Tuesday, August 24, 2004

தேர்தல் சீர்திருத்தங்கள் - 2

கிருஷ்ணமூர்த்தி பேசத் தொடங்கும்போது செழியன் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டுதான் தான் மேடையில் உட்கார்ந்தேன் என்று சொன்னார். இப்பொழுது பாராளுமன்றத்தில் நடக்கும் அமளியைப் பார்க்கும்போது இரா.செழியன் போன்ற பலர் பாராளுமன்றத்தில் இல்லையே என்பது வருத்தம் தருவதாக உள்ளது என்றார்.

இந்தியத் தேர்தலைப் பற்றிப் பேசும்போது உலகில் இத்தனை பெரிய தேர்தல் எங்கும் நடைபெறுவதில்லை, இந்த அளவிற்கு திறம்படவும் நடைபெறுவதில்லை, அதிகபட்சமாக கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இன்னமும் சிறப்பாக நடைபெறலாம் என்று தான் கருதுவதாகச் சொன்னார். [பின்னர் வேறிடத்தில், ஆஸ்திரேலியாவில் ஒவ்வொருவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்றும், மதிய நேரத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலிருந்தும் வாக்களிக்காத வாக்காளர்களை தொலைபேசியில் கூப்பிட்டு ஏன் இன்னமும் வாக்களிக்க வரவில்லை என்று விசாரிப்பார்கள் என்றும் அதுபோலெல்லாம் இந்தியா போன்ற பெரிய நாட்டில் முடியாது - சில பாராளுமன்றத் தொகுதியில் 15-20 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்றும் சொன்னார்.]

பாராளுமன்றத் தேர்தல் நடந்தபோது ஆஸ்திரேலியாவின் தேர்தல் கமிஷனர் இந்தியாவில் இருந்ததாகவும், இந்தியாவில் நடந்த தேர்தலை வெகுவும் பாராட்டியதாகவும் சொன்னார்.

பாராளுமன்றத் தேர்தல் நான்கு பாகங்களாக நடைபெறுவதாக இருந்தது, திரிபுராவில் ஏற்பட்ட சில காரணங்காளால் ஐந்து பாகங்களாக நடந்தது. தொடக்கத்திலிருந்து இறுதி வரை கிட்டத்தட்ட 30 நாள்கள் ஆயின. இதைப் பலர் குறை கூறினர். தானும் தேர்தல் முழுவதும் ஒரே நாளில் நடைபெற விரும்பியதாகவும், சுமுகமாக நடக்க வேண்டுமானால் அதற்கென தனக்கு 1,200 மத்தியக் காவல் படை கம்பெனிகள் தேவைப்பட்டதென்றும் உள்துறை அமைச்சகம் அதைத் தர மறுத்ததால் வேறு வழியின்றி நான்கு/ஐந்து பாகங்களாக நடத்த வேண்டியிருந்ததென்றும் சொன்னார்.

நாட்டின் சில இடங்களில் உள்ளூர் காவல்துறையை நம்பியிருந்தால் நேர்மையான தேர்தல் நடைபெற வாய்ப்பே இல்லையென்றும் மத்தியக் காவல்படை (Central Paramilitary Forces) இல்லாவிட்டால் நாட்டில் ஒழுங்கான தேர்தல் நடந்திருக்காது என்றும் அவர் சொன்னது கவலையைத் தருகின்றது.

தேர்தல் நடத்தியதிலிருந்து தேர்தல் ஆணையம் கற்றுக்கொண்டது என்ன என்பதை விளக்கினார்.

