Sunday, August 28, 2005

புத்தகங்கள் பற்றி குடியரசுத் தலைவர் கலாம்

தில்லி, பிரகதி மைதானில் 11வது புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்து குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை: Celebrate the Book, the Author and the Reader

ஒரு புத்தகப் பதிப்பாளராக, குடியரசுத் தலைவர் சொல்லிய பலவும் சந்தோஷத்தைத் தருகிறது. ஒரு விஷயம் - முழுவதுமாகத் தெரியாததால் - சற்றே யோசிக்க வைக்கிறது.
குடியரசுத் தலைவர் மாளிகையின் நூலகத்தில், இந்நாட்டின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் பல நூல்களும் சுதந்தரத்துக்கு முந்தைய ஆட்சியாளர்கள் விரும்பிச் சேர்த்த நூல்களும் உள்ளன. இதுவரையில் குடியரசுத் தலைவர்களாக இருந்தவர்களும் பல நூல்களை இந்த நூலகத்தில் சேர்ப்பித்துள்ளனர். இந்த நூல்களை உலகில் உள்ள அனைவரும் அடையுமாறு செய்வதே எங்கள் நோக்கம். இந்த நோக்கத்தை அடைய குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள நூல்களை முழுவதுமாக டிஜிடைஸ் செய்யத் தொடங்கியுள்ளோம். இதுவரையில் கிட்டத்தட்ட 7,000 புத்தகங்கள், 50 லட்சம் பக்கங்களை டிஜிடைஸ் செய்துள்ளோம். கூடிய விரைவில் இவற்றை இணையத்தில் சேர்ப்பிக்க உள்ளோம்.
ஒரு வாசகனாக சந்தோஷம் அடைய வைக்கும் செய்தி இது. அதே நேரம் இந்த கணினிமயமாக்கல் நடக்கும்போது காப்புரிமைகள் மீறப்படாமல் இருக்கும் என்று நம்புவோம்.

நம் நாட்டில் புத்தகங்கள் பலவும் அனைவருக்கும் படிக்கக் கிடைக்கவேண்டும். அதே நேரம் ஏதாவது வழியில் நியாயமான அளவு பணம் பதிப்பாளருக்கும் எழுத்தாளருக்கும் சென்று சேரவேண்டும். மத்திய/மாநில அரசுகள் ஒன்றுசேர்ந்து புதிதாகப் பதிப்பாகும் அத்தனை புத்தகங்களும் இணையம் வழியாகக் கிடைக்கப்பெறும் ஒரு டிஜிட்டல் நூலகத்தில் சென்று சேருமாறு செய்யலாம். இந்த நூலகத்திலிருந்து பக்கங்களைப் படிக்க அனைத்து "குடிமக்களுக்கும்"* உரிமை உண்டு. ஆனால் எந்தப் புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் படிக்கப் பெறுகின்றன என்பதை வைத்து பதிப்பாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை சென்று சேருமாறு செய்யலாம். அதிலிருந்து ராயல்டி தொகை எழுத்தாளருக்குப் போய்ச் சேரவேண்டும். சில நேரங்களில் சில எழுத்தாளர்கள் பதிப்புரிமை தரும்போது அச்சுப் புத்தகங்களுக்கான பதிப்புரிமையை மட்டும்தான் தருவார்கள். (கிழக்கு பதிப்பகத்தின் ஓர் எழுத்தாளர் அச்சு உரிமையை மட்டும்தான் எங்களுக்குக் கொடுத்துள்ளார். பிறர் அனைவரும் கணினி/இணையம் வழியாக எழுத்துக்களை விற்பனையாக்கும் உரிமையையும் கொடுத்துள்ளனர்.) அப்படியாயின், அரசு நேரடியாக எழுத்தாளரிடமிருந்தே கணினியாக்கும் உரிமையைப் பெற வேண்டியிருக்கும்.

அதே நேரம் காப்புரிமை விட்டுப்போன பல நூல்கள் இருக்கின்றன. அவற்றை யார் வேண்டுமானாலும் அச்சிலோ, இணையத்திலோ படி எடுக்கலாம்.

---

அரசு வரி வருமானத்தில் உருவாகும் இந்தத் திட்டம் உலக மக்கள் அனைவருக்கும் போய்ச்சேரவேண்டுமா அல்லது நாட்டு மக்களுக்கு மட்டும்தானா என்ற கேள்விகள் எழலாம். உலகத்துக்கு எனப் பொதுவாகப் போவதே சரியானது. இந்தியாவில் தயாராகும் எழுத்துகள் பலவும் இந்திய மொழிகளிலேயே இருக்கும்போது அதைப் பயன்படுத்தும் வெளிநாட்டவர் பெரும்பாலும் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து சென்றவராகத்தான் இருப்பார். ஆங்கிலப் புத்தகங்களை அனைவருமே உபயோகிக்க முடியும்.

1 comment:

  1. Link to President's website is not working. So I am commenting based on your post. The project looks like Google Print. I think copyright of most of the books in president's library would have been expired now. So it should not be a problem to digitise them. I hope they also update their books in Project Gutenberg website (http://www.gutenberg.org/). For copyrighted works, govt shud pay the author/rights holder. Again author/rights holder should be flexible in the compensation from the govt as it is a public cause. By allowing the govt to digitise and redistribute, their work has a chance to reach millions of people, which would have not been possible by normally.

    Govt shud initiate process to create public libraries for increasing the reading habits. Interesting piece about lack of public libraries in India,
    http://www.hindu.com/lr/2004/11/07/stories/2004110700370600.htm

    ReplyDelete