Wednesday, January 05, 2011

கதம்பம் - 7 - கல்கி - மாத்தி யோசி

அமரர் கல்கியின் வரலாற்றுப் புதினங்கள் - பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு - எப்போது நாட்டுடைமையாயினவோ, அன்றுமுதல் பல பதிப்பகங்களும் அவற்றைப் பதிப்பித்து வருகின்றன. இன்று குறைந்தது 15 பதிப்பகங்கள் எனக்குத் தெரிந்து இவற்றைப் பதிப்பிக்கின்றன. விலை அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது. ஆனால், தாளும் அச்சும் மார்ஜினும் எழுத்துரு அளவும் அனைவருக்கும் பிடித்துள்ளதா என்றால் இல்லை. எனவே விலையைப் பற்றிக் கவலைப்படாத, நல்ல தரமான புரொடக்‌ஷனை விரும்புபவர்களுக்காக என்று இவற்றைக் கொண்டுவருவதில் நாங்களும் இறங்கியுள்ளோம்.

பொன்னியின் செல்வன் மாபெரும் வேலை. அதை மெய்ப்புப் பார்ப்பது நடந்துகொண்டிருக்கிறது. அதற்குள் இந்தப் புத்தகக் கண்காட்சியில் மற்ற இரண்டும் வெளியாகின்றன. சிவகாமியின் சபதம் வந்துவிட்டது என்று அரங்கிலிருந்து பிரசன்னா சொன்னார். கெட்டி அட்டைப் பதிப்பு. 1200 பக்கங்களுக்கு மேல். ஆனால் விலை ரூ. 350 மட்டுமே. பார்த்திபன் கனவு சுமார் 400-த்தி சொச்சப் பக்கங்கள். விலை ரூ. 100 மட்டுமே (பேப்பர்பேக்) - இது அடுத்த ஓரிரு தினங்களில் ஸ்டாலுக்கு வந்துவிடும்.

பொன்னியின் செல்வனும் விரைவில் கிடைக்கும். மே மாதம் ஆகிவிடலாம்.


  

1 comment: