Wednesday, April 28, 2004

இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 3

தமிழகத்தின் தனி திராவிட நாடு கோரிக்கைக்கும், இலங்கையில் தனி ஈழம் கோரிக்கைக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன.

* பெரியார் இந்திய சுதந்திர தினத்தை துக்க தினம் என்றவர். அன்றுமுதல்தான் தமிழர்களின் அடிமைத்தனம் ஆரம்பமாகிறது என்பது அவர் கருத்து.
* பின்னர் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திமுக 1967இலிருந்து தமிழகத்தில் ஆட்சியில் இருந்ததோடு மட்டுமின்றி மத்தியிலும் ஆட்சியின் அங்கமாக இருந்தது.
* நாளடைவில் தனிநாடு கோரிக்கை நீர்த்துப்போய்விட்டது. ஒருகாலத்தில் தனிநாடு கேட்டவர்கள் இன்று சென்னை கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவதில் தயங்குவதில்லை.
* தேவ கௌடா இந்தியப் பிரதமரானதுதான் இந்திய அரசியலில் மிக முக்கியமான நாள். அன்றுதான் ஹிந்தியே பேசத்தெரியாத ஒருவர் இந்தியாவின் பிரதமரானார்.
* மிகுந்த பதட்டத்தோடும், வன்முறையோடும் தொடங்கிய இந்தியா நாளடைவில் தேசியவாதம் வலுப்படுமாறு மாறியுள்ளது.

* இலங்கை இதற்கு எதிர்மறை. தொடக்கம் அமைதியுடனும், ஒருவரை ஒருவர் மதிக்குமாறும் இருந்தது போய் இன்று எதிரெதிரே இருந்தவாறு நாட்டைப் பிரிக்கும் கோரிக்கை வந்துள்ளது. Concensus politics -> Competitive politics -> Conflicting -> Conflagration

===

குறுகிய வரலாற்று விளக்கத்திற்குப் பிறகு தற்போதைய நிலையின் இந்தியா என்ன செய்யவேண்டும் என்ற தனது கருத்துகளுக்கு வந்தார்.

* இந்தியா நேரடியாக ஈடுபடவேண்டும்
* ஏற்கனவே இந்தியாவின் 'இந்தியன் ஆயில்' நிறுவனம் இலங்கையில் பெட்ரோல் பொருட்கள் விற்பனை செய்யும் உரிமத்தை பெற்றுள்ளது. பல இந்திய வர்த்தக நிறுவனங்கள் இலங்கையில் கால் பதிக்க ஆரம்பித்து விட்டன.
* இந்தியாவும், இலங்கையும் பாதுகாப்புத்துறையில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன (? அல்லது ஒப்பந்தத்திற்கான திட்டத்தில் இறங்கியுள்ளன?)
* முன்னர் இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களைக் கடத்திச் சென்றனர், இப்பொழுது கடல்புலிகள் (Sea Tigers) இதையே செய்கின்றனர்.
* கடல்புலிகளினால் இந்தியாவிற்குக் கெடுதல்தான். இந்தியாவின் எல்லை நிலத்தோடு நின்று போய்விடுவதில்லை. அதையொட்டிய கடலும் ஒரளவிற்கு இந்தியாவினுடையதுதான்.
* ஏற்கனவே கடல்புலிகள் வடக்குக் கடற்கரையைத் தங்கள் கையிருப்பில் வைத்துள்ளனர். இப்பொழுது அமைதிப்பேச்சின்போது அவர்கள் முன்வைத்துள்ள திட்ட வரைவின்படி கிழக்குக் கடற்கரையையும் அவர்களின் கண்காணிப்பிற்கு விட்டுவிடவேண்டும் என்கிறார்கள். இது இந்தியாவிற்கு நல்லதல்ல.
* இந்தியா இலங்கையின் ஒற்றுமை/ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் வராவண்ணம் அங்கு பெடரல் முறை வருமாறு முயல வேண்டும். ஆனால் அதற்கு சிங்களக் கட்சிகளின் (SLFP - UNP) போட்டி அரசியல் இதற்கு இணக்கமாக இல்லை.
* தமிழீழம் உருவாவதை இந்தியா அனுமதிக்கக் கூடாது.
* விடுதலைப்புலிகள் கொடுத்துள்ள இடைக்காலத் தீர்வு என்பதே தனி நாட்டிற்கான முன்னேற்பாடுதான்.

ஒன்று | இரண்டு | நான்கு | ஐந்து

No comments:

Post a Comment