில் இருந்தே, நடந்த குற்றம் என்னவென்றே சரியாக அறிந்து கொள்ள முயற்சிக்காமல், இது பெரிய தவறே இல்லை, உப்பு சப்பில்லாத சமாச்சாரம் என்றெல்லாம் கூறி, ரிப்போர்ட் கார்டில் கையெழுத்து போடுவதற்கெல்லாம் சிறை தண்டனையா என்ற ரீதியில் பொருத்தமில்லாத உதாரணங்களை எல்லாம் சொல்லிக் கொண்டு வந்தார். இன்றும் ஏதோ ஒரு தொலைக்காட்சி செய்தியை கேட்ட மாத்திரத்தில் உணர்ச்சிவசப்பட்டு முழுப்பேத்தல், முட்டாள்தனம் என்றெல்லாம் எழுதிவிட்டார்.

    இப்போது அவர்களுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. முன் ஜாமீன் மறுக்கப்படுவது இம்மாதிரி குற்றங்களில் அவசியமே. இன்னும் இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து நபர்களும் பிடிபடவில்லை. இன்னும் நிறைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில், எல்லோருக்கும் முன் ஜாமீன் அளித்தல் விசாரணைக்கு தடையாகவே இருக்கும்.

    இந்த வழக்கில் இன்னும் நிறைய அம்சங்கள் இருக்கின்றன. குற்றப்பத்திரிக்கை, வழக்கு, விசாரணை அதன் பிறகுதான் தீர்ப்பு என்ற ஒரு இறுதி அம்சம் இருக்கின்றது. அதற்குள்ளாகவே, யாரோ சொன்னார்கள் என்று 10 வருடம் ஜெயில் தண்டனை என்று தீர்ப்பாகி வந்துவிட்டது போல் பத்ரி எழுத, அனைவரும் உணர்ச்சி வசப்படுவது ஆச்சரியமாய் இருக்கின்றது. You too Badri.??!!

    this is ridiculous. என்று ஐகாரஸ் எழுதியுள்ளார். எதைச் சொல்லுகின்றார் என்றுத் தெரியவில்லை. மாணவர்கள் செய்த குற்றத்தையா..? இந்த பதிவினையா..? அல்லது வராத தீர்ப்பையா..?

    // லட்சங்கள் என்றெல்லாம் பேசப்படுகின்றன. இவ்வளவு பணம், மாணவர்களுக்கு எப்ப்படிக் கிடைத்திருக்கும்? பெற்றோர்களும் இதிலே சம்மந்தப் பட்டிருக்க வேண்டும் //

    நீங்கள் சொல்லுவது சரிதான். பெறோர்களின் சம்பந்தமும் இருக்கலாம். நீங்களாவது ஒத்துக் கொள்கின்றீர்களா.. நடந்தது ஒரு பெரிய குற்றம்தான், தெரியாமல் செய்யப்பட்ட தவறு இல்லை என்று.

    இதற்கு பின்னணியில் ஒரு பெரிய கூட்டமே இயங்கிக் கொண்டு இருக்கின்றது. விசாரிக்க விடுங்கள். எல்லா உண்மைகளும் வெளிவரட்டும். அதற்குள்ளாகவே மாணவ சமுதாயத்திற்கு பரிந்து பேசுவதாக எண்ணிக் கொண்டு, வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பிவிடாதீர்கள்.

    - ஞானி alias ஞானசூனியம்

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. பு.மு.சுரேஷ், மலேசியா

    இப்போதுதான், சிறிது சிரமத்திற்கு பின், உங்கள் பின்னூட்டத்தைப் படித்தேன். சிறு திருத்தம்,

    விளையும் களை முளையிலேயே கிள்ளப்படுகின்றது என்று மாற்றிக் கொள்ளுங்கள்.

    - ஞானி

    ReplyDelete
  12. இவனுங்க உங்க பொண்டாட்டிய ஓத்தாலும் பரவால்லியா? படிச்சிட்டா உங்களுக்கு மூளை இல்லையா?

    ReplyDelete
  13. ஞானி (Mr. Gnani) அவர்களே,

    முதலில் உங்கள் நாட்டுச் சட்டத்தில் இம்மாதிரியான செயலுக்கு என்ன தண்டனை. எந்தச் சட்டத்தில் கீழ் பதிவு செய்துள்ளனர் என்பதை முதலில் விவரம் தாருங்கள். இது அநேகமாக 'Forgery' பிரிவு என்றால் கிரிமினல் என்றே நினைக்கிறேன். அதன் விவரம் தெரிந்தால்தான் நமது மறுமொழிகள் சரியானதாக இருக்கும்.

    மேலும் நீங்கள் பிணை கிடைத்துவிட்டதாக கூறியுள்ளீர்கள் எப்போது? பத்ரி அச்செய்தியை இன்னும் பதியவில்லையே?

    சரி இறுதியாக 'களை' விளையாதே,

    உங்கள் கூற்றுப்படி, களையா இருந்தால் வேரோட பிடுங்கனும். (அவ்வளவு பெரிய குற்றவாளியா இம்மாணவர்கள்.) ஏன்னா களையை கிள்ளினால் அழியாது கிளை விட்டு பலமாகதான் உயிர் வாழும்.

