Tuesday, April 13, 2004

லாராவின் 400உம், ஆட்டத்திற்கு இடையூறும்

பிரையன் லாரா நேற்று 400 ரன்கள் அடித்து கிரிக்கெட் டெஸ்டு போட்டிகளில் சாதனை புரிந்துள்ளார். தொலைக்காட்சியில் இதைப் பார்த்த எனக்கு ஏனோ மனநிறைவு இல்லை. கடைசி ஐம்பது ஓட்டங்கள் ஏனோதானோவென்று இருந்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது.

போகட்டும். 400ஐத் தொட முடியுமா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. மாத்தியூ ஹெய்டன் தொட்டுவிடுவாரோ என்றிருந்தது நடக்காமல் போனது.

டான் பிராட்மேனுக்குப் பிறகு இரண்டு முச்சதங்கள் அடித்த ஆசாமி லாராதான். (அடுத்த ஆசாமியாகப்போகிறவர் விரேந்தர் சேவாக் என்று பட்சி சொல்கிறது:-)

இப்பொழுது மேற்கிந்தியத் தீவுகள் அணியால் இந்த டெஸ்டை வெல்ல முடியுமா என்று பார்ப்போம்.

என்னதான் நாநூறு அடித்தார் ஒருவர் என்றாலும் ஆண்டிகுவாவின் பிரதமர் ஆடுகளத்தின் உள்ளே பிரவேசித்து லாராவை கட்டித் தழுவி 'ஷோ' காட்டியிருக்க வேண்டாம்! பார்க்க அசிங்கமாக இருந்தது. வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற கூத்துகள் நடக்காது. யோசித்துப் பாருங்களேன்? வேறெந்த விளையாட்டிலும், வேறெந்த நாட்டிலும் உலக சாதனை நடக்கும் போது நாட்டின் பிரதமரோ, பெரிய ஆட்களோ பாதி ஆட்டத்தில் ஓடிவந்து கட்டித் தழுவிக்கொண்டிருக்கிறார்களா என்ன?

நடுவர்கள் டாரைல் ஹேர், அலீம் தர் இருவரும் ஐசிசியிடம் இது பற்றி புகார் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment