மஹாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே சனிக்கிழமை சென்னை வந்திருந்தார். பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவில் இட ஒதுக்கீடு பற்றி நடந்த மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். திராவிடர் கழகத்தின் வீரமணியும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மத்திய அமைச்சர் அன்புமணியும் மேடையில் இருந்தார். மஹாராஷ்டிராவில் தனியார் நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தியதற்காக ஷிண்டே பாராட்டுப் பெற்றார்.
ஆனால் உண்மையில் மஹாராஷ்டிராவில் இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததா இல்லை பாதியிலேயே திரும்பப் பெற்று விட்டார்களா என்ற சரியான தகவல் இல்லை.
ஷிண்டே முழுவதும் புரிந்து கொள்ள முடியாத மனிதர். பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர். காங்கிரஸ்காரர். சாவர்கர் மிகச்சிறந்த தேச பக்தர் என்று நினைப்பவர்! சாவர்காரின் கொள்கைகளை ஆர்.எஸ்.எஸ், பாஜக சரியாகப் பின்பற்றுவதில்லை என்று அவர்களை வம்புக்கிழுப்பவர்.
சென்னை வந்து வீரமணி, அன்புமணி ஆகியோரோடு கூட்டம் நடத்தி, மாலைகள் வாங்கிக் கொண்டு, நேராக காஞ்சி சங்கரமடத்துக்கு தன் மனைவியுடன் சென்று ஒரு மணிநேரம் பக்தியுடன் சங்கராச்சாரியார்களுக்கு மாலைகள் கொடுத்து ஆலோசனை செய்து விட்டு மீண்டும் மும்பை சென்றுள்ளார்.
Monday, August 30, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment