கராத்தே தியாகராஜன் என்று பெயரிலேயே அடிதடியைத் தாங்கி நிற்கும் சென்னை நகரத் துணை மேயர் (அதிமுக), கடந்த பத்து தினங்களாகத் தலைமறைவாக இருக்கிறார். இதைப்பற்றி தமிழ்ப் பத்திரிகைகளும் சன் டிவி சானலும்தான் கவலைப்படுவது போலத் தெரிகிறது. தி ஹிந்து கண்டுகொள்ளவில்லை. (அல்லது கண்டுகொண்டிருந்து என் கண்ணில்தான் படவில்லையோ என்னவோ!)
திமுகவின் ஸ்டாலின் மேயர் பதவி செல்லாது என நீதிமன்றத் தீர்ப்பு வந்ததும், மிஸ்டர் கராத்தே முன்னுக்கு வந்தார். இவருடைய வேலை எப்படியாவது நகரசபைக் கூட்டத்தை நடத்தவிடாமல் செய்வது என்று தோன்றியது. கூட்டம் தொடங்கியவுடனேயே கருணாநிதியைப் பற்றி ஏதாவது விஷமமான ஸ்டேட்மெண்ட். உடனே அதற்காகவே காத்திருந்தது போல திமுக உறுப்பினர்கள் சத்தம் போடுவார்கள். "குண்டுகட்டாக" (இப்படித்தான் சன் டிவி சொல்கிறது), திமுக உறுப்பினர்கள் தூக்கி எறியப்படுவார்கள். "இது ஜனநாயகப் படுகொலை" என்று அவர்களும் சன் டிவி கேமராவுக்குச் சொல்வார்கள். கூட்டம் காலவரையரை இன்றி ஒத்திப் போடப்படும். அல்லது எல்லா மசோதாக்களும் நிறைவேற்றப்படும்.
இப்படி தன் தலைவியின் சொல்படி நடந்துகொண்டவர் தனியாக - மேலிடத்துக்குத் தெரியாமல் - என்ன செய்தாரோ என்னவோ. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டாம். தன்மீது குற்றச்சாட்டை சுமத்த கார்பொரேஷன் கமிஷனருக்கு எந்தவித அனுமதியும் இல்லை என்கிறார். இந்தப் பதவிக்கெல்லாம் கவர்னரிடம் அனுமதி பெற்றுத்தான் குற்றம் சுமத்தவேண்டுமா என்ன?
இப்பொழுது தலைமறைவாக இருக்கும் காரணம், காவல்துறையிடம் மாட்டினால் "அம்மாவை மகிழ்விக்க", இவரைப் பின்னிப் பெடலெடுத்து விடுவார்கள் என்பதாலும் இருக்கலாம். இல்லாவிட்டால் வழக்கமான, "இவரிடம் கஞ்சா இருந்தது" என்ற அரிய கண்டுபிடிப்பை முன்வைத்து இவரை நார்கோடிக்ஸ் வழக்கில் உள்ளே தள்ளிவிட வாய்ப்பு இருக்கிறது.
அடுத்த முறை சென்னை நகரமன்றத் தேர்தலின்போதாவது நிறைய சுயேச்சைகளுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும். உள்ளாட்சித் தேர்தலிலாவது கட்சிகளை ஒழித்தால் நன்றாக இருக்கும்.
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதிக்கு வணக்கம்
4 hours ago
enna badri ipdi yeluthareenga.. pathu .. yarachum tamil nattla irukara ella court-leyum case pottura poranga..
ReplyDelete--
Jagan
கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்களில் கட்சி இல்லாத போது, நகராட்சி மற்றும் மாநராட்சிகளில் மட்டும் எதற்கு கட்சி என்று புரியவில்லை..
ReplyDelete