(இன்றைய எகனாமிக் டைம்ஸ் வழியாக) இரண்டு நியூயார்க் சுற்றுலா நிறுவனங்கள் (travel operators) மீது விபச்சார சுற்றுலாக்களை ஏற்பாடு செய்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிஎன்என் செய்தி இதோ.
ஈக்வாலிட்டி நௌ (Equality Now) என்னும் பெண்கள் உரிமை அமைப்பு விடாது தொடர்ந்து வந்த போராட்டங்களின் மூலம் [சுட்டி 1 | சுட்டி 2] நியூயார்க் அட்டர்னி ஜெனரல் எலியட் ஸ்பிட்ஸர் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார். ஹவாயியில் இதுபோன்ற குற்றங்களுக்கு ஐந்து வருடம் சிறைத்தண்டனை தருமாறு சட்டம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாம்.
நான் போனவருடன் தாய்லாந்து சென்றிருந்தபோது இதுதான் கண்ணில் பட்டது. வெளிநாட்டிலிருந்து வரும் ஆடவர்கள் பலர் செக்ஸுக்காகவே தாய்லாந்து வருவது போல் இருந்தது. இதைப்பற்றி திசைகளில் வந்த என்னுடைய பயணக்கட்டுரையிலும் எழுதியிருந்தேன்.
தாய்லாந்து அரசாங்கம் இந்த விஷயத்தைப் பற்றி துளிக்கூட கவலைப்படுவதாகவே தெரியவில்லை. மற்ற நாடுகள் அங்கொன்றும் ஒங்கொன்றுமாக சட்டம் இயற்றி, வழக்குத் தொடுப்பதனால் ஒரு நன்மையும் கிடையாது.
இதுபோன்ற செக்ஸ் டூரிஸம் கொடுமைகள் இந்தியாவில் நடக்காமல் இருக்க இப்பொழுதே இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நற்றுணை கலந்துரையாடல்: இரா. முருகன்
10 hours ago
No comments:
Post a Comment