Friday, January 06, 2012

பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை

கம்யூனிஸம் மீதான இரு விமரிசனப் புத்தகங்களை இந்த ஆண்டு கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது.

ஒன்று 1945-ல் எழுதப்பட்டது. எழுதியவர் ஜார்ஜ் ஆர்வெல் என்ற புனைப்பெயர் கொண்ட பிரிட்டிஷ் எழுத்தாளர். அவர் எழுதிய புத்தகமான அனிமல் ஃபார்ம் என்பது, ஸ்டாலினிய ரஷ்யாவை நையாண்டி செய்த புத்தகம். கம்யூனிஸ ஆதரவாளர்களே ஸ்டாலினின் செயல்பாட்டால், அடக்குமுறையால் அதிர்ந்துபோயினர். ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணையில், விலங்குகள் மனித அடக்குமுறைக்கு எதிராகப் போராடும். ஒரு குறிப்பிட்ட பண்ணையில், விலங்குகள் மனிதரைத் துரத்திவிட்டு ‘ஆட்சி’யைப் பிடிக்கவும் செய்யும். ஆனால் பின்னர் அந்த விலங்குகளில் பன்றிகள் மட்டும் பிறவற்றை அழுத்திக் கீழே தள்ளிவிட்டு தாம் மட்டும் சுகபோகத்தில் வாழும். மாற்றுக்குரல் எடுபடாமல் இருக்க, துரோகிப் பட்டம் கொடுத்துத் துரத்தும். படுகொலைகள் செய்யும். பஞ்சம் ஏற்படாவிட்டாலும் பசித் துயரம் ஏற்படும். சுரண்டல் அதிகரித்துக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் பன்றிகள், தாம் எதிர்த்துப் போராடிய மனிதர்களுடனேயே கூட்டணி அமைத்துக்கொள்ளும். பிற விலங்குகளுக்கு, பன்றிக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாமலேயே போய்விடும் என்பதாகக் கதையை முடித்திருப்பார் ஆர்வெல்.

இது ஏற்கெனவே தமிழில் பிறரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட மொழிபெயர்ப்பைச் செய்திருப்பவர் பி.வி.ராமஸ்வாமி. இதுதான் இவரது முதல் மொழிபெயர்ப்பு. படித்துப் பாருங்கள். ஆச்சரியம் அடைவீர்கள். அடுத்த பதிவில் இந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளைக் கொடுக்கிறேன்.

*

பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் என்ற புத்தகத்தில் அரவிந்தன் நீலகண்டன், கம்யூனிஸம் அதன் அடிப்படையிலேயே அழிவைக் கொண்டிருக்கிறது என்று வாதிடுகிறார். மார்க்ஸிலிருந்து தொடங்கி, எங்கெல்ஸ் வழியாக, இன்றுவரை கம்யூனிஸம் எங்கெல்லாம் பேசப்பட்டுள்ளதோ, எங்கெல்லாம் செயல்முறையில் இருந்துள்ளதோ, அங்கெல்லாம் அது திரிந்து, அங்குள்ள மக்களுக்குப் பேரழிவைத் தவிர வேறு எதையும் கொடுத்ததில்லை என்பதை ஆதாரங்களுடன் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

பின்னர் ஒரு கேள்வி எழலாம். ஆனாலும் ஏன் பல நல்ல உள்ளங்களை கம்யூனிஸம் வசீகரிக்கிறது. சக மனிதனின் துன்பத்தையும் அவன் சுரண்டப்படுவதையும் எதிர்ப்பவர்கள்தானே கம்யூனிஸச் சித்தாந்தத்தால் வசீகரிக்கப்படுகிறார்கள்? ஆனால் அதன்பின் என்ன ஆகிறது? இதற்கான பதிலையும் அரவிந்தன் விளக்குகிறார்.

இந்தப் புத்தகமும் சர்ச்சையை எழுப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

15 comments:

  1. Atleast you used to pretend earlier that you are not biased towards any ideology. Is there anything coming up supporting Communism?

    ReplyDelete
  2. I am continuing to pretend:-) Yes. Our office comrade Marudhan is organizing a few books which you can expect in 2012.

    ReplyDelete
  3. அரவிந்த நீலகண்டனை usual suspects லிஸ்டில் சில ஆண்டுகளுக்கு முன்னரே சேர்த்துவிட்டார்கள் தோழர்கள். அனிமல் ஃபார்மை மொழிபெயர்த்த புதியவரை அந்த லிஸ்டில் கூடிய சீக்கிரம் சேர்த்துவிடுவார்கள்.

