கடைசிப் பந்து வரை சென்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 349 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. விரேந்தர் சேவாக் 79 (57 பந்துகள்), ராஹுல் திராவிட் 99 (104 பந்துகள்) மிக அருமையாக விளையாடினர்.
இத்தனை ஓட்டங்கள் எடுத்திருந்தால், நிச்சயமாக ஜெயிக்க முடியும் என்றுதான் எந்த அணியும் நினைக்கும். ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சு எப்படிப்பட்டது என்றுதான் நமக்குத் தெரியுமே? பாகிஸ்தான் கடைசியில் 50 ஓவர்களில் 344 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்தது. கடைசிப் பந்தில் மோயின் கான் ஒரு சிக்ஸர் அடித்தால் ஜெயிக்கலாம் என்று இருக்கையில் ஆஷீஸ் நேஹ்ரா வீசிய ஃபுல்-டாஸை ஜாகீர் கான் கேட்ச் பிடிக்க, இந்தியா வெற்(று)றி பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு இன்ஸமாம்-உல்-ஹக் 122 (104 பந்துகள்), யூசுஃப் யௌஹானா 73 (67 பந்துகள்) அடித்து, ஒரு சமயத்தில் பாகிஸ்தானை ஜெயிக்க வைத்து விடுவார்களோ என்றிருந்தது.
இப்பொழுதைக்கு சந்தோஷப்படுவோம். நாளை நமது பந்து வீச்சைப் பற்றி கொஞ்சம் கவலைப்படுவோம்.
ராமாயணத்தில் ரகசியங்கள் - ஒரு உபன்யாச அனுபவம்.
23 minutes ago
No comments:
Post a Comment