சில நாட்களுக்கு முன் சாமியார் உமா பாரதி, மஹேஷ்வர், அமர் கண்டக், உஜ்ஜைனின் ஒருசில பகுதிகளில் இறைச்சி, மீன் விற்கக் கூடாது என்று சட்டம் கொண்டுவந்ததைப் பற்றி எழுதியிருந்தேன்.
இந்த சட்டத்தை நீதிமன்றங்கள் எப்படிப் பார்க்கும் என்று கேள்வி எழுப்பியிருந்தேன்.
இன்று விடை கிடைத்துள்ளது.
ரிஷிகேஷில் (உத்திரப் பிரதேசம் இம்மாதிரியான தடை ஏற்கனவே உள்ளதாம். அத்துடன் முட்டையும் விற்கக் கூடாது என்று தடை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்து வழக்கு உயர் நீதிமன்றம் போய், இப்பொழுது உச்ச நீதிமன்றத்திலும் இம்மாதிரியான தடைகள் இருக்கலாம் என்று முடிவாகியுள்ளது.
கேவலமாக இருக்கிறது. மதச்சார்பில்லாத, அனைத்து மதங்களையும், மக்களின் வாழ்க்கை முறைகளையும் மதிக்குமாறு இயற்றப்பட்டுள்ள அரசியல் நிர்ணயச் சட்டத்தைக் கட்டிக் காக்கும் உச்ச நீதிமன்றம் எப்படி இம்மாதிரியான தீர்ப்பை வழங்க முடியும் என்று குழப்பமாக உள்ளது.
ஹிந்து மதத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் பலரால் நாட்டின் பல நகரங்கள் புனிதத்தன்மை வாய்ந்தவை என்று கருதப்படுகிறது. அங்கெல்லாம் இதுபோன்ற நடவடிக்கை எடுத்தால் அந்த நகரங்களில், விரதம் இருக்கும் ஒருசில ஹிந்து சாதுக்களால் மட்டுமே வாழ்க்கை நடத்த முடியும்.
லிபரல் சிந்தனைகள் உடைய எல்லோரும் இந்த சட்டங்களைத் தீவிரமாக எதிர்க்க வேண்டும்.
Friday, March 12, 2004
Subscribe to:
Post Comments (Atom)
ஆம் புனித தலங்களில் சைவ உணர்வும் சைவ உணவை பயன் படுத்துபவர்கள் மட்டும் இருந்தால் போதும்
ReplyDelete