ஜெயலலிதா கோயில்களில் விலங்குகளை பலியிடக் கூடாது என்னும் 1950களில் போட்ட சட்டத்தைத் தூசு தட்டியெடுத்து வைத்தார்.
உமா பாரதி அம்மையார் மத்தியப் பிரதேசத்தில் மூன்று நகரங்களைப் புனித நகரங்கள் என்று அறிவித்து இந்த நகரங்களில் மது, இறைச்சி உணவு, முட்டைகள் ஆகியவைகளை விற்கவே கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளார். இந்தப் புனித நகரங்கள் மஹேஷ்வர், அமர்கண்டக், உஜ்ஜைனி ஆகியவையாம்.
சாமியார்களை நாட்டை ஆளவைத்ததன் விளைவு இது.
அடுத்து இந்த நகரங்களில் மனிதர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது என்று ஆணை பிறப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வெங்காயம், பூண்டு முதலியவைகளை சாப்பிடக் கூடாது, ஏகாதசியன்று விரதம் இருக்க வேண்டும் என்று அடுத்த ஆணை வரலாம்.
சட்டப்படி இதுபோன்ற முட்டாள்தனமான ஆணைகள் செல்லுபடியாகுமா? இன்னமும் ஏன் யாரும் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லவில்லை?
ஆலயம்
1 day ago
No comments:
Post a Comment