நேற்று வீடு வந்து சேர்கையில் இரவு பத்து மணி. முந்தைய த்ரிஷா பதிவு பார்த்திருப்பீர்கள். அது எதற்காக செய்யப்பட்டது என்றும் அனைவருக்கும் புரிந்திருக்கும்! மாணவர்களை இப்படி பள்ளி ஆசிரியர்கள் ஊக்குவிக்காததால்தான் அவர்களும் படிக்கமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள்!
கிட்டத்தட்ட மூன்று மணிநேரம், நூறு மாணவர்கள் சின்ன அறையில் இடுக்கிப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து இணையத்தின் சாத்தியங்கள், தமிழில் எழுதுவது எப்படி என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மொத்தம் அந்தக் கல்லூரியில் படிப்பவர்கள் 900 மாணவர்களே. இந்தக் கணினிப் பட்டறை நடந்துகொண்டிருந்தபோது கவிதைப் பட்டறையும் இணையாக வேறிடத்தில் நடந்துகொண்டிருந்தது.
இன்று காலை ஐராவதம் மகாதேவனின் ஒரு பேச்சுக்குப் போயிருந்தேன். மதியம் முடிந்தவரை எழுத முயற்சிக்கிறேன்.
Sunday, February 29, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment