Saturday, October 15, 2005

சுந்தர ராமசாமி: 30 மே 1931 - 14 அக்டோபர் 2005

தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவரான சுந்தர ராமசாமி அமெரிக்காவில் இன்று அதிகாலை இந்திய நேரம் (நேற்றைய அமெரிக்க நாள் கணக்கு) காலமானார்.

காலை முதல் இதுபற்றிய குறுஞ்செய்திகள், தொலைபேசித் தகவல்கள் வந்தன. அப்பொழுது இந்தத் தகவலை பதிவில் எழுத நினைத்தேன். ஆனால் மனுஷ்யபுத்திரன் பதிவில் இந்தத் தகவல் இருந்தது, ஆனால் blogger தொழில்நுட்பக் கோளாறால் அந்தப் பதிவு அழிந்துவிட்டது என நினைக்கிறேன்.

விரைவில் முழுமையான பதிவு வரும்.

10 comments:

  1. வருந்துகிறேன்... சுந்தர ராமசாமி அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...

    ReplyDelete
  2. வருத்தமான செய்தி..ஆழ்ந்த அனுதாபங்கள்!

    ReplyDelete
  3. /ஆனால் மனுஷ்யபுத்திரன் பதிவில் இந்தத் தகவல் இருந்தது/

    சுரா மறைவு வருத்தமான செய்தி. நேற்றே மனுஷ்யபுத்திரனின் பதிவு தமிழ்மணத்தில் தென்பட்டு, படிக்க இயலாமல் பிறகு ஒரேயடியாக காணாமல் போனதால் ஒருவேளை வதந்தியாக இருக்கலாம் என்று ஆறுதலாக இருந்தது.

    புதுமைப்பித்தனைக் குறித்து அவர் எழுதிய கட்டுரைக்கு "காற்றில் கலந்த பேரோசை" என்று தலைப்பு வைத்தார். அச்சொற்றொடர் சுராவுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  4. வருத்தமாக உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்.

    ReplyDelete
  5. Mail from Kannan, his son:

    ----

    Dear friend

    sundararamaswamy took his last breath very peacefully today, Friday
    the 14th of October at 1:35 p.m. Pacific Time. His lungs could not
    recover from the medical condition pulmonary fibrosis and over the
    course of this week lost their ability to function even with
    ventilator support. he was 74.
    We take a measure of comfort knowing he had the best medical care and
    that his last days with us were as comfortable and peaceful as
    possible. Our family owes a huge a debt of gratitude to the
    exceptional team of specialists (pulmonologist, cardiologist and
    infectious disease specialist) and the support team of Critical Care
    Unit and ward nurses, at Dominican Hospital, Santa Cruz, CA, who
    attended to his every medical and emotional need. Their caring,
    sensitivity and warmth made our last days with him bearable.

    he will be brought to his home in nagercoil in a few days.

    mrs kamala, Thaila , Thangu and kannan.
    October 14, 2005

    Time: Local time 1:35PM (Pacific daylight time) on Friday 10/14/05

    which was 2:05 AM IST on 10/15/05 (Saturday) in India.

    Location: Dominican Hostpital,Santa Cruz,CA

    Medical cause: Pulmonary Fibrosis

    ReplyDelete
  6. சுந்தரமூர்த்தி, சிறு திருத்தம் - காற்றில் கலந்த பேரோசை, ஜீவாவின் மறைவை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை.

    ReplyDelete
  7. //காற்றில் கலந்த பேரோசை, ஜீவாவின் மறைவை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை. //

    ஸ்ரீகாந்த்,
    திருத்தத்துக்கு நன்றி. பல ஆண்டுகளுக்கு முன் படித்தது. அதே தொகுப்பில் புதுமைப்பித்தனைப் பற்றியும் ஒரு கட்டுரை படித்த நினைவில் ஏற்பட்ட கோளாறு.

    ReplyDelete
  8. சுரா வை நான் அறிவது ஒரு நாள் புத்தகக் கடை முதலாளி மூலமாகத்தான் ,அவரின் புளிய மரத்தின் கதையும் ,ஜெ ஜெ ஒரு குறிப்புகளும் தான் அவரைப் பற்றிய என் மதிப்பை கூட்டியது .
    அவரின் மறைவு நவீன இலக்கிய உலகின் இழப்பு கூட என அவரின் தீவிர விமர்சர்கள் கூட ஒத்துக்கொள்வர்.

    ReplyDelete
  9. சு.ராவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அஞ்சலிகள்!

    ReplyDelete