Friday, April 02, 2004

முருகனின் மூன்று விரல்

இரா.முருகனின் அதி அற்புதமான இந்த நாவலின் விமரிசனத்தை மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு திண்ணையில் எழுதியுள்ளார். ஆங்காங்கே 'ஆ' காணாமல் போயுள்ளது. கவனமாகப் படிக்கவும்!

இரா.முருகனது படைப்புகளிலேயே இந்த நாவல்தான் நான் படித்த முதலாவது. இம்ம்மாதிரியான கதை சொல்லும் விதம், அதீத நகைச்சுவையுள் அமுங்கியிருக்கும் அதீத சோகம், மொழியின் சரளமும், ஈர்ப்பும் என்று என்னை மிகவும் கவர்ந்த நாவல்களின் முதலிடத்தைத் தொட்டது இந்நாவல்.

நான் எப்பொழுதோ எழுத ஆரம்பித்த விமரிசனம் இங்கே. பாதியிலேயே நிற்கிறது. இப்பொழுது ரெ.கா வின் விமரிசனம் இக்கதையை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.

No comments:

Post a Comment