    புமு.சுரேஷ
    மலேசியா.

    ReplyDelete
  14. சுரேஷ் அவர்களுக்கு,

    //மேலும் நீங்கள் பிணை கிடைத்துவிட்டதாக கூறியுள்ளீர்கள் எப்போது? பத்ரி அச்செய்தியை இன்னும் பதியவில்லையே?//

    பின்னூட்டத்தில் சொல்லியுள்ளார்.

    { Badri said...
    ok. இதுதான் நான் அறிந்துகொண்டது. முதலில் கைதான 11 மாணவர்களுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.}


    //உங்கள் கூற்றுப்படி, களையா இருந்தால் வேரோட பிடுங்கனும். //

    உண்மையாய் உழைத்து, உயிரைக் கொடுத்து, மிகுந்த கஷ்டங்களுக்கு இடையில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு மத்தியில் இது போன்ற மாணவர்கள் நிச்சயம் களைகள் தான். இவர்கள் வேரோடு பிடுங்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசையும். ஆனால், கிள்ளுவதற்கே இங்கே ஒரு கூட்டம் எதிர்க்கின்றதே.

    - ஞானி

    ReplyDelete
  15. அவசர அவசரமாக எழுதுகின்றேன்.

    வேரோடு களையப்பட வேண்டும் என்று சொன்னதற்கு, அந்த மாணவர்களுக்கு மரண தண்டனைக் கொடுக்க வேண்டும், தூக்கிலிட வேண்டும் என்று சொல்கின்றீர்களா என்று கேள்விகள் கேட்டு பின்னூட்டம் கொடுக்காதீர்கள்.

    குற்றங்கள் வேரோடு களையப்பட வேண்டும். இதற்கான மூல காரணங்கள் கண்டறியப்பட்டு, நிர்வாகத்தில் இருக்கும் ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும். தவறு செய்தோருக்கு கண்டிப்பாய் தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். தவறுகள் தொடராமல் இருக்க, செய்தால் பெரிய தண்டனைக் காத்திருக்கின்றது என்ற பயம் ஒரு விதத்தில் மிகவும் உதவும்.

    இது குறித்து நிறைய பேசியாகிவிட்டது. இனி எது பேசினாலும் அரைத்த மாவையே அரைப்பதாய்தான் இருக்கும். இத்துடன் முற்றுப் புள்ளி வைத்துவிடுவோம். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, வழக்கு முடிந்து தீர்ப்புகள் வரட்டும். அதன் பிறகு தேவைப்பட்டால் நமது விவாதத்தை தொடரலாம்.

    - ஞானி

    ReplyDelete
  16. //இவனுங்க உங்க பொண்டாட்டிய ஓ.... பரவால்லியா? படிச்சிட்டா உங்களுக்கு மூளை இல்லையா?//
    பத்திரி அவர்களே1 இந்த சொற்றொடர் யாருக்காக சொல்லப்பட்டது? எனதுப் பதிவுக்கு கீழ் வந்ததனால்தான் இந்தக் கேள்வி எனக்கா இல்லை உங்களைப் கேட்ட கேள்வியா? காரணம் உங்களை கேட்டுயிருந்தால் நீங்களே காரமா பதில் கொடுப்பீர்கள் என கருதுகிறேன். இந்த பதில் யாருக்காக சொல்லப்பட்டாலும் கண்டிக்கப்பட வேண்டிய பதில் என்பதில் எவ்வித ஐயப்பாடுயில்லை. கண்டிப்பாக அவர் படித்திருந்தால் பதில் படிப்பது மாதிரி இருந்திருக்கும்.

    இவற்றைப் படிக்கும் பெண்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் இன்னும் வியப்பாக உள்ளது?

    ReplyDelete
  17. கண்டுகொள்ளாதீர்கள் சுரேஷ். இது போன்ற அநாகரிகமான பின்னூட்டங்களை அலட்சியப்படுத்துங்கள். நாகரிகமாக எழுதக்கூடிய மாண்ட்ரீஸரின் பின்னூட்டத்தை ஏதோ காரணத்திற்காக (என்ன எழுதியிருந்தார் என்று தெரியவில்லை) நீக்கியிருக்கும் பத்ரி, இதனை இன்னும் நீக்காமல் இருப்பது வியப்பாய் இருக்கின்றது. ஒருவேளை கவனிக்கவில்லையோ?

    - ஞானி

    ReplyDelete
  18. This post has been removed by the author.

    என்றால் மாண்ட்ரீஸராலேயே நீக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

    அந்த அசிங்கத்தை நீக்காமலிருக்க - இதுல்ல என்ன பெரிசா காரணம் தேடவேண்டியதிருக்கிறது. மனம் புண்படியும்படியான இதுபோன்ற பின்னூட்டங்கள் எப்படித்தான் இடுகிறார்களோ!?

    ReplyDelete
  19. idhuve maruthuva kalluri manavargaklaga irundhal enna aagi irukum.? ippadi vakkalath vanguvaargala?

    ReplyDelete