Saturday, August 06, 2005

தட்டிக் கேட்கத் தகவல்கள்

இன்று மாலை 5.00 மணி அளவில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் 'பொன் அரங்கத்தில்' தட்டிக் கேட்கத் தகவல்கள் என்னும் புத்தகத்தின் வெளியீட்டு விழா.

உந்துநர் அறக்கட்டளை சார்பாக வெளியாகும் இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு இது என்று நினைக்கிறேன். இந்தப் புத்தகத்தில் தமிழக அரசின் முக்கியத் துறைகள் வெளியிட்டுள்ள மக்கள் சாசனங்கள் (Citizens Charters) தொகுக்கப்பட்டுள்ளன.

புத்தகத்தை வெளியிடுபவர் Central Vigilance Commissioner P.ஷங்கர். தமிழக அரசின் தலைமைச் செயலர் என்.நாராயணன் தலைமை வகிக்கிறார்.

Right to Information Act இன்னும் சில மாதங்களில் அமலுக்கு வரப்போகிறது. இதுபோன்ற மக்கள் சாசனத் தொகுப்புகள் நமக்கு உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment