லக்ஷ்மிபதி பாலாஜி பாகிஸ்தானியர்களின் உள்ளங்கவர் கள்வனாகி விட்டாராம். ஏனென்றால் தெரியாது என்கிறார். எங்கு போனாலும் 'பாலாஜி, தீரே சே சல்னா' என்று பாடுகிறார்களாம் பாகிஸ்தானிகள்.
வெட்கத்தோடு ஒருவேளை தனது கருப்பு வண்ணம்தான் தன்னை அவர்களுக்குப் பிடிக்கும் காரணமோ என்கிறார் பாலாஜி. கருமையைக் காயும் தமிழர்கள் இனியாவது கருமையின் சிறப்பை உணர்வார்களாக. Fair & Lovely போன்ற களிம்புகளைப் பூசுவதை இனியாவது நிறுத்துவார்களாக.
கருப்பு பாலாஜி எப்பொழுதும் முகத்தை சிரித்தவாறு வைத்திருப்பதே அவரை அனைவருக்கும் பிடிக்கும் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரது பந்தை நான்கடித்தாலும், ஆறடித்தாலும், அவரது பந்தில் கேட்ச் விடுபட்டுப்போனாலும் அவர் முகத்தில் சிரிப்பு மட்டும் மாறுவதில்லை.
கலை,கனவு, மெய்
5 hours ago
No comments:
Post a Comment