Friday, October 28, 2005

மழை ஓய்ந்தது? புயல் அடிக்கவில்லை?

இன்று காலை பார்க்கும்போது மழை சுத்தமாக நின்றிருந்தது. தெருவில் நேற்று இரவே தண்ணீர் வடிந்திருந்தது. மரங்கள் எல்லாம் பத்திரமாக உள்ளன. புயல் அடிக்கவில்லையா? அல்லது சென்னையில் அதனால் சேதம் எதுவுமில்லையா? தெரியவில்லை. வீட்டில் ஒரு phase மின்சாரம் இல்லை. தொலைக்காட்சி இல்லை.

வானம் நிர்மலமாக உள்ளது. இன்று மழை இருக்காது என்று தோன்றுகிறது.

இன்று சென்னை மீண்டும் வேலை செய்யத் தொடங்கும். பள்ளிகள் இருக்குமா என்று தெரியவில்லை. அலுவலகங்கள் இயங்கும். தெருக்களில் விழுந்த மரங்களை அகற்ற இன்று முழுவதும் ஆகலாம்.

1 comment:

  1. Thodarntha mazaiyaal 2,3 natkalaaga javulik kadaikalil viyaabaaram dulladitthathu! Intru chennai kadaikalil viyaabaara mazaip pozinthathu! puthu thuni edukka makkal vellam alai mothiyathu.....intha nilai innum 4,5 natkal needikkalaam enat therikirathu.....

    ReplyDelete