Sunday, April 25, 2004

பா.ராகவனின் அலகிலா விளையாட்டு நாவலுக்குப் பரிசு

நாரதகான சபாவில் இலக்கியப்பீடம் இதழ் சார்பில் அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியின் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பரிசு பெற்ற எழுத்தாளர் பா. ராகவனுக்கு (நாவல்: அலகிலா விளையாட்டு) சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் முன்னாள் இயக்குநர் திரு. ஏ. நடராசன் விருதும், ரூ. 10,000 மதிப்புள்ள காசோலையையும் வழங்கினார்.

இலக்கியப்பீடம் நிறுவனர், ஆசிரியர் திரு.விக்கிரமன், எழுத்தாளர் அனுராதா ரமணன், கலைமகள் பொறுப்பாசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கீழ்க்கண்ட படத்தில் ராகவன், அவரது பெற்றோர், சிறப்பு விருந்தினர் ஏ.நடராசன் ஆகியோர் உள்ளனர். பின்னால் நிற்பது நெய்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் மாலா உத்தண்டராமன். இவர்தான் போன வருடத்திற்கான இலக்கியப்பீடம் நாவல் பரிசை தனது 'அம்மா வென்றாள்' என்ற நாவலுக்காக வென்றவர்.

இலக்கியப்பீடம் நாவல் போட்டி விருது

No comments:

Post a Comment