1. வாக்காளர் பெயர் பதிவு சீர்படுத்தப் பட வேண்டும்
  • வாக்காளர் பெயர்ப் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தது தெரிய வந்தது. சரியான வழிமுறைகள் இருந்தும் அதைச் சரிவரப் புரிந்து கொள்ளாத பணியாளர்களின் தவறுதலால் எக்கச்சக்க குழப்பங்கள் விளைந்தது என்றார்.
  • இனி யாருடைய பெயரையும் நீக்க ஒரு பணியாளருக்கு அதிகாரம் கிடையாது என்றும், இருவராவது அதனைச் சரிபார்த்தால்தான் பெயர்கள் நீக்கப்படும் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது என்றார்.
  • மஹாராஷ்டிரா, தமிழகம், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மொத்தமாக பல்லாயிரக்கணக்கானோர் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது குறித்த பல்வேறு புகார்களை ஆணையம் தீவிரமாக விசாரித்தது. அதிலிருந்து கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்தன:
  • மஹாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக கிட்டத்தட்ட 5 லட்சம் பெயர்கள் விடுபட்டிருந்தன. அவற்றைத் தீவிரமாகப் பரிசோதித்து ஒவ்வொரு புதிதாக எழுப்ப்பப்பட்ட கட்டிடங்களிலும் வசிப்பவர்களைச் சரியாகக் கவனித்து பெயர்கள் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.
  • மிக அதிகமாகப் பேசப்பட்ட தமிழகத்தில் மொத்தமாக 84,000 பெயர்கள் விடுபட்டதாகப் புகார் வந்தது. அதைப் பரிசோதித்தபின் அதில் கிட்டத்தட்ட 75,000 நியாயமான புகார்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது பெயர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 9,000 புகார்கள் பொய்யானவை என்று கண்டுபிடிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன.
  • மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், எந்த மாநிலத்திலும் அதிக பட்சமாக ஒரு லட்சம் பேருக்கு மேல் விடுபடவில்லை. அவையனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டன.
  • பரிசோதனை முயற்சியாக மஹாராஷ்டிரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்ப்பது இணையம் மூலமாக நடக்கிறது. தபால் அலுவலகங்கள் வழியாகவும் வாக்காளர் பெயர் சேர்ப்பு பரீட்சார்த்தமாக நடக்கிறது. இவ்விரண்டும் சரியாக நடந்தால் நாடு முழுவதும் இந்நிலை பின்பற்றப்படும்.
  • ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் பெயர்கள் சேர்க்கலாம் என்பது போய் வருடம் முழுதும் பெயர்களை எப்பொழுது வேண்டுமானாலும் சேர்க்கலாம் என்ற முறை இனி பின்பற்றப்படும்.
  • உதாரணத்திற்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 6 மில்லியன் வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டுப் போயுள்ளன. அத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆனால் போனால் போகட்டும் சில லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டுப் போயிருந்தால் ஒன்றும் குறைந்து விடவில்லை என்று விட்டுவிடாமல் செய்முறையைச் சீர்படுத்திக் கொண்டிருக்கிறோம். ("இப்படிப் பெயர்கள் விடுபட்டுப் போனதை அறிந்ததும் எனக்கு அந்த வாரம் முழுதும் நிம்மதியாகத் தூங்கவே முடியவில்லை")
