Friday, February 06, 2004

मै उन्को pardon देता हू!

இன்று காலை காரில் வரும்போது முஷாரஃப் வானொலியில் மிகவும் பெருந்தன்மையோடு அப்துல் காதீர் கானுக்கு 'மன்னிப்பு' வழங்கிய ஒலித்துண்டைக் கேட்டேன். அப்துல் காதீர் கான் பாகிஸ்தானின் அணுசக்தித்துறையில் வேலை செய்தவர். பாகிஸ்தான் நூக்ளியர் குண்டு உருவாக்கியவர். பாகிஸ்தான் அணு ஆயுதத் தந்தை என்று போற்றப்படுபவர். முஷாரஃபால் AQ என்று அன்போடு அழைக்கப்படுபவர். தெருவில் மசால் வடை விற்பது போல் கூவிக்கூவி அழைத்து லிபியா, வடகொரியா, இரான் ஆகிய நாடுகளுக்கு நூக்ளியர் தொழில்நுட்பத்தை விற்றிருக்கிறார். எக்கச்சக்கப் பணமும் செய்துள்ளார்.

நேற்றைக்கு முந்தைய நாள், குற்றத்தை ஒப்புக்கொண்டாராம். அவருக்கு மன்னிப்பு வழங்கவேண்டுமென்று கேபினட்டைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். கேபினட் 'அப்படியே ஆகுக' என்று முடிவு செய்துள்ளது. முஷாரஃப் அன்போடு அதனை வரவேற்று மன்னிப்பும் கொடுத்து விட்டார். தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைக் கூறி (தமிழில்: மை உன்கோ pardon தேதா ஹூ!) பாவங்களைத் துடைத்து விட்டார்.

அமெரிக்கா பராக்கு பார்த்துக் கொண்டிருக்கிறது சந்தோஷமாக.

அதுமட்டுமல்ல. கண்டிப்பாக எந்த வெளிநாட்டு சக்திக்கும் (முக்கியமாக IAEA) தன் நாட்டிலிருக்கும் எந்த தஸ்தாவேஜுகளையும் கொடுக்க மாட்டேன், ஆனால் IAEA வுக்குத் தேவையான ஒத்துழைப்புகளைத் தருவேன் என்று திட்டவட்டமாகச் சொன்னார் முஷாரஃப். அதாவது ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேன் என்கிறார். (Documents எதையும் தர மாட்டேன் என்றால் அது எந்த வகை ஒத்துழைப்பு?)

முஷாரஃப் பற்றிய வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையைப் படிக்கவும். ஜார்ஜ் புஷ், அமெரிக்கா சண்டியர்கள் இப்பொழுது என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

No comments:

Post a Comment