Saturday, June 24, 2006

கணக்கு வாத்தியார் பி.கே.எஸ் நினைவாக

கணக்கு வாத்தியார் பி.கே.ஸ்ரீநிவாசன் (பி.கே.எஸ்) என்று ஒருவர் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அவர் இறந்தபோது நான் எழுதியிருந்த பதிவு இங்கே.

அவரது முதலாம் ஆண்டு நினைவையொட்டி அவரது குடும்பத்தினர் நேற்று ஒரு நிகழ்ச்சியைத் நடத்தினர். அதில் பி.கே.எஸ் பற்றிய ஒரு குறும்படத்தைத் திரையிட்டனர். தொடர்ந்து பி.கே.எஸ் பற்றி பலர் பேசினர். இந்த நிகழ்ச்சி பற்றிய தி ஹிந்து செய்தி இங்கே.

பி.கே.எஸ் என்ன சாதித்துள்ளார் என்பதை இங்கே சுருக்கமாகக் கொடுக்கிறேன்:

1. பி.கே.எஸ் Association of Mathematics Teachers of India (AMTI) என்ற அமைப்பு உருவாக முக்கியமான காரணியாக இருந்திருக்கிறார். இந்த அமைப்பின்மூலம் பல்வேறு ஊர்களுக்கும் சென்று கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி அதன்மூலம் பள்ளிகளில் கணிதம் பயிற்றுவிப்பதை 'ஜாலியான' ஒரு நிகழ்வாக மாற்றவேண்டும் என்று விரும்பியிருக்கிறார். நான் அவரது ஒரு பயிற்சி வகுப்புக்குச் சென்றுள்ளேன். ஆனால் பயிற்சியில் கலந்துகொண்ட கணித ஆசிரியர்கள் அவ்வளவு சுவாரசியம் காட்டியதுபோலத் தோன்றவில்லை.

இன்று ஆத்மராமன் பி.கே.எஸ் செய்ததைத் தொடர்கிறார். ஆத்மராமன் நேற்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அற்புதமாகப் பேசினார்.

2. சிறுவர்களுக்காக பி.கே.எஸ் Junior Mathematician என்ற ஜர்னலைத் தொடங்கி நடத்தி வந்தார். (நான் இந்த ஜர்னலை இதுவரை பார்த்ததில்லை!). பி.கே.எஸ்ஸுக்குப் பிறகு இப்பொழுது இந்த ஜர்னலை நடத்திவருவது N.பாலசுப்ரமணியன். இவர் வேறு யாருமல்ல! ராயர் காபி கிளப்பில் 'நகுபோலியன்' என்ற பெயரில் புகுந்து விளையாடும் ஹ்யூமரிஸ்ட்! இந்த ஜர்னலின் பழைய இதழ்களைக் கொஞ்சம் வாங்கிப் படிக்க வேண்டும்.

நகுபோலியனும் நேற்று நன்றாகப் பேசினார்.

3. பி.கே.எஸ் சிறுவர்களுக்கு எளிமையாக கணக்கு சொல்லிக்கொடுப்பது பற்றி சில வழிமுறைகளை உருவாக்கியிருக்கிறார். இந்த வழிமுறைகளைத் தொகுத்து சில புத்தகங்களை எழுதியுள்ளார். இணையத்தில் தேடியதில் இந்தத் தளத்திலிருந்து சில புத்தகங்களின் முழு PDF வடிவம் கிடைக்கிறது. அவை கீழே:

Romping in Numberland
Number Fun with a Calendar
Math Club Activities

அவர் இறக்கும் தருவாயில் எழுதிவந்த ஒரு புத்தகத்தை நேற்று வெளியிட்டனர். அவ்வை நடராஜன் பேசும்போது அந்தப் புத்தகத்தின் தலைப்பு 'கனிந்த வயதினருக்குக் களிப்பூட்டும் கணக்கு' என்று சொன்னார். 'தி ஹிந்து'வில் 'Math Fun For Senior Citizens' என்று போட்டிருந்தார்கள். அதனால் புத்தகம் தமிழிலா ஆங்கிலத்திலா என்று தெரியவில்லை.

4. ஸ்ரீனிவாச ராமானுஜத்தின் எழுத்துகளை ஒழுங்குபடுத்தி சேகரித்து இரண்டு வால்யூம்களை உருவாக்கினார். அவை

(அ) Ramanujan: Letters and Reminiscences
(ஆ) Ramanujan: an Inspiration

இவையிரண்டும்தான் ராமானுஜத்தின் கணிதங்களை வைத்து உருவாக்கப்பட்ட முதல் இரண்டு புத்தகங்கள். அதன்பின்னர்தான் Bruce C. Berndt கொண்டுவந்துள்ள ஐந்து வால்யூம் புத்தகங்கள் வெளிவந்தன. இன்று உலகெங்கும் ராமானுஜத்தின் கண்டுபிடிப்புகளை வைத்து Number Theory ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.

5. சென்னை ராயபுரத்தில் உள்ள ராமானுஜன் கண்காட்சியகம். இதைப்பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

5 comments:

  1. Hi Badri
    Thank you very much for the three wonderful Links.
    with best
    CT

    ReplyDelete
  2. Not related to PKS still, Arvind Gupta has done wonderful work on toys, particularly making toys with easily available things.One/(2?) of his books has been translated and
    published in Tamil by Pooulakin
    Nanbargal.It may be out of print
    now.

    ReplyDelete
  3. Congratulations Badri...!
    on winning the Bhashaindia.com award

    http://www.bhashaindia.com/contests/iba/Winners.aspx

    ReplyDelete
  4. Badri,

    I happened to see this only now. Very useful and informative post. Many thanks for this.

    ReplyDelete
  5. he was talanted in maths.but he did not have a humanitarian in nature.

    ReplyDelete