Tuesday, October 18, 2005

உத்தரப் பிரதேசம் மாவ் கலவரம்

உத்தரப் பிரதேசத்தில் மாவ் (Mau) என்னும் இடத்தில் அக்டோபர் 14 அன்று நடந்த இந்து-முஸ்லிம் கலவரத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். யாருக்கும் யாருக்கும் இடையே சண்டை, என்ன நடந்தது போன்ற தகவல்கள் ஊடகங்கள் மூலம் நமக்குக் கிடைக்கவில்லை. "Communal clash", "இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல்" போன்றுதான் தகவல்கள் வந்தன.

இன்று காசிபூர் சுயேச்சை எம்.எல்.ஏ முக்தார் அன்சாரி என்பவர் மீது வன்முறையைத் தூண்டியதாக உ.பி அரசு வழக்கு தொடுத்துள்ளது. தடையுத்தரவு இருந்த நேரத்தில் திறந்த ஜீப்பில் தனது ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் பயணம் செய்து தனது பேச்சின் மூலம் வன்முறையைத் தூண்டினார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு.

இன்று என்.டி.டி.வியில் இவருடனான தொலைபேசிச் செவ்வி நடந்தது. பேசும்போது, தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றார். ஆனால் பின்னால் ஓடும் படத்தில் இவர் ஆக்ரோஷமாக ஜீப்பில் நின்றுகொண்டு கைகளை ஆட்டி ஆட்டிப் பேசுவது காண்பிக்கப்பட்டது. திடீரென என்.டி.டி.வியை தன் தொலைக்காட்சித் திரையில் பார்த்துவிட்டு, "என்ன, என்னென்னவோ காண்பிக்கிறீர்கள்?" என்று கேட்டார். சற்றே தடுமாறிய என்.டி.டி.வி செய்தி வாசிப்பவர் உடனடியாக காட்சிகளை மாற்றிவிட்டு வேறு சில கேள்விகளைக் கேட்டார். தடையுத்தரவு அமலில் இருக்கும்போது ஜீப்பில் போய் என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு, நான் காயம் பட்டிருந்த ஒருவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றுகொண்டிருந்தேன், நான் ஜீப்பில் செல்லும்போது தடையுத்தரவு அமலில் இல்லை, என்றார். ஆனால் காட்டப்பட்ட படத்துண்டில் காயம் பட்டவர் யாரும் ஜீப்பில் இருந்தது போலத் தெரியவில்லை.

மதக்கலவரம் நடந்தால், அது பற்றிய விவரங்களை ஆங்கிலப் பத்திரிகைகள்தான் வெளிப்படுத்துவதில்லை. உள்ளூர் உருது, ஹிந்திப் பத்திரிகைகள் சக்கைபோடு போட்டு, உள்ளதுடன் இல்லாததும் பொல்லாததும் சேர்த்து எழுதுவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். இணையத்தில் தேடி மேற்கொண்டு விவரங்களைச் சேகரிக்க வேண்டும்.

2 comments:

  1. இன்று கிடைத்த செய்திகள் படி பாஜகவின் உ.பி. மேலவை உறுப்பினர் ராம்ஜி சிங் மீதும் உ.பி. போலிஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

    அன்சாரி, பாஜகவின் கோரக்பூர் எம்.பி யோகி ஆதித்யநாத் மீதும் குற்றம் சாட்டுகிறார்.

    மக்கள் பிரதிநிதிகள் எத்தகு மாணிக்கங்களாக உள்ளனர்!

    ReplyDelete
  2. The only thing more dangerous than treating minority as second class citizens is to treat the majority as second class citizens. the politics of so called secular parties like congress, kazhagams, mulayam and laloo that show open favoritism to muslims is a dangerous thing. we have seen how shah bano has resulted in thousands of deaths in the last 20 years. we are repeating the same mistake again and it's the innocents (whether hindu or muslim) that pay the price and not the politicians and the elites of both communal and 'secular' persuations.

    ReplyDelete