Monday, November 14, 2011

ஜாஃபர்கான்பேட்டை மாணவர்களுடன் சந்திப்பு

இன்று குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சென்னை பள்ளிகள் என்று இப்போது அழைக்கப்படும் மாநகராட்சிப் பள்ளிகள் அனைத்திலும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அதில் ஜாஃபர்கான்பேட்டை பள்ளிக்கு நான் சென்றிருந்தேன். சியோசா (CIOSA) அமைப்பின் பிரசன்னாவும் ‘நம்ம சென்னை’ (முன்னாள் காலச்சுவடு) அரவிந்தனும் அழைத்ததன்பேரில் அங்கு சென்றிருந்தேன். ஜெயா டிவியின் ஆசிரியர் குழுவில் இருக்கும் சிவலிங்கமும் அங்கே இருந்தார். இவருக்கு இந்தப் பள்ளியுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை அவர் பேசும்போது அறிந்துகொண்டேன். பள்ளியின் தலைமையாசிரியர் முனியன், பிற ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர்.

நான் செல்லும்போது ஒரு மாணவி ஜவாஹர்லால் நேருவின் வாழ்க்கையை விவரித்துக்கொண்டிருந்தார். பின்னர் சிவலிங்கம் பேசினார். தொடர்ந்து நானும் பேசினேன். இடையே பள்ளியின் தலைமையாசிரியரும் பேசினார். வீடியோ கீழே:




சென்னை பள்ளி மாணவர்கள் சந்திக்கும் சவால்கள், பிற ஆங்கில மீடிய, தனியார் பள்ளிகளின் மாணவர்கள் சந்திக்கும் சவால்களிலிருந்து முற்றிலும் வேறானவை. குடும்பச் சூழல், பெற்றோர்களின் படிப்பு, பெற்றோர்கள் வீட்டுக்குக் கொண்டுவரும் வருமானம், வாழிடத்தில் உள்ள வசதிகள் ஆகிய அனைத்துக் குறைபாடுகளையும் மீறி, நன்கு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று, நல்ல பழக்கங்களுடன் வெளியேறி, நல்ல வேலையைப் பெற்று, நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டிய நிலையில் அம்மாணவர்கள் உள்ளனர். சிறிது சறுக்கினாலும் சிஸ்டம் அவர்களை வெளியே தள்ளவே முயல்கிறது. இவற்றையெல்லாம் மீறி, மாரிச்செல்வம்போல இந்த மாணவர்கள் சாதனை செய்யவேண்டும்.

இதற்கு நாம் எவ்வகையில் பங்களிக்கலாம் என்பதுதான் நம்முன் இருக்கும் கேள்வியே.

2 comments:

  1. Hello Badri

    This is a great effort... Hats off.. really touching to see this.. I bow down to your efforts...

    But, just a point of difference... You are stressing too much about getting recognized by people/society.. I think that is the greatest tragedy of humans right now!! Even though it would seem to work wonders - I personally don't think it is the right approach to life and is sure enough to lead to greater miseries in life... Instead, you could have stressed them to do whatever they do in life with utmost sincerity, intensity and joy - that would be more than enough (and will eventually lead to a better society / productivity)

    Please read this story by lao tzu:
    http://anythingbeautiful.blogspot.com/2006/09/story-of-lao-tzu-times.html

    Regards
    Vaidy

    ReplyDelete
  2. Also read this:

    http://www.deccanchronicle.com/editorial/op-ed/don%E2%80%99t-teach-just-learn-453

    ReplyDelete