  • வடகிழக்கில் தேர்தல் நடத்துவது சாதாரணமான வேலையில்லை. பல பழங்குடியினர் அவரவர்கள் மாநிலத்திலேயே வசிப்பதில்லை. அகதிகள் முகாமில் வேறு மாநிலங்களில் வசிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான வாக்குகள் வேறிடத்தில் உள்ளன. சரியாகக் கண்காணித்து அவர்களுக்குத் தேவையான வாக்களிக்கும் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பங்களாதேஷ் அகதிகள் [சக்மா] பலருக்கு [ஆசாம் அக்கார்ட் படி] குடியுரிமை, வாக்குரிமை உண்டு. இதற்கு பலத்த எதிர்ப்பிருந்தும் தேர்தல் கமிஷன் Citizenship Act படி நடந்துகொண்டு இப்படிப்பட்டவர்கள் வாக்களிக்கத் தேவையான வசதிகளைச் செய்து தருகிறோம்.
  • எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தலுக்கு முதல் நாள் வரை வாக்காளர் பட்டியல் மீது எந்தவொரு அக்க்கறையும் எடுத்துக் கொள்வதில்லை. தேர்தல் நாளுக்கு வெகு முன்னதாகவே பட்டியலை நாங்கள் வெளியிடுகிறோம், ஆனால் தேர்தல் நாளன்றுதான் 'என் பெயர் இல்லை' என்ற புகார்கள் வருகின்றன.
  • இப்பொழுதுள்ள சட்டப்படி யாரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்கச் சொன்னதும் 7 நாள்கள் கழித்துதான் அவர்களது பெயரைச் சேர்க்க முடியும். அரசின் உதவியோடு இதைக் குறைக்க முடியுமா என்று பார்க்கிறோம்.
2. அரசியல் கட்சிகளின் நடத்தை
  • அரசியல் கட்சிகள் முதிர்ச்சியற்ற முறையில் நடந்து கொள்கின்றன.
    - அரசியல் விளம்பரங்கள் மிகக் கேவலமாக இருந்தன. ஒரு கட்சி எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு மோசமாகவும் நடந்து கொள்கிறது.
  • அரசியல் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
  • ஏகப்பட்ட சின்னஞ்சிறு பிராந்தியக் கட்சிகள் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் போட்டிபோட அனுமதிக்கப்படலாமா என்று ஒரு விவாதம் தேவை. பிரிட்டனில் கிட்டத்தட்ட 150 கட்சிகளுக்கு மேல் இருக்கின்றன. ஆனால் தேசியத் தேர்தலில் போட்டியிடும்போது அவையனைத்தும் இணைந்து அதிகமாக நான்கு குழுக்களே போட்டியிட்டன. அதுபோல இந்தியாவிலும் சிறு கட்சிகள் ஒரு கூட்டமைப்பின் அங்கமாகத்தாண் போட்டியிட வேண்டும் என்று தீர்மானிக்கலாம்.
  • அதுபோலவே சுயேச்சைகள் போட்டியிட அனுமதிக்கலாமா என்பதைப் பற்றிய விவாதமும் தேவை. மெக்சிகோவில் சுயேச்சைகள் போட்டிபோட முடியாது. கட்சித்தாவல் தடைச் சட்டம் சுயேச்சைகளுக்குப் பொருந்தாது. இதனால் அதிகக் குழப்பங்கள் ஏற்படுகின்றன.
  • இந்த விஷயங்களில் தேர்தல் ஆணையத்துக்கென எந்தவொரு நிலைப்பாடும் இல்லை. ஆனால் இது பற்றியெல்லாம் நாடு தழுவிய விவாதங்கள் தேவை.
3. தேர்தல் செலவுகள்
  • தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்த அரசே வேட்பாளர்களுக்கு நிதியுதவி செய்யலாம் என்றொரு எண்ணம் நிலவுகிறது. அப்படிச் செலவு செய்வதாக இருந்தால் அது நிதியாக - பணமாக - கொடுக்கப்படக் கூடாது. பொருளாகத்தான் - போஸ்டர் அடித்து போஸ்டர்களாகவே - கொடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பணத்தைப் பெறுவதற்கென்றே பல கட்சிகள் புதிதாகத் தோன்றும்.
  • கருத்துக் கணிப்பு, எக்ஸிட் கணிப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க ஓர் அமைப்பு தேவை. இந்த opinion poll, exit poll நடத்தும் மீடியாவே கட்சிகளிடமிருந்து பேருமளவில் விளம்பரங்களையும் பெறுகின்றன. அதனால் ஒருசில கட்சிகளுக்குச் சாதகமாக வேண்டுமென்றே கருத்துக் கணிப்புகளின் முடிவை மாற்றியமைக்கலாம்.
4. தேர்தலில், மாநில நிர்வாகத்தின் (administration) பங்கு
  • பல நிர்வாகிகள் அரசியலில் தலையிடுகிறார்கள், அரசியல்வாதிகள் நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள்.
  • நிர்வாகத்துறையில் பெருமளவு சீர்கேடு நிகழ்ந்துள்ளது.
  • பல அரசுத்துறை நிர்வாகிகள் அரசியல்வாதிகளுக்குப் பணிந்துபோய் விடுகிறார்கள். இவர்கள் எழுந்து நின்றாலே, தேர்தல் நடத்துவது சுலபமாகிவிடும்.
  • ஒரு மாநிலத்தில், சில பணி மாற்றங்களைச் செய்யச் சொல்லியிருந்தோம். அந்தத் தலைமைச் செயலர் தன் முதலமைச்சரிடம் சொல்லாமல் இந்த மாற்றங்களைச் செய்யத் தயங்கினார். முதலமைச்சரிடம் சொல்வதாக இருந்தால் சொல்லுங்கள், ஆனால் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தே ஆக வேண்டும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றோம். அப்படி மீறி இந்த மாற்றங்களைச் செய்வதில் தாமதாகுமென்றால் வேறொரு தலைமைச் செயலரை நாங்கள் கொண்டுவர வேண்டியிருக்கும் என்றோம். அந்த அளவிற்கு ஆளும் கட்சியின் ஏஜெண்டுகளாகவே பல அதிகாரிகள் செயல்படுகின்றனர். இது எப்பொழுது மாறுமோ அப்பொழுதுதான் நேர்மையான தேர்தலைத் திறம்படச் செய்யமுடியும்.
  • இதுபோன்ற அதிகாரிகள் தலையீடு நடக்கும் இடங்களிலெல்லாம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் (Election Observers) மூலமாக, அவர்கள் தலையீட்டைக் குறைத்தோம்.
5. வன்முறை
  • ஒரே நாளில் தேர்தல் நடந்திருந்தால் வன்முறையை வெகுவாகக் குறைத்திருக்க முடியும்.
  • தேர்தலை யாராவது பகிஷ்கரிக்க விரும்பினால் பரவாயில்லை. ஆனால் பிறர் வாக்குச் சாவடிக்குப் போவதை தடுப்பதைத்தான் அனுமதிக்க முடியாது.
  • கடந்த தேர்தலில்தான் மிகக் குறைந்த அளவு வன்முறை இருந்தது. ஆயினும் தாங்க முடியாத அளவிற்கு பணமும், வன்முறையும் இருந்தது என்பதுதான் உண்மை.
  • வட இந்தியாவில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மூலம் எங்கெல்லாம் வன்முறை இருந்ததோ அதையெல்லாம் கண்டறிந்து மறு தேர்தல் நடத்தினோம்.
  • தீவிரவாதப் பிரச்சினைகள் இருக்கும் இடங்களை விட, மற்ற சில மாநிலங்களில்தான் வன்முறை அதிகமாக இருந்தது. [பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் இவர் பீஹாரைத்தான் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன்.]
6. நடத்தை விதிகளை மதிக்காதது
  • கட்சிகள் தேர்தல் நேரத்தில் நடந்துகொள்ள வேண்டும் என கட்சிகளே ஒன்றுநேர்ந்து நடத்தை விதிகள் (Code of conduct) என உருவாக்கியுள்ளன. இது சட்டமாக்கப்படாத, கட்சிகளாக ஒத்துக்கொண்டிருக்கும் விதிகள்.
  • இந்த விதிகளை எல்லாக் கட்சிகளும் மீறின.
  • இப்படிப்பட்ட விதிகளை மீறும் வேட்பாளர்களைத் தடை செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்குக் கிடைத்தால் இதனால் நல்ல பலன் இருக்கும் எனத் தோன்றுகிறது.

