Friday, February 06, 2004

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் தணிக்கை தேவையா?

அமெரிக்காவில் சூப்பர் பவல் (Super Bowl) என்பது இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் விளையாடுவதற்கு ஒப்பாகும். இந்த வருடப்போட்டி பெப்ரவரி 1 அன்று நடைபெற்றது. ஆட்டத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது குறைவே.

போட்டி நேரடியாக CBS தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. ஆட்டத்தில் இடைவேளையின்போது, MTV யினால் தயாரிக்கப்பட்ட ஒரு ஆட்டம்/பாட்டு நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. [CBC, MTV இரண்டுமே வயாகாம் என்னும் நிறுவனத்தின் தொலைக்காட்சிகள்.] அதில் ஜேனட் ஜாக்சன், ஜஸ்டின் டிம்பர்லேக் இருவரும் ஆடிப்பாடும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது ஜஸ்டின் டிம்பர்லேக், ஜேனட் ஜாக்சனின் மேலாடையை உருவிவிட்டிருக்கிறார். ஜேனட்டின் வலது மார்பகம் ஒரு வினாடி வெட்ட வெளிச்சமாக அரங்கிலும், தொலைக்காட்சியிலும் பார்த்துகொண்டிருக்கும் 135 மில்லியன் மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. [இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண விரும்புபவர்கள் செல்ல வேண்டிய இணையத்தளம் இங்கே!] மேற்படி நிகழ்ச்சிக்குப்பின் மனம் வருந்திய(!!) இரண்டு தொலைக்காட்சிகளும் வெளியிட்டுள்ள அறிக்கைகள் இங்கே: சிபிஎஸ் அறிக்கை, எம்டிவி அறிக்கை.

இந்த அம்மணி இதற்கும் மேலே திரைப்படங்களில் காட்டியுள்ளார். ஆனால் அவையெல்லாம் R ரேட்டிங் பெற்ற படங்கள். இப்படி திடீரென்று எதிர்பாராத விதமாக குழந்தைகளும் பார்க்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவில் இப்படி காட்சி கொடுப்பது அமெரிக்காவையே கதிகலங்க வைத்துள்ளது.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். நம்மூர்த் தொலைக்காட்சிகளில் இப்படிப்பட்ட ஆடையவிழ்ப்பு நிகழ்ச்சி நடக்க சாத்தியக்கூறுகள் குறைவு. ஆனால் நம் சானல்களில் தொலைபேசி மூலம் கதைக்கும் நிகழ்ச்சிகள் பல வருகின்றன. அதில் எவ்வகையான தணிக்கை முறைகள், time delay ஆகியவை உள்ளன என்று தெரியவில்லை. ஒரு நேயர் தொலைபேசியில் 'பெப்சி உங்கள் சாய்ஸ்' உமாவிடம் பேச ஆரம்பிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்...

நேயர்: ஹல்லோ! உங்ககிட்ட பேசனும்னு ரொம்ப நாளா துடிச்சுகிட்டு இருக்கேன் மேடம்...
உமா: அப்படியா, கொஞ்சம் டீவீ வால்யூம கொறச்சுக்குங்க சார்
நேயர்: ஹல்லோ, ஹல்லோ, சரிங்க, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மேடம்...
உமா: (வழியும் சிரிப்புடன்), சொல்லுங்க சார், நீங்க என்ன வொர்க் பண்ணிகிட்டு இருக்கீங்க
நேயர்: நானா, நா சும்மா வேலவெட்டி இல்லாம தெருசுத்திகிட்டு இருக்கேங்க
உமா: ஐயோ, என்ன இப்படி சொல்றீங்க?
நேயர்: (திடீரென) ரஜினியை 'சேற்றில் புரளும் பன்றி' என்று சொன்ன இராமதாஸ் ஒரு "தே.... பை.... புறப்படுதுடா படையப்பா படை, பாமகவுக்கு இருக்குடா பாடை"
நிகழ்ச்சி தயாரிப்பாளர்: (தலையில் துண்டைப் போட்டுக்கொண்டே) "கட்!"

தமிழ்கூறும் நல்லுலகில் இருக்கும் அனைவரும் இந்த சுவாரசியமான உரையாடலைக் கேட்கின்றனர். அடுத்து என்ன ஆகும்?

பொதிகையில் கிரிக்கெட் நிகழ்ச்சியில் நான் பங்குபெறும்போது எனக்கும் இதே பயம் இருந்தது. திடீரென்று ஒருவர் தொலைபேசியில் "டேய், நீயெல்லாம் பெரிய பருப்பாடா? ஒன்ன எவண்டா இங்க வந்து உக்காரச் சொன்னான், சோமாறிக் கய்தே" என்று வுட ஆரம்பித்தால், எப்படி இருக்கும் என்று.

No comments:

Post a Comment