இலங்கை அரசும் போராளிகளும் மோதிக்கொள்ளும் நிலை உள்ளது. அப்பாவி மக்கள் கொல்லப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. தமிழகத்துக்கு அகதிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்தியா - இலங்கை வாழ் மக்களின் மனதைப் பாதிக்கும் அளவுக்கு இச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன.இந்தத் தீர்மானம் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அமைதிக்கு வழிகாண இந்திய அரசு ஆவன செய்திட வேண்டும்.
தமிழக மீனவர்களுக்கு இலங்கை ராணுவத்தினரால் தொடர்ந்து இழைக்கப்படும் கொடுமைகள் நிறுத்தப்படவும் அந்த மீனவர்களுக்கு உயிர், உடைமை, உரிமைக்கு உத்திரவாதம் அளிக்கப்படவும் இந்திய, இலங்கை அரசுகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தொடர்ந்து முதல்வர் கருணாநிதி மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். மன்மோகன் சிங் தம் சார்பில் கருணாநிதியுடன் பேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை அனுப்பலாம் என்று தெரிய வருகிறது.
இதற்கிடையில் இந்த விவகாரத்தில் இதுவரை கருத்து சொல்லாத அஇஅதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் "இலங்கையில் ராணுவமும் விடுதலைப் புலிகளும் நடத்திவரும் தாக்குதலால் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதும் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருவதும் தமிழக மக்களுக்கு மிகுந்த மனவேதனையை அளித்து வருகிறது. இத்தகைய சூழலில் இலங்கையில் அமைதி நிலை திரும்ப இந்திய அரசு உரிய முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா நாளை (ஜூன் 22) இந்திய அரசுடன் பேச வருகிறார்.
முதல்வரை பாராட்டுகிறேன்...
ReplyDeleteநம்பிக்கை எற்படுத்தும் நிகழ்வுகள் .
ReplyDeleteநன்றி பத்ரி.
முயற்சி எடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
ReplyDeleteகலைஞர் அவர்களின் தற்போதைய செயற்பாடு வரவேற்கப்படக்கூடியதுதான். ஆனால் அவர் இன்னும் சிலவற்றை தெளிவாக சொல்லியிருக்கலாம். அவர் உண்மையில் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இல்லாதவர் என்றால் அவருடைய செயற்பாடு சரியானதே. ஆனால் கலைஞர் உண்மையில் ஈழத்தமிழர்மீது தமிழர் என்ற அடிப்படையிலாவது அக்கறை உடையவர்தான். ஆனால் தனது கருத்துக்களை சொல்வதற்கு தயங்குகிறார் என்றே கருதவேண்டியுள்ளது.
ReplyDeleteஇது நிச்சயமாக தமிழர்கள் மேல்வைக்கும் கரிசனை புலிகளுக்கு மேல் வைக்கும் கரிசனையாக பார்க்கப்படும் என்ற உள்ளுணர்வால் மட்டும் அல்ல. ஒரு அப்பாவிமக்கள் மீதான தாக்குதலை கண்டிப்பதற்கு ஏன் இவ்வளவு துரரம் கடினப்படுகிறார் என்பதை புரிந்துகொள்வது கடினமாகவே இருக்கிறது.
கலைஞர்கள் அவர்கள் தன்மனத்தில் உள்ளதை தைரியமாக வெளிப்படுத்தவேண்டும். அதுவே ஒரு தலைவனுக்கு அடையாளம்.