5 comments:

  1. துருப்பிடித்த சில நட்டுகளைக் கழற்றியெறிந்துவிட்டால் அரச எந்திரம் நன்றாகத்தான் ஓடும் என்ற நம்பிக்கைக்கும், இத்தனைத் துருவா என்ற அவநம்பிக்கைக்குமிடையே ஊசலாடுகிறேன்!

    ReplyDelete
  2. துருப்பிடித்த சில நட்டுகளைக் கழற்றியெறிந்துவிட்டால் அரச எந்திரம் நன்றாகத்தான் ஓடும் என்ற நம்பிக்கைக்கும், இத்தனைத் துருவா என்ற அவநம்பிக்கைக்குமிடையே ஊசலாடுகிறேன்!

    ReplyDelete
  3. துருப்பிடித்த சில நட்டுகளைக் கழற்றியெறிந்துவிட்டால் அரச எந்திரம் நன்றாகத்தான் ஓடும் என்ற நம்பிக்கைக்கும், இத்தனைத் துருவா என்ற அவநம்பிக்கைக்குமிடையே ஊசலாடுகிறேன்!

    ReplyDelete
  4. துருப்பிடித்த சில நட்டுகளைக் கழற்றியெறிந்துவிட்டால் அரச எந்திரம் நன்றாகத்தான் ஓடும் என்ற நம்பிக்கைக்கும், இத்தனைத் துருவா என்ற அவநம்பிக்கைக்குமிடையே ஊசலாடுகிறேன்!

