தி ஹிந்து செய்தி
உச்ச நீதிமன்றம் குஜராத் கலவரங்களின்போது பாரபட்சமாக நடந்துகொண்ட நரேந்திர மோடி அரசை வழிக்குக் கொண்டுவரும் விதமாக உயரதிகாரிகள் அடங்கிய காவல் துறை கண்காணிப்புக் குழு ஒன்றை உருவாக்கி கிட்டத்தட்ட 2000 வழக்குகளை மீள்விசாரணை செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.
இதில் மிக முக்கியமாக என்னைக் கவர்ந்தது நீதிபதிகளின் இந்தத் தீர்ப்பே: வழக்குகளை மீள்விசாரணை செய்து அந்த வழக்குகளை மீண்டும் மூடவேண்டுமானால் அதற்கான காரணங்களை இணையத்தளம் ஒன்றில் போடவேண்டும் என்பதே. இதனால் கலவர வழக்குகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் அரசு-சாரா அமைப்புகளுக்கு முழு விவரமும் போய்ச்சேரும். நம்மைப் போன்ற பொதுமக்களுக்கும் முழு விவரமும் வந்து சேரும்.
இங்கு தொடங்கி, இனி மற்ற எல்லா வழக்குகளுக்கும், ஏன், அரசின் அத்தனை நடவடிக்கைகளுக்கும் முழுக் காரணங்கள் இணையம் வழியாக பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
Wednesday, August 18, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment