Tuesday, February 03, 2004

கிரிக்கெட் பயிற்சி மையங்கள் பற்றிய தொ.கா நிகழ்ச்சி

நானும், நிகழ்ச்சி வழங்கும் செல்வியும்
இன்று சென்னைத் தொலைக்காட்சி பொதிகை சானலில் 12.30 மணிக்கு வரும் 'தெரியுமா உங்களுக்கு' என்னும் நிகழ்ச்சியில் என்னைக் கூப்பிட்டிருந்தார்கள். இது ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று வரும் நிகழ்ச்சி. ஒவ்வொரு துறையிலும் உள்ள வல்லுனர்களிடமிருந்து நிகழ்ச்சி வழங்குபவர் நேரிடையாகவும், பொதுமக்கள் தொலைபேசி மூலமும் கேள்விகள் கேட்டு விடைகளைப் பெறும் நிகழ்ச்சி.

கிரிக்கெட் விளையாட்டில் பணம் அதிகமாகப் புழங்குகிறது. தொலைக்காட்சியில் கிரிக்கெட் ஆட்டங்கள் தொடர்ச்சியாகக் காண்பிக்கப்படுகின்றன. இந்திய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கிரிக்கெட்டில் பணத்தைக் கொட்டுகின்றனர். இதனால் இப்பொழுதெல்லாம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாட்டை நன்றாகப் பயின்று அதனையே ஜீவாதாரமாகத் தேர்ந்தெடுப்பதை வரவேற்கவும் செய்கின்றனர். என் தந்தை நான் பத்தாம் வகுப்பில் படிக்கும்போது கிரிக்கெட் என்று வேளியே சென்றால் காலை உடைத்து விடுவேன் என்று சொன்னார்! இன்று நான் பல பெற்றோர்களுக்கு அவர்கள் பிள்ளைகளை கிரிக்கெட்டில் சேர்த்து விடுவது எப்படி என்று விளக்குவதைப் பற்றி என்ன நினைத்திருப்பார்?

இந்த நிகழ்ச்சி பற்றிய என் பதிவு அடுத்து.

No comments:

Post a Comment