    ReplyDelete
  5. ˘̢

    ¸¢Õ‰½ã÷ò¾¢ «Å÷¸Ç¢ý §À þùÅÇ× Å¢Ã¢Å¡¸ô À¾¢× ¦ºö¾¾üÌ Á¢ì¸ ¿ýÈ¢. Å¡ì¸Ç÷ ÀðÊÂÄ¢ø Å¢ÎÀð¼ ¦ÀÂ÷¸¨Çî §º÷ôÀÐ Á¢¸×õ ±Ç¢¨Áô ÀÎò¾ôÀ¼ §ÅñÎõ. ¦À¡Ð þ¼í¸û, áĸí¸û, ¾À¡ø ¿¢¨ÄÂí¸û §À¡ýÈ þ¼í¸Ç¢ø š측Ç÷ ÀðÊÂÄ¢ø ±Ç¢¾¡¸î §º÷÷ì¸î ¦ºöžü¸¡É ²üÀ¡Î¸û ¦ºöÂôÀ¼ §ÅñÎõ. ¦ÅÇ¢äâø þÕìÌõ š측Ç÷¸û, þó¾¢Â¡Å¢ý ±ó¾ ã¨Ä¢ø þÕôÀ¢Ûõ ¾í¸û ¦¾¡Ì¾¢ §ÅðÀ¡Ç÷¸¨Çò §¾÷× ¦ºöžüÌ ²üÀ¡Î¸û ¦ºöÂôÀ¼ §ÅñÎõ. þÐ §À¡ýÈ ±òШɧ¡ §ÅñÎõ¸û ¯ûÇÉ. ¬É¡ø °ÆÄ¢ø Ҩȧ¡Êô §À¡Â¢ÕìÌõ ¿ÁÐ «¨ÁôÀ¢ø þ¨Å¡קÁ ¾ÅÈ¡¸ô ÀÂýÀÎò¾ô ÀðΠŢ¼ì ÜÊ ¬À¡Âí¸û ¯ûÇÉ. ´Õ ¬Ùõ ¸ðº¢Â¡ÉР¡÷ Á£Ð §ÅñÎÁ¡É¡Öõ ±Ç¢¾¡¸ ´Õ ¸¢Ã¢Á¢Éø ÌüÈò¨¾î º¡ðÊ Å¢¼Ä¡õ. «ó¾ ¿¢¨Ä¨Á ¯ûÇ ¿¡ðÊø ¸¡ó¾¢ Á£Ð ܼ ´Õ ÅÆ쨸ô §À¡ðΠŢÎÅ¡÷¸û. «ùÅ¡È¡É ¿¢¨Ä¢ø ¡÷ Á£Ð ¿¢ƒ ÅÆìÌ ¯ûÇÐ, ¡÷ Á£Ð §À¡Ä¢ ÅÆìÌ ¯ûÇÐ ±ýÀÐ ¦¾Ã¢ÂÅÃÁ¡ø, ±ó¾¦Å¡Õ ¦Àâ ¾¨ÄŨÃÔõ §À¡ðÊ¢¼ Å¢¼¡Áø ¦ºöРŢ¼ ÓÊÔõ. «¾É¡ø¾¡ý ¾¢Õ¼ÛìÌò §¾û ¦¸¡ðÊÂÐ §À¡ø ±øÄ¡ «Ãº¢Âø ¸ðº¢Â¢ÉÕõ þó¾ Å¢„Âò¾¢ø ÜðÎì ¸ÇÅ¡½¢¸Ç¡¸ þÕ츢ȡ÷¸û. ¿ÁÐ ¿£¾¢ ÅÆíÌõ «¨Áô¨Àî º£÷ò¾¢Õò¾¢É¡ø «ýÈ¢, §¾÷¾Ä¢ø ¸¢Ã¢Á¢Éø¸û §À¡ðÊ¢ÎŨ¾ò ¾ÎôÀÐ þÂÄ¡¾ ´ýÚ. ±ýÚ ¿ÁÐ ¸¢Ã¢Á¢Éø ºð¼í¸Ç¢ø ¯ûÇ µð¨¼¸û «¨¼ì¸ô Àθ¢ýȧ¾¡, ±ýÚ ´Õ ÅÆìÌìÌì ¸¡Ä ¿¢÷½Âõ ¦ºöÂôÀðÎì ÌÈ¢ò¾ì ¸¡Äò¾¢üÌû ¿£¾¢ ÅÆí¸ô Àθ¢È§¾¡ «ýÚ¾¡ý «Ãº¢Âø ¯ûÇ ¸¨Ç¸¨Ç ±Îì¸ ÓÊÔõ. ¬¸§Å §¾÷¾ø º£÷¾¢Õò¾õ ±ýÀÐ ¿ÁÐ ºð¼î º£÷¾¢Õò¾ò¾¢ø §À¡ö Óʸ¢ÈÐ. ´ýÚì ¦¸¡ýÚ ¦¾¡¼÷Ò¨¼Â þÊ¡ôÀî º¢ì¸Ä¢ø þÕ츢ÈÐ ¿ÁÐ ¿¡ðÊý Àø§ÅÚ «¨ÁôÒì¸û. ¾£÷ôÀÐ «ùÅÇ× ±Ç¢¾¡É ´Õ ¸¡Ã¢Âõ «øÄ. §Ä¡ìºì¾¢¨Âî §º÷ó¾ Dr.¦ƒÂôÀ¢Ã¸¡‰ §À¡ýÈ ÀÄÕõ þÅüÈ¢ü¦¸øÄ¡õ ¾£÷× ¸¡½ Àø§ÅÚ ÅƢӨȸ¨Ç ¬Ã¡öóÐ ÅÕ¸¢ýÈÉ÷. ¬É¡ø «Ãº¢Âø ¾¨Ä£θǡø ±ó¾¦Å¡Õ ¾£÷×õ Á¢Ìó¾ §À¡Ã¡ð¼í¸ÙìÌô À¢ý§À ²üÚì ¦¸¡ûÇôÀθ¢ýÈÉ. §ÅðÀ¡Ç÷¸û ¦º¡òÐì ¸½ìÌì ¸¡ñÀ¢ì¸ §ÅñÎõ ±ýÀÐ «Å÷¸û ¦ÅüÈ¢ ¸ñ¼ ´Õ ÓÂüº¢. ¬É¡ø «Ð ±ùÅ¡Ú Ð÷ôÀ¢Ã§Â¡¸õ ¦ºöÂôÀθ¢ÈÐ ±ýÀ¨¾ ¦ºýÈ §¾÷¾Ä¢ø ¸ñ§¼¡õ. §ÁÖõ «Ð §À¡ýÈ ¸Î¨ÁÂ¡É ºð¼í¸¨Ç «Óø ÀÎòОüÌ §ÅñÊ ¸ð¼¨ÁôÒ¸Ùõ «ÃÍ º¡Ã¡ ¿¢ÚÅÉí¸Ùõ ²üÀÎò¾ôÀ¼ §ÅñÎõ.

    ¬É¡ø þÅü¨È¦ÂøÄ¡õ ±ñ½¢ô À¡÷ìÌõ ¦À¡ØÐ Á¢Ìó¾ ÁÉî §º¡÷§Å ±üÀθ¢ýÈÐ.

    «ýÒ¼ý
    º.¾¢ÕÁ¨Ä

    ReplyDelete