    நீங்கள் எந்தக் கொள்கைக்கும் சார்பற்றவராக இருங்கள் சந்தோசம். ஆனால் கம்மூனிச எதிர்ப்பு மட்டும் செய்யுங்கள். தப்பித் தவறியும் கம்மூனிசத்துக்கு ஆதரவு நிலையை எடுத்துவிடாதீர்கள். அது போதும்.

    ReplyDelete
  4. //Is there anything coming up supporting Communism? //

    Moral balancing act does not warrant supporting the other side - even if its evil - just for the sake of it. Supporting communism, especially the Mao-Stalin-Che variety can no way balance anything.

    Communism, when not just a theory in books but applied to society causes more damage to both the human civilzation and to the Human spirit than all the religions put together. History stands testimony to it in full bright red colour. Only fools do not see it!

    Iam looking forward to read this book!

    ReplyDelete
  5. பத்ரி சார், கிழக்கு பதிபக்கதிளிருந்து இப்படி நான் எதிர்பாகல ......தோழர் மருதன் கண்டிப்பாக ....ஒரு ரிவிவு எழுதவேண்டும் சார்.

    ReplyDelete
  6. ஆட்சி அதிகாரம் கைக்கு வரும்வரை கம்யூனிஸ்டுகள் நல்லவர்களே. பின்னர் போதை வந்துவிடுகிறது. அதன் பின்னர் நல்லகண்ணு போன்ற நல்லவர்களுக்கு அங்கு இடமற்றுப்போய்விடுகிறது. பின்னர் பன்றிக்கூட்டங்கள் மட்டுமே அங்கு அனுபவிக்கும்.

    ReplyDelete
  7. சர்ச்சை ஸ்பெஷல்னு மொத்தமா ஒரு பண்டல் ஆஃப்ர் அனவ்ன்ஸ் பண்ணினா ஏழை எளியோர் வாங்கிக்க வசதியா இருக்கும்ல

    ReplyDelete
  8. superb. I could not move beyond a few pages, since years. This translation could make me read it in full.

    Waiting to get my hands on both the books.

    ReplyDelete
  9. Recycling robert conquest and others works is easy but critically engaging with marxism is difficult for petty minds. Time and again he is proving it.
    capitalism,colonisation, caste system too have caused havoc and their victims can say the same thing about them.The Hindu tradition too has been part of systems that have denied rights to millions.

    ReplyDelete
  10. //
    The Hindu tradition too has been part of systems that have denied rights to millions.
    //

    There are atleast a 1000 books that talks about this. Could you list 10 decent books in tamil that talks about communism and its flaws ?

    ReplyDelete
  11. இந்த புத்தகம் மட்டும் நிறைய வித்துச்சுண்ணா, பத்ரி/கிழக்கு விபச்சார நூல் விடுதி ஆரம்பிக்கலாம்.
    --லெனின்

    ReplyDelete
  12. //
    இந்த புத்தகம் மட்டும் நிறைய வித்துச்சுண்ணா, பத்ரி/கிழக்கு விபச்சார நூல் விடுதி ஆரம்பிக்கலாம்.
    --லெனின்
    //
    முடிந்தால் உன் சக கம்மூனிஸ்டு மாமாப்பயலுகளிடம் சொல்லி இந்த புக்கை எதிர்த்து ஒரு கட்டுரை எழுதிப் போடு...பார்க்கலாம்.

    -Adam Smith.

    ReplyDelete
  13. //இது ஏற்கெனவே தமிழில் பிறரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட மொழிபெயர்ப்பைச் செய்திருப்பவர் பி.வி.ராமஸ்வாமி. இதுதான் இவரது முதல் மொழிபெயர்ப்பு. படித்துப் பாருங்கள். ஆச்சரியம் அடைவீர்கள். அடுத்த பதிவில் இந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளைக் கொடுக்கிறேன்.//

    Waiting.

    ReplyDelete
  14. Let all 'anony's come off their masks and present in proper words what they want a Publisher or Public should do.

    ReplyDelete
  15. வலது சாரி பிற்போக்கு சிந்தனையாளரின் வரலாற்று புரட்டுக்கு உன்னைப் போன்ற கைக்கூலிகளும் சுய மரியாதையை விற்றுப் பிழைக்கும் அடிவருடிகளுக்கு வேண்டுமானால் இது புத்தகம் எங்களை போன்ற உழைப்பாளி வர்கத்துக்கு இது ஒரு குப்பை வாரி எடுத்து உன் விபச்சார (வீட்டிற்கு) அலமாறிகளில் தூபம் காட்டு தூ...மானங்கெட்டவனே.

    ReplyDelete